வெள்ளி, 21 டிசம்பர், 2012

Sasikala இதுவரை 825 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்

சசிகலா இன்றும் கோர்ட்டில் ஆஜர்: இதுவரை 825 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்<சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நிதிபதியின் கேள்விக்கு சசிகலா மூன்றாவது நாளாக பதிலளிக்கிறார் 825 ஏற்கனவே அவரிடம் கேட்கப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சியுள்ள கேள்விகள் இன்று கேட்க்கப்படும் என்று தெரிகிறது. < பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மூன்று நாட்களாக ஆஜராகி சசிகலா வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். நீதிபதி பாலகிருஷ்ணா கடந்த புதன் கிழமை கேட்ட 110 கேள்விகளுக்கும் நேற்று 83 கேள்விகளுக்கும் பதலளித்திருக்கிறார்.

இதுவரை இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா 825 கேள்விகளுக்கு பதலளித்திருக்கிறார். எத்தனை கேள்வி கேட்டாலும் ஹயறாக்கி சமுகம் அவாளை பாதுகாக்கும் 


இந்நிலையில், இன்றும் எஞ்சியுள்ள கேள்விகளுக்கு பதில ளிக்க சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். இதுவரை கேட்ட கேள்விகளை பொறுத்தவரை சசிகலா பங்குதாரராக பதவி வகித்த சசி எண்டர் பிரைசஸ் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யுனிவர்சல் மற்றும் வினோத் வீயோ விஷன் உள்ளிட்ட வங்கி ஆவணங்களின் அடிப்படடையில் பண பரிவர்த்தனை தொடர்பாக பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும், நல்லம்மன் நாயுடுவின் அறிக்கையை சார்ந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் இன்று பிற்பகல் மற்றும் நாளையும் சசிகலா கோர்ட்டில் ஆஜராவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. nakkheeran.in/

கருத்துகள் இல்லை: