செவ்வாய், 15 ஜூன், 2010

சீமான், பஞ்சு டயலக் விஜயையும் சேர்த்துக்கொண்டு தாணுவின் கல்லாவில் கூத்து

அரசியலில் கால் வைத்த பிறகு சீமானிடமிருந்து கலைப் படைப்பு எதுவும் வரவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இப்போது பகலவன் என்ற படத்தை உருவாக்குகிறார்.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர், பிரமாண்டம் என்ற சொல்லுக்கு சினிமாவில் புதிய அர்த்தம் தந்த கலைப்புலி எஸ் தாணு.

விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் இதர டெக்னீஷியன்கள் குறித்து
இன்னும் ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், "நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம் அமையும்..." என்றார்.

தயாரிப்பாளர் தாணு கூறுகையில், "சச்சினுக்குப் பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்", என்றார்.

தாணு ஏற்கனவே கமலை வைத்து போன்டியானவர் பின்பு கந்தசாமியிலும் ஓரளவு அடி வாங்கியவர் போதும் போதாதற்கு பாக்கியராஜின் புத்ரனை வைத்து சக்கரைகட்டியிலும் நொந்து போனவர். அடப்பாவிகளா அவரை மேலும் நூடில்ஸ் ஆகாம விடமாட்டீங்களா?
சீமான்   செபஸ்தியன் அரசியலில் சாம்பார் வைக்க அவிஞ்சுபோன பஞ்சு டயலக் விஜயையும் சேர்த்துக்கொண்டு தாணுவின் கல்லாவில் கூத்து பார்க்கப்போகிறார்கள். இவர்களின் கார்நிவல்லில்   இன்னும் யார் யார் பாகட்டுகள் காலியாகப்போகிறதோ தெரியவில்லை. ஒருவேளை வெளிநாட்டு வெங்கயங்களின் முதலீடு உள்ளதோ அவர்களின் தலையில் தான் அரைக்கப்படப்போகிறதோ?

பதிவு செய்தவர்: கோவாலு
பதிவு செய்தது: 15 Jun 2010 12:27 am
என்னாங்கடா இதெல்லாம் ? விஜய் ஒரே கதை , ஒரே கெட்டப் ல நடிக்கிறான்னும் திட்டுறிங்க , சரி வேற வழில ட்ரை பண்ணினாலும் திட்டுறீங்க ! அப்போ நம்ப பேரரசை டைரக் செய்ய சொல்லி ஜமாய்ச்சிடலாமா ? அப்பவும் திட்டுவிங்களே ! அப்பு இப்போ .என்னதான் பண்ணனும் எங்கிறீங்க ?அந்த பஞ்ச டயலாக் ரஜினி போல பேசபோயி.. பஞ்சரான நம்ம விசய் தம்பி ??


பதிவு செய்தவர்: தும்பி
பதிவு செய்தது: 15 Jun 2010 12:20 am
ஹீரோயின் சிங்கள அழகி பூஜா தானே?

கருத்துகள் இல்லை: