
2008 ம் ஆண்டு முதல் 3 வருடங்களில் மேற்கண்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
எனவே ரித்தீஷ் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110- வது விதியின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு 2013 ஆக.5 ல் மனு கொடுத்தேன். ஆனால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதே போன்று பமரக்குடி தாலுகா பாண்டியூரைச் சேர்நத சாமிதுரை தாக்கல் செய்த மனுவி்ல, 2013 ஜூன் 27-ம் தேதி பரமக்குடியில் திமுக மாவட்ட செயலர் சுப.தங்கவேலன் வீ்ட்டு முன்பு நான் நின்று, திமுக பொருளாளர் மு,க,ஸ்டாலின் வரவேற்பு தொடர்பாக கொண்டிருந்த போது 6 பேர் ஆயுதங்களுடன் வந்து தாக்கினர். ரித்தீஷ் எம்பி தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக புகார் கூறினேன்.
ஆனால் பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர், ரித்தீஷ் பெயரை வழக்கில் சேர்க்கவில்லை. எனவே இந்த வழக்கில் ரித்தீஷ் பெயரை சேர்க்க பரமக்குடி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக