சனி, 21 ஆகஸ்ட், 2010

புலிகளுக்கு வங்கியில் கடனெடுத்துக் கொடுத்துவிட்டு குமறிக்கொண்டிருப்பவர்கள

Mr.thamingiland  பிச்சையெடுக்க வாறார் கவனம்.
முள்ளிவாய்க்காலில் புலிகள் முடிந்து போனபின் புலம்பெயர்நாடுகளில் காசு சேர்த்துக்கொண்டிருந்த புலிப்பினாமிகளுக்கு தலையில் இடிவிழுந்ததுபோலிருந்தது. உழைக்காமல் வேலைக்குப்போகாமல் சும்மா இருந்து மக்களிடம் போராட்டத்தைச்சாட்டி காசு சம்பாதித்து சொகுசாக இருந்த புலிப்பினாமிகளுக்கு ஒரே யோசனை. சனத்திடம் காசு கேட்கப்போவதற்கு என்ன சாட்டு சொல்லலாம் என தலையைப்போட்டு பிச்சுக்கொண்டிருந்தார்கள். போதாதிற்கு நெடியவன் கே.பி சண்டை வேறு.  இந்த நிலமையில் இலங்கை அரசாங்கம் கே.பிக்கூடாக புலம்பெயர் புலிகளை அழைத்து சந்திக்க வைத்தது.
அப்பாடா பிழைப்பதற்கு ஒரு வழி கிடைத்து விட்டது. கே.பி ஒரு புனர்வாழ்வு அமைப்பை நிறுவியுள்ளார். நாடியை தடவிக்கொண்டு காசுக்கு என்ன வழி என்று இருந்த புலிகளுக்கு சுவாசிக்க ஒரு ஒட்சிசன் கிடைத்து விட்டது. புலிகள் ஓகொ என்றிருந்த காலத்தில் புலிகளோடு ஒட்டி காசு பார்த்த bogus fellows  தற்போது கே.பியுடன் சேர்ந்து மீண்டும் புலம்பெயர் மக்களிடம் பிச்சையெடுக்க கிளம்பி விட்டார்.
என்னவொரு ஈனத்தனமான பிழைப்பு. ஊனமுற்றவர்களைத்தான்  சமூகம் பிச்சையெடுக்கின்ற நிலைமைக்குத் தள்ளி விடும். கை;குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பவர்களும் இருக்கிறார்கள். கையில் அல்லது காயில் புண்ணை வைத்துக்கொண்டு அதனை மாற்றாமல் அதை வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பார்கள்.
கடந்தகாலங்களில் புலிகள் தமிழ்மக்களை வைத்து பிச்சையெடுத்தார்கள். அது மிரட்டல் பாணிப் பிச்சை. இவ்வளவு போடு என்கிற மிரட்டல். தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் புலி முக்கியஸ்தர்களுக்கு ராஜவாழ்க்கை கிடைத்தது. இப்போ அகதிகளாக அல்லப்படும் மக்களைச்சாட்டி பிச்சையெடுக்க வருகிறார்கள்.
முன்பு போலில்லாமல் கணக்கு கேளுங்கள். சுனாமிக்கு சேர்த்த பணத்திற்கு இந்த புலிப்பினாமிகள் தமிழ்மக்களுக்கு கணக்கு காட்டவில்லை. புனர்வாழ்வோ அல்லது அபிவிருத்தியோ கணக்கு காட்டாத எவனுக்கும் பணம் கொடுக்கக்கூடாது. ஏனென்றால் தாங்கள் உழைக்காமல் மக்களின் பணத்தில் மசாச்சுக்குப் போகிறவங்கள் இவங்கள் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் கடமை. புலிகள் தமிழ்மக்களின் கோவணம் வரை உருவியெடுத்தாங்கள். உங்களிடம் மிஞ்சியிருப்பது கோவணம் மட்டும்தான். அதையும் இவங்கள் உருவாமல் பார்த்துக்கொள்வது உங்கள் கடமை.
முக்கிய குறிப்பு:
புலிகளுக்கு தொகையாக வங்கியில் கடனெடுத்துக் கொடுத்துவிட்டு குமறிக்கொண்டிருப்பவர்கள் சுவிஸ் நாட்டில் அதிகம். எதற்கும் அவர்களிடம் சென்று தற்போதைய அவர்களின் நிலமைகளை அறிந்துகொண்டால் விழித்துக்கொள்ளலாம்.
thanks.www.teavadai.wordpress.com

கருத்துகள் இல்லை: