செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

P.சிதம்பரம்: சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்!


  • சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்!
  • சமுதாயத்தின் தலை மகன்களில் ஒருவர் பன்னீர்செல்வம்
  • இடஒதுக்கீட்டைத் தடுக்க சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள்
    அவற்றையும் சந்தித்து முன்னேற வழி வகுப்போம்!
    சர். ஏ.டி. பன்னீர்செல்வம் சிலையைத் திறந்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆற்றிய உரை

    நீடாமங்கலம் ஆக.19- சமு தாயப் புரட்சியாளர்களில் முதன் மையானவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். இடஒதுக்கீட்டுப் பாதையில்  குறுக்கிட்டுச் சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள். அவற்றையும் சந்தித்து சமூகநீதியை வென் றெடுப்போம் என்றார். நீடாமங் கலத்தையடுத்த வையகளத்தூரில் நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது (17.8.2013).
    சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் முதலிடம் வகிக்கிறார்
    ஆண்டொன்று போனால், வய தொன்று போகும் என்று சொல் வார்கள், அதேபோலத்தான், ஆண் டொன்று போனால், பழைய நினை வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். நம்முடைய வரலாறு நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது.
    அந்த வரலாற்றை உருவாக்கி யவர்களுடைய அற்புதமான செயல் கள் நம்முடைய நெஞ்சைவிட்டு அகலக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விழாக்கள் நடைபெறு கின்றன. அந்த வகையிலே, சுதந்திரப் போராட்டக் காலத்தில், அரசியல் விடுதலைக்கு மட்டும் போராடாமல், சமுதாய விடுதலைக்கும் ஒரு போராட்டம் வேண்டும் என்று ஒரு இயக்கம் தமிழகத்திலே உருவாகியது.
    அந்த இயக்கத்தினுடைய தனிப் பெரும் தலைவர் தந்தை பெரியார் என்பதிலே யாருக்கும் கருத்து வேறு பாடு இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், அகில இந்திய அளவிலே, விரல்விட்டு எண்ணக் கூடிய சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் அவர்கள் முதலிடம் வகிக்கிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. கரும்பு தின்ன கூலி கேட்பார்களா?
    அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, அந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமுதாய விடுதலைக்காகப் போராடிய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். அவருடைய 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடு கிறோம்; நீங்களும் வாருங்கள் என்று அழைத்தால், கரும்பு தின்ன கூலியை யாராவது கேட்பார்களா? ஆகவே தான் மகிழ்ச்சியோடு நான் வந்திருக் கிறேன். என்னுடைய இயக்கத் தோழர் கள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக, அருமை சகோதரர் திரு.திருநாவுக்க ரசர் அவர்களும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களும் வந்திருக்கிறார்கள்.
    திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று வழக்கமாக ஒரு கோட்டைக் கிழித்து, இந்தக் கோட் டிற்கு ஒருபுறம் இருப்பவர்கள் திரா விடர்கள்; அந்தப் பக்கம் இருப்ப வர்கள் தேசியம் என்று பிளவுபட்டோ அல்லது பிளக்கப்பட்டோ பேசுவ தும், எழுதுவதும் தமிழகத்தில் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. ஆனால், வரலாறு அப்படி சொல்லவில்லை. வரலாறு என்ன சொல்கிறது? நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி என்று சொல்கிறது. திராவி டத்திற்கும், தேசியத்திற்கும் பகை, போட்டி, பொறாமை என்று எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடையாது. நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி இருந்தது உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அன்றைய காங்கிரசு கட்சி, அரசியல் விடுதலை முக்கியம் என்று போரா டியது. அன்றைய நீதிக்கட்சி சமுதாயப் புரட்சி முக்கியம் என்று போராடியது.
    ஒரு மனிதனைப் பார்த்து, இடது கண் முக்கியமா? வலது கண் முக் கியமா? என்று யாராவது கேட்டால், கேட்பவன்தான் முட்டாள். இன்று அந்தப் போராட்டங்கள் எல்லாம் முற்றுப் பெற்று, ஒரு நிலையை அடைந்து, சுதந்திர நாட்டிலே, ஓரளவு சமுதாயப் புரட்சி ஏற்பட்ட நாட்டிலே வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம், திரும்பிப் பார்க்கும் பொழுது, அரசியல் விடுதலை முக்கிய மான குறிக்கோளா? சமுதாயப் புரட்சி முக்கியமான குறிக்கோளா? என்று கேள் வியை கேட்பது கிடையாது; அப்படிக் கேட்டால், நாம்தான் முட்டாள். இரண் டும் தேவை; இரண்டும் முக்கியமாகும்.
    அந்த வகையில், அந்தக் காலத்திலே வாழ்ந்தவர்கள், அவரவர்களுக்கு எது முக்கியமாகப்பட்டதோ, சிலருக்கு அரசியல் விடுதலை முக்கியம் என்று நினைத்தவர்கள், காங்கிரசு இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டனர்.
    சிலர் இல்லை, இல்லை, அரசியல் விடுதலை மட்டும் கிடைத்தால் போதாது. சமுதாயத்திலே ஒரு புரட்சி ஏற்பட வேண்டும்; சமுதாயத்திலே ஒரு மாறுதல் ஏற்படவேண்டும்; சமுதாயத்திலே ஜாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் இருக் கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண் டும்; அதுதான் முக்கியம் என்று போராடி யவர்கள் தங்களை நீதிக்கட்சியிலே இணைத்துக் கொண்டார்கள்.
    ஆக, நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி நடந்ததேயொழிய, திராவிட இயக்கத்திற்கும், தேசிய இயக் கத்திற்கும் போட்டி, பொறாமை, பகை என்பது கிடையாது என்பதை நான் வலி யுறுத்திச் சொல்லக் கடமைப்பட் டுள்ளேன்.
    இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை!

    இன்னும் சொல்லப்போனால், ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொல்கிறார், அரசியலிலே எங்களைப் பிற்போக் காளர்கள் என்று சிலர் சாடுகிறார்கள்? நாங்கள் எந்த வகையில் பிற்போக் காளர்கள். அரசியல் துறையில் காங்கிரசுக் காரர்கள் ஆங்கிலேயர்கள் அந்நியர்கள்; அவர்கள் இந்நாட்டைவிட்டு விரட்டப் படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதனை வேண்டாம் என்றா சொல்கிறோம்? காங்கிரசு பூரண சுயாட்சி வேண்டும் என்று சொன்னால், நாங்கள் கூடாது; கால் சுயாட்சி, அரை சுயாட்சியா வேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுகாரர்கள் குடிமக்களுக்கு வரி போடக்கூடாது என்றால், நாங்கள் வரி போட்டுத்தான் ஆகவேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக்காரர்கள் மக்கள் எல்லாம் எழுத, படிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், இல்லை, இல்லை அது தப்பு, ஒரு ஜாதியினர் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிப்பது குற்றம் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக் காரர்கள் மக்கள் எல்லாம் கோவிலுக்குள் யாதொரு தடையுமின்றி நுழையலாம் என்று சொன்னால், நாங்கள் அதை தவறு என்று சொல்கிறோமா?
    காங்கிரசுக்காரர்கள் இந்த நாட்டில் வரி கொடுக்கும் சகல ஜாதி, மத வகுப்பு களுக்கும், நிர்வாகத்திலும், நீதியிலும்,
    பதவியிலும் சம உரிமை அளிக்கப்படவேண்டும்; அதற்குள்ள குறைகள் தகர்க்கப்படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதைக் கூடாது என்றா சொல்கிறோம் என்று இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்தினாரே ஒழிய, இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை.
    இன்னும் சொல்லப்போனால், இரண்டு இயக்கங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பல நேரங்களில், இரண்டு இயக்கங்களையும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு இயக்கங்களையும் நெருங்கி வரச் செய்கிறது. சில நேரங்களில் இரண்டு இரண்டு இயக்கங்களும் நெருங்கி வருகின்றன; சில நேரங்களில் இரண்டு இயக்கங்களும் விலகி நிற்கின்றன. ஆனால், விலகி நிற்கும் நேரத்தில், திராவிடத்திற்கும், தேசியத்திற்கும் பகை என்று யாரும் கருதக்கூடாது என்று நான் மெத்த அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
    படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!
    சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்பினை எல்லாம் இங்கே எடுத்துரைத்தார்கள். குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் பெரியவர் வீரமணி அவர்களும், அருமைச் சகோதரர் திருநாவுக்கரசு அவர்களும் பல வரலாற்றுக் குறிப்புகளைச் சொன்னார்கள், அருமைத் தம்பி ராஜேந்திரன் அவர்களும், டாக்டர் கனிமொழி அவர்களும் தங்களுடைய நேரடி அனுபவங்களையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். அவற்றையெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசமும் இல்லை. ஆனால், ஒன்றிரண்டு செய்திகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.
    முதல் செய்தி, அந்தக் காலத்திலேயே, சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தினுடைய தந்தையார் அவர்கள், தன்னுடைய மூன்று மகன்களையும் எப்படி வளர்த்தார்? எப்படி படிக்க வைத்தார்? அதிலிருந்து என்ன படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
    மூத்த மகன் பொறியாளர்; பணியாற்றச் சென்றது உத்தரப்பிரதேச மாநிலம்; இரண்டாவது மகன் மருத்துவர்; புகழ் பெற்ற மருத்துவர்; சென்னையில் கண் மருத்துவத்துறையில் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். மூன்றாவது மகன் வழக்கறிஞர்; சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களை அந்தக் காலத்திலேயே இங்கிலாந்திற்கு அனுப்பி, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
    கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை.
    ஆக, நான் சொல்வது, 20 ஆம் நூற்றாண்டு தொடக்கம்; 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், திருவாரூருக்கும், நீடாமங்கலத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒருவர், ரயில்வே துறையில் எழுத்தராகப் பணியாற்றியவர்; பிறகு கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். தன்னுடைய மூன்று மகன்களுக்கும் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி,, அன்று எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்பட்ட மூன்று முக்கிய துறைகளில், ஒன்று, மருத்துவத் துறை; இரண்டு, நீதித்துறை; மூன்று பொறியியல் துறை. இம்மூன்று துறைகளிலேயே மூன்று மகன்களையும் புகுத்தி, அதிலே அவர்களை தலைசிறந்த படிப்பாளிகளாக உருவாக்கி, தலை சிறந்த குடிமக்களாக உருவாக்கினார் என்றால், நூறாண்டுகள் கழித்தும், இன்னும் பல சமுதாயங் கள் கல்வியினுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லையே என நான் உண்மையாக வருத்தப்படுகிறேன். கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை. எல்லோருக்கும் அந்தக் உயர்ந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற் காகத்தான், இங்கே தொடர்ந்து வரும் அரசுகள் பல காரியங்களைச் செய்து வருகின்றன.
    பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ கத்திலே கல்வித் துறையிலே பெரிய புரட்சியினை ஏற்படுத்தினார்; மதிய உணவுத் திட்டம் வந்தது; சத்துணவுத் திட்டமாக உருவாகியது; பிறகு கல்விக் கடன் திட்டம் என்று ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி, இன்று 50 ஆயிரம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கல்விக் கடனாகப் பெறப்பட்டிருக் கிறது. கல்வியை சட்ட உரிமையாக்கி இருக்கிறோம்; எந்தக் குழந்தையும் பள்ளிக்குப் போகாமல் இருக்கக்கூடாது என்று பல வகையிலே நம்முடைய அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன.
    ஆனால், இன்னும் சில சமுதாயத்தினர் கல்வியினு டைய முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறார் களே என்பதற்காக நான் கவலைப்படுகிறேன், வருந்துகிறேன்; கல்வி முக்கியம் என்பதை சர்.ஏ.டி .பன்னீர்செல்வம் அவர்களுடைய தந்தையார் உருவாக்கிய அந்தப் பரம்பரையில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
    இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி  வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?
    இரண்டாவது செய்தி, கல்வி முக்கியம் என்றால், அந்தக் கல்வியினுடைய உண்மையான பயன் கிடைக்கவேண்டும் என்றால், எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். பள்ளிக் கூடங்களிலே, கல்லூரிகளிலே, குறிப்பாக, மருத்துவக் கல்லூரியிலே, பொறியியல் கல்லூரி யிலே, உயர் பட்டப் படிப்பு நிறுவனங்களிலே, இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி அந்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?
    ஒருபுறத்தில், நம்முடைய பிள்ளைகளை 10 ஆவது படிக்க வைத்து, 12 ஆம் வகுப்புவரை படிக்க வைக்கிறோம். கல்லூரி படிப்பையும் முடிக்கிறார்கள். ஆனால், உயர் படிப்புகளில், இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையில், இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்பவர்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் சிலர் இருக்கிறார்கள். நான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்கிறேன். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்பவர்கள், எல்லா வகையான வித்தைகளையும் கையாள்கிறார்கள். அய்யா வீரமணி அவர்கள் சொன்னார்கள், சில வங்கிகளில் நம்முடைய பிள்ளைகளுக்கு கல்விக் கடன் வழங்குவதில்லை என்று சொன்னார்கள். நான் அதற்காக வருத்தமடைகிறேன். அது ஒரு வித்தை; ஒரு லட்சத்திற்கும் மேல் வங்கிக் கிளைகள் உள்ளன; ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒரு அதிகாரி இருக்கிறார். நான் ஒரு லட்சம் அதிகாரிகளையும் கட்டி வைக்க முடியாது. ஆனால், ஒரு வங்கிக் கிளையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, கல்விக் கடன் கொடுப்பதில், உயர்ந்த ஜாதி, பிற்படுத் தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பேதம் பார்த்து, கல்விக் கடன் தந்தால், உயர்ந்த ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கவில்லை என்றால், இது நம்முடைய இட ஒதுக்கீடு கொள்கையை முறியடிப்பதற்கான ஒரு வித்தை; அதிலே ஒரு வித்தைதான் நீதிமன்றத்தை அணுகுவது.
    ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து...
    நாம் சட்டங்களை வடிக்கிறோம்; விதிகளைப் போடுகிறோம்; திடீரென்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து, நம்முடைய சட்டத்தை, நம்முடைய விதியை முனை மழுங்கச் செய்கிறது. அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) என்று மிகப்பெரிய உயர்கல்வி மருத்துவ நிறுவனம் ஒன்று டில்லியில் இருக்கிறது. அதில் தொடர்ந்து ஒரு வழக்கு; ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷா லிட்டி; அதாவது, எம்.பி.பி.எஸ்.,சை, எம்.டி.,யைத் தாண்டி ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷாலிட்டி. அதிலே இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்பது வழக்கு. இது ஒன்றும் புதிய வழக்கு அல்ல; ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குதான். அந்த வழக்கில்திடீரென்று ஒரு தீர்ப்பு வெளிவருகிறது.
    ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி
    அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது. ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அதாவது எம்.பி.பி.எஸ்., அதிலே அல்ல; அதைத் தாண்டி எம்.டி.,  அதிலே அல்ல; அதனையும் தாண்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிய துறைகளில், சாதாரணமாக இட ஒதுக்கீடு கூடாது என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது. அந்தத் தீர்ப்பு சரியா? இல்லையா? என்பதை நாம் விவாதிக்கலாம்.
    அந்தத் தீர்ப்பை சொன்னார்களே, அதோடு நிறுத்திக் கொள்ளலாம் அல்லவா! கேட்கப்பட்ட கேள்வி, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷா லிட்டியில் இட ஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? இதற்கு ஆம் என்றும் பதில் சொல்லலாம்; இல்லை என்றும் பதில் சொல்லாம்.
    மூன்று நீதிபதிகளிலே, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிலே இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னார்கள்; அந்தத் தீர்ப்பு அதோடு நின்றுவிடவில்லை.
    தீர்ப்பினுடைய கடைசி இரண்டு பத்திகளில், இந்த வழக்கு, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொறுத்த வழக்கு, இதில் நாங்கள் முன்னுதாரணத்தை வைத்து, முக்கோலை தீர்ப்பு சொல்லியிருக்கிறோம். ஆனால், பொறியியல் துறை, மருத்துவத் துறை இன்னும் பல துறைகளில் இட ஒதுக்கீட்டின் காரணமாக, தரம் குறைந்துவிடுகிறது என்று நாங்கள் கவலைப்பட்டு, இந்தத் தரக்குறைவை நிறுத்துவதற்காக அரசு வழிவகைகளைக் கண்டு, அதற்கான காரியங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறோம் என்று, தேவையில்லாமல், இரண்டு பத்திகளில் சொல்லியுள்ளார்கள். அதன் காரணமாக, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது.
    நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்;  கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்;
    அதனை அந்நீதிபதிகள் எழுதவேண்டிய அவசியமும் கிடையாது; அந்தக் கேள்வி எழவும் இல்லை; அப்படி எழுந்தால், அதற்கு ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து விட்டது. அந்த 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பின்படி, எல்லாக் கல்லூரிகளிலும், அரசு நடத்தக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், அரசு நிதியுதவி பெறக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. திடீரென்று இரண்டு பத்திகள், ஒரு 150 வார்த்தைகளை வைத்து, நாட்டிலே 10, 15 ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த ஒரு முன்னேற்றத் தினை, தடை போட்டு நிறுத்திவிடலாம் அல்லது முனை மழுங்கச் செய்துவிடலாம் என்று ஒரு தீர்ப்பு வந்தால், சிலருக்குக் கோபம் வருகிறது; சிலருக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்; ஆகவே கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்; ஆகவே வருத்தம்தான்பட முடியும்.
    அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.
    ஆகவே, இதற்கு ஒரு வழிவகை காணவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய அரசு தெளிவான முடிவை எடுத்திருக்கிறது. மீண்டும் நீதிமன்றத்தினை அணுகி, நீங்கள், உங்கள் தீர்ப்பின் பிற்பகுதியில் கூறியுள்ளவை தேவையற்ற வார்த்தைகள்; அந்த வார்த்தைகளை, அந்தத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும். அந்தத் தீர்ப்பு, எந்தக் கேள்வி எழுப்பப் பட்டதோ, அந்தக் கேள்விக்கு மட்டும்தான் நீங்கள் தீர்ப்பு அளிக்கவேண்டுமே தவிர, எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்பால், தேவையில்லாத ஒரு பொருளை எடுத்துக்கொண்டு, தேவையில்லாத ஒரு கருத்துக்களைச் சொல்லி, அரசின் நடவடிக்கை களை நீங்கள் தடை செய்தது தவறு; எனவே, அந்தப் பாராக்களை நீக்கவேண்டும் என்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவினை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய தீர்ப்பினை மறு ஆய்வு செய்து, நாம் விரும்பும் தீர்ப்பு வந்தால் நல்லது; வரவில்லை என்றால், அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.
    முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார்
    அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தினைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்; முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார். அந்த முதல் திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்று, சட்ட வல்லுநர்களைக் கலந்து, அதனை வடித்து, டில்லிக்கு எடுத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராசர். அந்த முதல் திருத்தத்தினை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் திருத்தத்தினை முன்மொழிந்து, அரசியல் சாசனத்தை முதன் முதலாகத் திருத்தியவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு.
    தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமரா சரும், பண்டிதர் ஜவகர்லால் நேரும், 1951 ஆம் ஆண்டு, சண்பகம் துரைராஜன் என்ற பெண் தொடர்ந்த வழக்கில் தரப்பட்ட தீர்ப்பினை முறியடிப்பதற்காகக் கொண்டு வந்த திருத்தத் தைப்போல, இப்போது, ஏறத்தாழ 62 ஆண்டு களுக்குப் பிறகு, இன்னொரு திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்றால், பரமபத விளையாட்டா நாம் விளையாடிக் கொண்டிருக் கிறோம்? 62 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் சாசனத்தைத் திருத்தி, இந்த திசையில்தான் அது பயணப்படவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திலே இருக்கிறது; அதுபோல, சமுதாய ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நம்முடைய நாட்டிற்குத் தேவை என்று, 1951 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. மீண்டும் மீண்டும் அதேபோன்ற திருத்தங்கள்; மீண்டும் மீண்டும் அதையொட்டியே திருத்தங் களைச் செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், நம்முடைய அரசு தெளிவாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தினுடைய அண்மைக்கால தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படாவிட்டால், கண்டிப்பாக அரசியல் சாசனம் திருத்தப்படும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம்; திருத்தவேண்டும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இங்கே நான் சொல்லக்கடமைப்பட்டு இருக்கிறேன்.
    சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப்பற்றி விரிவாகச் சொல் வதற்கு இங்கே வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் எங்களுக்கு நிறைய செய்திகளைத் தந்திருக் கிறார்கள்; அவற்றை எல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துப் பெரும் பயன் அடைந்தேன் என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்; அவர் மறையும்பொழுது அவருக்கு வயது 52. அவர் இங்கிலாந்திற்கு புதிய பொறுப்பினை ஏற்பதற்காக செல்லும்பொழுது, விமான விபத்தில் அவர் மரணமடைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய தலையங்கம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இங்கிலாந்திற்குப் புறப்படுவதற்கு முன்னால், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் எழுதினார், அதிலே, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய பெருமைகளையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, நமது சர்.செல்வம் அவர்கள், பொறுப்புள்ள பதவிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்; பொறுப்புள்ள நிர்வாகம் அவருக்குப் புதிதா?
    எனக்கு வாதாடத் தான் தெரியுமே தவிர, எனக்கு நாடாளத் தெரியாது என்று கூறவேண்டிய நிலையில் உள்ளவர் அல்லர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இறுதியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார்கள், பொறுப்பும், புகழும் பொருந்திய பதவி அவருக்கு வழங்கப்பட்டு, அவர் இங்கிலாந்து சீமை சென்று, இந்திய அரசின் ஆலோசகராக வீற்றிருக்கப்போவதைக் கேட்டு, நாம் மிகமிக மகிழ்ந்தோம். சர்.பன்னீர்செல்வம், தமிழர்களின் செல்வம்; அவருக்குக் கிடைத்துள்ள பதவி தமிழருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி; அவருடைய உயர்வு தமிழர் உயர்வு; அவர் மகிழ்வு தமிழர் மகிழ்வு; எனவே, அவரை வாழ்த்துகிறோம் எனில், தமிழ்நாட்டாரை வாழ்த்துகிறோம் என்று பொருள் என்று முடிக்கிறார். பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும்  நன்றி
    அந்த வகையிலே, தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர்; சமுதாய இயக்கத்தினுடைய தலைமகன்களில் ஒருவர்; சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர்; தன்னுடைய வாழ்நாளில் சமுகப் புரட்சிக்காக, அனைத்து சமுதாயமும் நீதி பெறவேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர்; கடுமையான உழைப்பாளியாக இருந்து, அந்த இயக்கத்தை வளர்த்தவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நான் என்னுடைய மரியாதையை செலுத்தி, அவருடைய உருவச் சிலையை திறந்து வைக்கக்கூடிய பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றி சொல்லி, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய புகழ் வாழ்க; புகழ் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க என்று சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.
    வணக்கம்.
    - இவ்வாறு மத்திய அமைச்சர் ப.சிதம்பம் அவர்கள் உரையாற்றினா

    கருத்துகள் இல்லை: