பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் தலைமை கொறடா கூறும்போது, “கட்சியின் பாராளுமன்றக் குழு நாளை காலை கூடி, உணவு பாதுகாப்பு மசோதா தொடாபாக முடிவு செய்வார்கள்” என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. விவசாயிகள் நலனை பாதுகாக்கவும், விளைபொருட்களுக்கு லாபம் கிடைப்பதற்கும் அரசு வாக்குறுதி அளித்தால் உணவு பாதுகாப்பு மசோதாவை தனது கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறி வருகிறார்.
இதேபோல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கு மற்றொரு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் மசோதாவை ஆதரிக்கிறது. ஆனால், அவசர சட்டம் கொண்டு வந்து அதை அமல்படுத்துவதை அக்கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக