வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

விஜய்: ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கப்படும் ! கல்லாதான் முக்கியம் ?

நேற்றுவரை அரசியல் பஞ்சுகளை அள்ளிவீசி விட்டு இன்று தான் எடுத்த வாந்திகளை தானே உண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்ட சினிமா கதாநாயகன்  இன்று சட்டி சுட்டதடா  ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு:அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.அப்படி எண்ணம் உள்ள ரசிகர்கள் உடனேயே மன்றத்தை விட்டு வெளியேறிவிடுங்கள்"சில அரசியல்வாதிகள், அவர்களின் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்த எண்ணுகிறார்கள் அதற்கு நீங்கள் பலியாகி விடவேண்டாம். மீறி அரசியல் செயல்களில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கப்படும்.அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் போட வேண்டாம்.அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன்.என்னை இல்லாது என் தந்தையோ வெறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்.இவ்வாறு பதிவிட்டுள்ளார் விஜய். அதாகப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை போத்திக்குன்னு  கமுக்கமா காசு மட்டும் சேர்ப்போம் , அப்புறம் திமுக வந்தால் அவயங்களால் நாட்டுக்கு கேடுன்னு சொல்லிகினே காலத்தை ஓட்டிடுவோம் . எவ்வளவு தான் திட்டினாலும் அவய்ங்க கண்டுக்க மாட்டானுங்க , கோமளவல்லியை சப்போட் பண்ணினாலும் தொல்லை பண்ணாட்டாலும் தொல்லை

கருத்துகள் இல்லை: