திங்கள், 30 டிசம்பர், 2013

படேல் சிலைக்கு இரும்பு சேகரிக்க 1,000 லாரிகள்

ஆமதாபாத்:குஜராத்தில், பிரமாண்ட, சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு தேவையான, மண், இரும்பை சேகரிக்க, 1,000 லாரிகள், நேற்று முன்தினம், ஆமதாபாத்திலிருந்து, நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன.

பா.ஜ., பிரதமர் வேட்பாளர்:அந்த லாரிகளை, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கொடியசைத்து அனுப்பி வைத்தார்.  இருக்கும் சிலைகள் மீது எச்சம் போடும் காக்கைகள் இதிலும் உட்கார்ந்து .. எச்சாம்தான் போடும்
நாட்டின், முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரத்திற்கு முன், சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை ஒன்றுபடுத்தியவருமான, சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத்தில் சிலை அமைக்க, நரேந்திர மோடி முடிவு செய்தார்.நர்மதா நதிக்கரையில், சர்தார் சரோவர் அணை அருகே, இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. 'ஒற்றுமை சிலை' என்ற பெயரில், 187 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த சிலைக்கான, இரும்பு மற்றும் மண், நாடு முழுவதும் சேகரிக்கப்பட உள்ளது.

பழைய கலப்பை, கொழு:அக்டோபர், 31ம் தேதி, படேல் சிலைக்கு அடிக்கல் நாட்டிய மோடி, இரும்பு மற்றும் மண் சேகரிப்பதற்காக, நேற்று முன்தினம், 1,000 லாரிகளை, நாடு முழுவதும் அனுப்பி வைத்தார்.கிராமங்களில், விவசாயிகள் பயன்படுத்திய, இரும்பால் ஆன, பழைய, கலப்பை, கொழு போன்றவற்றையும், அந்தந்த பகுதி மண்ணை சேகரிக்கவும், அந்த லாரிகளில், மூன்று லட்சம், வெற்று பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், இரும்பு மற்றும் மண் சேகரிக்கப்படும்.சர்தார் படேல் சிலை அமைப்பு குறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும், 1.75 லட்சம் பள்ளிகளில், மாணவர்களுக்கு, கட்டுரை எழுதும் போட்டியும் நடத்தப்படுகிறது. dinamalar.com 

கருத்துகள் இல்லை: