வெள்ளி, 18 ஜூன், 2010

சங்கரராமன் கொலைவழக்கு 9-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு- புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்தனர். இதனால் கோர்ட் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

கோர்ட் புறக்கணிப்பு காரணமாக வக்கீல்கள் இன்று கோர்ட்டுக்கு வரவில்லை.

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கை வருகிற 9-ம்  தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை: