புதன், 18 ஆகஸ்ட், 2010

இலங்கை விவகாரம்: நிருபமா – கருணாநிதி இன்று சந்திப்பு!

இந்தியாவின் மத்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று சென்னை வரவுள்ளார். முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கும் அவர் ஈழத் தமிழர்கள் பிரச்சினை, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்துவார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரணம் உரிய முறையில் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அதைக் கண்காணிக்க ஒரு குழுவை அனுப்பலாம் என்று முதல்வரிடம் பிரதமர் மன்மோகன் சி்ங் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிருபமா ராவ் அது குறித்து விவாதிக்கவே முதல்வரைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: