புதன், 21 ஆகஸ்ட், 2013

ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வாதியாக திமுகவின் கோரிக்கை ஏற்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார். தற்போது முதல்வர் ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்கள் வாதம் நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பவானி சிங் வாதாடி வருகிறார். இவர் அண்மையில் பொறுப்பேற்று இருப்பதால், வாதத்தின்போது, இவருக்கு உதவும் வகையில், தன்னை அரசுத் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று, திமுக பொதுச்செயலர் அன்பழகன் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி இன்று ஏற்றுக் கொண்டார்

கருத்துகள் இல்லை: