வெள்ளி, 2 ஜூலை, 2010

லண்டனில் 17000 ஸ்ரேலிங் பவுண் மோசடி செய்த இலங்கைக் குடும்பம் கைது.

லண்டனில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 1 மில்லியன் ஸ்டேலின் பவுன் சொத்துக்கள் மற்றும் BMW கார்கள் வைத்திருந்த நிலையில் அரசிடமிருந்து வீட்டுக்கடன் என கூறி, 170,000 ஸ்டேலின் பவுன் மோசடி செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இந்த பண மோசடியுடன் தொடர்புடைய நான்கு பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 46 வயது நிரம்பிய பிரேம்குமார் பத்மநாதன் 14 மாதங்களுக்கும் அவருடைய சகோதரன் சிவகுமார் பத்மநாதன் 15 மாதங்களுக்கும் நல்லையா கௌரிதாஸ் என்பவர் 15 மாதங்களுக்கும் ஷாமினி கௌரிதாஸ் 6 மாதங்களுக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரேம்குமாரின் மனைவியான கல்யாணிக்கு 12 மாத சிறைதண்டனையும் 150 மணித்தியாளங்கள் சம்பளமற்று வேலைசெய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: