செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

20 ஆயிரம் வீடுகளை அமைத்துத் தரவேண்டும்: சீன பிரதிநிதிகளிடம் முரளிதரன் கோரிக்கை

இடம்பெயர்ந்த மக்களுக்கு 20 ஆயிரம் வீடுகளை அமைத்துத் தரவேண்டும்: சீன பிரதிநிதிகளிடம் முரளிதரன் கோரிக்கை

இடம்பெயர்ந்த மக்களுக்கு சீன அரசாங்கம் 20 ஆயிரம் வீடுகளை அமைத்துத் தந்து உதவவேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகர்த்தி   முரளிதரன்   கோரிக்கை விடுத்துள்ளார்.
சீன அரசாங்கத்தின்  விசேட   பிரதிநிதிகளை நேற்று அமைச்சில் சந்தித்து பேசியபோதே இந்தக் கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பின் போது இடம் பெயர்ந்த மக்களுக்கு போதியளவு வீடுகளை அமைக்க வேண்டியதன்   அவசியம்   குறித்து   பிரதி அமைச்சர் எடுத்துக்கூறியுள்ளார்.
இடம் பெயர்ந்த மக்களுக்கு 20 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க சீன அரசாங்கம் உதவ வேண்டும். இதன்  மூலம் அந்த மக்கள் பெரும் பயனை பெறுவார்கள் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.    இவ்விடயம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை  எடுக்க   முயற்சிப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந் திப்பில் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம்.பி. திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்

கருத்துகள் இல்லை: