புதன், 18 ஆகஸ்ட், 2010

குளவி கொட்டியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம்

அப்புத்தளை, கிரனூர் தோட்டத்தில் நடைபெற்ற ஆலய திருவிழா நிகழ்வொன்றின் போது அங்கு கலைந்து வந்த குளவிகள் கொட்டியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அப்புத்தளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள பத்தினியம்மன் கோயிலில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: