புதன், 16 ஜூன், 2010

ஒபாமாவின் விசேட பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கையில் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா பவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின், விசேட ஆலோசகராகவும் மனித உரிமைகள்,மற்றும் தேசிய பாதுகாப்பு சபையின் சிரேஸ்ட பணிப்பாளராகவும் செயற்படுகிறார்.

இதேவேளை இந்த சந்திப்பின் போது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் போர்க்குற்ற மற்றும் பொதுமக்கள்; பாதுகாப்பு பணிப்பாளர் டேவிட் பிரஸ்மேன், அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ புட்டினஸ், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: