ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ராமதாஸ்: விடுதலை சிறுத்தைகள் பக்கா ரவுடி கும்பல்!

Viruvirupu
ஸ்டெத்தில் வன்முறை சத்தம் கேட்குதா டாக்டர்?
ஸ்டெத்தில் வன்முறை சத்தம் கேட்குதா டாக்டர்?
“திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் ஒரு கட்சி அல்ல, அது ஒரு வன்முறை இயக்கம், ரவுடி இயக்கம்” என்று ஒரே போடாகப் போட்டு அதிர வைத்திருக்கிறார், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் வைத்தே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஒரு பிடி பிடித்தார் டாக்டர். இந்த கருத்தரங்கம், “காதல் நாடக திருமணங்களால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள்” குறித்து நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியபோது, “தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு யார் காரணம்? என்ற பின்னணியை இன்னும் யாரும் சொல்லவில்லை. ஆய்வும் நடத்தப்படவில்லை. ஆனால், நாங்கள் தான் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் பண்ணுவதாக கூறுகிறார்கள்.

நாங்கள் நடத்துவது தமிழக மக்களின் வளர்ச்சிக்கான அரசியல். 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். நான் சொல்லவந்த உண்மை, முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சமுதாய இயக்கமா? ஆதிதிராவிட மக்களுக்காக போராட வந்த இயக்கமா? அல்லது அரசியல் இயக்கமா? இதில் எதுவும் இல்லை.
நாங்கள் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதெல்லாம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்த்தால் மற்ற ஓட்டுகள் கிடைக்காது என்று அந்த கட்சி தலைவர்களே கூறினார்கள்.
இப்போது, 81 சதவீத மக்கள் என் பக்கம் இருப்பதாகவும், 19 சதவீத மக்கள் அவர் பக்கம் இருப்பதாகவும் திருமாவளவன் கூறுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் தலைவர் இல்லை. இவரை தலித் என்றால், 75 சதவீத பட்டியலின மக்களான எங்களை தலித் என கூற வேண்டாம் என்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வன்முறை கும்பல், ரவுடி கும்பல் என்று நான் பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நந்தன் என்பவர்தான். எல்லா மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இதைத்தான் செய்கிறார்கள். கட்ட பஞ்சாயத்து செய்து காசு பார்க்கின்றனர்.
இதுபோன்று தவறு செய்பவர்கள் பற்றிய தகவலை திரட்டி வருகிறோம். விரைவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம்.
என்னைப்போல் தலித்துகளுக்காக பாடுபட்ட தலைவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் என்பது ஒரு வன்முறை கும்பல். அரசியல் கட்சி அல்ல.
அந்த இடத்தில், நீங்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாம். அப்படியென்றால், ஏன் கூட்டணியில் அவர்களுடன் இருந்தீர்கள் என்று?. எங்களுடன் சேர்ந்தாவது அவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தோம். ஆனால், திருந்தவில்லை. அவர்களை திருத்தவும் முடியாது.
வட தமிழ்நாடு அமைதியாக இருக்க காரணம் இந்த ராமதாஸ்தான். நான்தான் மதுரையில் இருந்த திருமாவளவனை இங்கே அழைத்தேன். 1996-ம் ஆண்டு சமூக நீதி கூட்டணியை நாங்கள்தான் அமைத்தோம். 2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பா.ம.க.தான் ஆட்சியமைக்க போகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் தடுக்க முடியாது” என்றார்.
டாக்டர் ஐயா, அனைத்து ஜாதிக் கட்சிகளையும் சேர்த்து கூட்டணி அமைப்பேன் என்றாரே? அப்போ, திருமா கட்சிக்கு அழைப்பு கிடையாதா?

கருத்துகள் இல்லை: