புதன், 16 ஜூன், 2010

பள்ளியின் கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி

ராமநாதபுரம் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஷ்மா திருமணமாகாமலேயே கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
 இந்த மாணவி குண்டாக இருந்ததால் அவர் கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியவில்லை. கோடை விடுமுறை முடிந்து வழக்கம்போல் அந்த மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். 
பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது மாணவி திடீரென கழிப்பறைக்கு செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி அந்த மாணவி தானாக குழந்தை பெற்று கழிப்பறையில் போட்டு விட்டு வகுப்பறைக்கு வந்து அமர்ந்திருக்கிறார்.

கழிப்பறைக்கு சென்ற மற்ற மாணவிகள் பச்சிளம் பெண் குழந்தையின் அழு குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்து ஆசிரியைகளிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.
ஆசிரியைகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

பின்னர் குழந்தை பெற்றெடுத்த மாணவியிடம் விசாரித்ததில் அந்த மாணவியும் குழந்தை பெற்றதை ஒப்புக்கொண்டார். உடனே ஆசிரியைகள் மாணவியின் உடையை மாற்றி ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
 மாணவி குழந்தை பெற்றதால் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சையையடுத்து மாணவியின் டி.சி.யை பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரிடம் வழங்கினர்.
 தமிழ் இனப்பற்றாளர்களே தமிழ்நாட்டிலேயே உங்களுக்கு நிறைய வேலை இருக்கு சும்மா புலம் பெயர்களின் எலும்புக்கு ஆசைப்படாமல் உங்கள் வீட்டை முதலில் சுத்தம் செய்யுங்கள்

கருத்துகள் இல்லை: