சனி, 3 ஜூலை, 2010

மோசடிவழக்கு, மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி மருத்துவக் கல்லூரிக்கு

மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அந்த கல்லூரியை முற்றுகையிட்டு, 12 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மருத்துவக் கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் (வகுப்பு அறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லாதது, ஆய்வு கூடங்கள் இல்லாதது) அங்கீகாரம் பெற்றுள்ளதை உறுதி செய்த சிபிஐ போலீசார், கல்லூரி மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், மேலும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட கேசான் தேசாய் காலத்தில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: