சனி, 24 ஆகஸ்ட், 2013

இடைத் தேர்தல்: (thivya spandana) குத்து ரம்யா முன்னிலை, அனிதாவுக்கு பின்னடைவு

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா, பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெங்களூரு புறநகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சுரேஷ் நிறுத்தப்பட்டார். மாண்டியா தொகுதியில் காங்‌கிரஸ் வேட்பாளராக திரைப்பட நடிகை குத்து ரம்யாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் புட்டராஜூ போட்டியிட்டனர். கடந்த 21-ந் தேதி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளிலுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: