திங்கள், 14 ஜூன், 2010

கல்கி ஆசிரமத்தில் காவலாளி மர்ம சாவு

பூந்தமல்லியை அடுத்த நேமத்தில் கல்கிபகவான் ஆசிரமம் உள்ளது.  இந்த ஆசிரமத்தில்தான் போதை மாம்மழம் தந்து பக்தர்களை அடிமையாக்குவதாக அதிர்ச்சி வீடியோ வெளியானது.   பின்பு இந்த வீடியோவை ஒளிபரப்ப ஆசிரமம் தடை வாங்கியுள்ளது

இந்நிலையில்  இந்த ஆசிரமத்தில் வேலை பார்த்துவந்த காவலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார்.
 மேல்மணம்பேடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்த ஆசிரமத்தில் காவலாளியாக இருந்தார்.  

ஆசிரமத்திற்கு வரும் வாகனங்களுக்கு கதவை திறந்து விட்டுக்கொண்டிருந்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த ஊழியர்கள் ராஜேந்திரனை போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் காவலாளி ராஜேந்திரன் இறந்தார்.

இது சம்பவம் தொடர்பாக வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

கருத்துகள் இல்லை: