திங்கள், 30 டிசம்பர், 2013

சிதம்பரம் தெற்கு வாயிலை திறக்கக் கோரி முற்றுகை: பெரியார் கழகத்தினர் 115 பேர் கைது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை திறக்கக் கோரியும், கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கைப்பற்ற வலி்யுறுத்தி சிதம்பரத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 115 பேரை நகர போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் காந்திசிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் நடராஜர் கோயில் தெற்குவாயிலை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் அவர்களை வழிமறித்து 3 பெண்கள் உள்ளிட்ட 115 பேரை கைது செய்தார்

கருத்துகள் இல்லை: