சனி, 21 ஆகஸ்ட், 2010

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலையே கூட முறியும்: இளங்கோவன்

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.நான் மனதில் பட்ட கருத்தை பேசுகிறேன். அதை தவறாக கருதி டில்லிக்கு கோள்மூட்டி விடுகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லை. சோனியா, ராகுல் கரத்தை வலுப்படுத்துவதே என் நோக்கம். கட்சிக்கு கடுமையாக உழைப்பேன். மனதில் பட்டதை நான் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருப்பேன். என்னைத் தடுக்க முடியாது. சென்னையில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆண்டுகள் பலவாகியும் இன்னும் கட்டப்படவில்லை. அரசிடம் பணம் இல்லையா அல்லது கொடுக்க மனமில்லையா? அரசிடம் பணம் இல்லை என்றால் நாங்களே பணம் வசூலித்து கட்டிக் கொள்கிறோம்.

வலி என்கின்றனர். வலி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. நல்ல காரியத்தை செய்தால் வலி எப்படி ஏற்படும். கூட்டணி தொடரும் என்றால் எப்படி தொடரும். இந்தக் கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது.அம்மையார், யாருடன் கூட்டணி வைக்கச் சொன்னாலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். நான், அம்மையார் என்று சொன்னது சோனியாவை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்தால் சரியாக இருக்கும் என்று நாங்கள் மேலிடத்திற்கு சொல்லி வருகிறோம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

ஜியாவுதீன் - Riyadh,சவுதி அரேபியா
2010-08-21 05:16:05 IST
அதோட மத்திய அரசு இன்று மாலையே கூட கவிழும்னு ஒரு வரி சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும். தான் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் என்கிற ரீதியில் ஆளாளுக்கு உளறிக்கொட்டி பத்திரிகைகளுக்கு தீனி போட்டு காமெடி பண்ணுகிறார்கள். சென்ற முறை மத்திய மந்திரி. தன் வாய்க்கொழுப்பால் தேர்தலில் தோற்று நாடாளுமன்ற உறுப்பினராகக்கூட முடியவில்லை. இந்த லட்சணத்தில் தன்னை தமிழக காங்.தலைவர் போல காட்டிக்கொண்டு தனது கோஷ்டியை பலப்படுத்த இயக்கத்தையே பலிகடா ஆக்க முயலுகிறார் இந்த இளங்கோவன்....
மரைக்கார் eastham லண்டன். - london,யுனைடெட் கிங்டம்
2010-08-21 05:13:16 IST
ஏதோ தன் வாலை விட்டு ஆழம் பார்க்குமாம். அதுமாதிரி காங்கிரஸ் இளங்கோவனை விட்டு ஆழம் பார்க்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாகத்தான் இருக்கிறது. சுமுகமாகவே இருந்துக்கொண்டிருந்தால் கூட்டணி சீட்டு பேரம் சரியாக வராது. திமுக கொடுப்பதை அப்படியே வாங்கிகொண்டு போகவேண்டியதுதான். கொஞ்சமாவது முறுக்கிக்கொண்டு போனால்தான் தான் நினைக்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை பெறமுடியும். இதற்காகத்தான் இந்த டிராமா. காங்கிரஸ் மேலிடத்திற்கும் இதெல்லாம் தெரிந்துதான் கண்டும்கானாததுபோல் இருக்கிறது. பழம் தின்று கொட்டையை போடும் சாணக்கியர் கலைஞர் அவர்களுக்கும் இது புறியும். தேர்தல் நேரத்தில் கலைஞர் போடும் கணக்கே தனி. இப்போதைக்கு joker இளங்கோவன் உளறலுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கவேன்டியதில்லை.... 
 
தமிழன் - சென்னை,இந்தியா
2010-08-21 05:03:10 IST
மறுபடியும் வந்துட்டான்யா. இந்த ஆளுக்கு என்ன பேசுரதுருதுன்னு கூட தெரியலியே. இவன் ஒரு பெரியவன்னு ஏன்டா பேச வைக்கிரீங்க...
பில்லா பெரியசாமி - கரூர்,இந்தியா
2010-08-21 04:38:20 IST
இந்த ஆளுக்கு ஏதாவது கிறுக்குப் பிடிச்சுப் போச்சா..! நேதாஜி வழியிலெ போவாங்களாமே.! நேதாஜியைப் பத்தி நினைப்பதற்குக்கூட இவர்களுக்கு தகுதி உண்டா..? இவருடைய கோரிக்கையைப் பாருங்கள். மக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது இருக்கா.? சொல்றபடி இவர் வெளிப்படையாகப் பேசுவது உண்மைதான்.! இவர் ஜோக்கர் இல்லை..கிறுக்கன்தான் என்று நல்லாவே தெரியுது...!...
ஜெயக்குமார் - இருண்டபாளையம்,இந்தியா
2010-08-21 04:15:03 IST
டேய் செவல... தாவுடா தாவு........
ரங்கராஜ் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா
2010-08-21 03:39:13 IST
இலங்கோவநேல்லாம் கருணாநிதிக்கு பேதிக்கு கொடுக்கிறார்..என்ன கொடுமை சார் இது ?தங்கபாலு வுக்கு சரியாக காது கேட்பதில்லை.;கண்ணும் கொஞ்சம் வீக்;;அவரால் என்ன செய்ய முடியும் ? முதல் வர வழக்கம் போல் சோனியாவுக்கு மடல் எழுதுங்களேன் .அப்போதாவது இந்த கொசு தொல்லை ஒழியுதா .பார்ப்போம்....
KARUPPIAH சத்தியசீலன் - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-08-21 03:23:46 IST
இளங்கோவன் சொல்வது மிக அருமை.தங்கபாலு விற்கு தான்,புரியவில்லை....
raj - ooty,இந்தியா
2010-08-21 03:11:13 IST
நீங்க எல்லாரும் சேர்ந்து தாத்தாவுக்கு இரத்த கொதிப்பு உண்டாக்கிறிர்களே. பாவம்யா கலைஞர் தாத்தா....
ரமேஷ் சுப்புராஜ் - போஸ்டன்,யூ.எஸ்.ஏ
2010-08-21 02:53:59 IST
இளங்கோவன் பின்னிடீங்க போங்க!!! Congratulations...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-21 02:35:59 IST
ஹஹஅஹஹா... செம சிரிப்பு. யோவ் இளங்கோவா... சூப்பர் யா. நீயும் அம்மாவும் சேந்து அவருக்கு வலிய கொடுக்குறீங்களோ இல்லியோ, கிலிய நல்லாவே கொடுக்குறீங்க. அம்மான்னு நான் சொன்னது அந்தம்மாவன்னு நீ புரிஞ்சுக்கணும். ஷப்ப்பா... அரசியல் நடத்துறது ரொம்ப கஷ்ட்டமடா. மஞ்சதுண்டோட நிலைமைல இருந்து பாரேன். இனி ஒரு, ஒரு வருசத்துக்கு இவனுக கொடுக்கிற பீதியெல்லாம் தாண்டி, தினம்தினம் பேதி ஆகி, படுக்கைலையே கழிஞ்சு, இவனுகள சமாளிச்சு, அசிங்கமா பேசி, அறிக்கை விட்டு, ஜெயிச்சு ஆட்சிய புடிக்கிரதுக்குள்ள தாலியே அந்து போவும் போல இருக்கே. ஷப்ப்பா... நல்ல வேலடா சாமி. நாமெல்லாம் இந்த கருமம் புடிச்ச அரசியல்ல இல்ல. இப்படி தெனம் தெனம் செத்து பொழைக்கிரதுக்கு, நாலு தெருவில அண்டாவுக்கு ஈயம் பூசி பொழச்சுக்கலாம்....
zamir - chennai,இந்தியா
2010-08-21 02:32:29 IST
Mr.EVKS, Did you forget great leader Kamaraj, Rajaji? Why you are so much after the alliance. Do not follow the path of Vaiko. You dont have followers and dont spoil your future...
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-08-21 02:07:51 IST
யோவ் இளங்கோ நீ,வாசன்,சிதம்பரம்,தங்கபாலு தனி தனி கோஷ்டியாக இருக்கும் வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமையாது? உங்கள் நால்வரையும் கட்சியை விடு தூக்கினால் இந்த தடவை அம்மா,அய்யா காலில் விழ தேவையில்லை.அம்மா கொடநாட்டில் இருந்து வீசும் பிச்சைக்கு விலை போய்விடாதே,இத்தாலியில் பிறந்தவர்களுக்கு இந்தியாவில் ஆட்சி அமைக்க அதிகாரம் கிடையாது ன்னு சொன்னிச்சு, ஜாபகம் வருதா?அம்மாவிடம் நிறைய கருப்பு பணம் பீர் மன்னன் மல்லையா கொடுத்தது கோடி கணக்கில் இருக்கு.கோடியை வாங்கிக்கிட்டு காங்கிரஸ அடமானம் வைத்துவிடாதே.நல்ல இளைஞ்ர்கள் சேர்ந்து காங்கிரஸ் ஐ வலுவான காங்கிரஸ் உருவாகனும்.நல்ல வாய்பு,ராகுல் கவனிப்பாரா?...
ராஜவன்னியன் - குவைத்,குவைத்
2010-08-21 01:47:24 IST
அடங்க matiya evk? enna than unn arasiyal selvakku nu varum therthal therimudi? vaikanum...
Sathiya USA - USA,இந்தியா
2010-08-21 01:37:15 IST
True..True...True... Ilangovan & Vaiko are the one of few good politicain that TN has now....
Bhushan - Adelaide,இந்தியா
2010-08-21 01:32:08 IST
நினைப்பு தான் பொளைப்ப கெடுத்துச்சான் இளங்கோவா ! என்ன செய்ய டெல்லி கைப்புள்ள வேலய பண்ணி காலம் ஓட பழகிபோச்சு ...! ஐயோ ! ஐயோ !...
பார்த்திபன் - சென்னை,இந்தியா
2010-08-21 01:31:41 IST
ஐயோ, என்னா ஒரு பூரிப்பு முகத்துல! மேல இருந்து கிரீன் சிக்னல் குடுக்காமலா இப்படியெல்லாம் ஆடுறீங்க. திமுக-வுடன் இருந்தால் தேர்தல்ல நீங்க தோக்கப் போறது உறுதி - போன தடவையே பக்காவா தெரிஞ்சுகிட்டீங்க! அதான் இந்த வாய்ச்சவடால்! ஆனாலும், பெரிசு எந்த ரூபத்தில் பழிவாங்கும்னு யாருக்கும் தெரியாது - என்ன மாதிரி பொது ஜனங்களுக்கு உற்சாகமா இருக்கு!...
காண்டீபன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-21 01:27:41 IST
நல்லாதானே போயிட்டு இருந்துச்சு? ...................... மானம் கேட்ட பொழப்பு, இந்த அரசியல்வாதிகளோடது....
குமார் - எட்டையபுரம்,இந்தியா
2010-08-21 01:24:18 IST
இளங்கோவன் உங்க தில் எனக்கு பிடிக்கிறது!!! ஆனால் கொஞ்சமாவது உங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலாவது உங்களால் முடிந்த மக்கள் நலப் பணிகளை செய்தால்தான் நீங்கள் அரசியலில் யாரையும் சாராமல் ஜெயிக்க முடியும். சும்மா விஜயகாந்த் சினிமா டயலாக் பேசுவதில் ஒரு அர்த்தம் இல்லை!! இது பரபரப்புக்கு மட்டும் தான் தீனி போடும்!!!...

கருத்துகள் இல்லை: