சனி, 9 ஜூலை, 2011

திமுக பேராட்டத்தில் ஈடுபடும்: மு.க.ஸ்டாலின் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால்

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க முயற்சி மேற்கொள்ளும் அதிமுக அரசுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக உயர்நிலை செயல்திட்ட தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் தொடங்குவதற்காக பல தமிழ் அறிஞர்களை கொண்டு பாடதிட்டங்ங்கள் தயாரிக்கப்பட்டன. 200 கோடி ரூபாய் செலவில் புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருந்த நிலையில், சமச்சீர் கல்வி ரத்து சென்று அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

கருத்துகள் இல்லை: