செவ்வாய், 5 ஜூலை, 2011

சாதிக்பாட்சா சாவதற்கு முன்பு எழுதிய கடிதம்:


டெல்லியில் இருந்து வந்த நிபுணர்கள் ஆய்வு
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா சாவதற்கு முன்பு எழுதியதாக வெளியிடப்பட்ட அந்த கடிதமே போலியானதாக இருக்கலாம் என்று சி.பி.ஐ. போலீசார் கருதுகிறார்கள்.

எனவே கடிதத்தை ஆய்வு செய்வதற்கும், பிரேத பரிசோதனை அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்யவும், டெல்லியில் இருந்து மத்திய அரசின் தடய அறிவியல் நிபுணர் ஒருவரும், கையெழுத்தை ஆய்வு செய்யும் நிபுணர் ஒருவரும் சென்னை வந்து விசாரணை நடத்தினார்கள்.


அவர்களின் ஆய்வு அறிக்கை கிடைத்தபிறகு இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: