மதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்றும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக் கழகங்கள் ஆகிய அனைத்து அமைப்புகள் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கழகத் தலைவர் கலைஞர் அறிவிப்பை மீறி- கட்டுப்பாட்டைக் குலைக்கும் வகையில் நிர்வாகிகள் சிலர் செயற்பட்டு வருவதால், மதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்ரும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக் கழகங்கள் ஆகிய அமைப்புகள் முழுமையாக கலைக்கப்படுகின்றன.
மதுரை மாவட்டக் கழகத்திற்கு முறைப்படி அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும்வரை, தற்காலிகமாக பொறுப்புக் குழு நியமிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்காலிக பொறுப்புக் குழுத் தலைவராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற உறுப்பினர்கள் வி.வேலுச்சாமி, பெ.குழந்தைவேலு, எம்.ஜெயராம், பாக்யநாதன், மு.சேதுராமலிங்கம், சி.சின்னம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்