புதன், 16 ஜூன், 2010

16 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

16 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி  வெற்றி 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று தொடங்கியது.
இன்றைய தொடக்க ஆட்டத்தில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மேத்தியூஸ் 55 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். மகிளா ஜெயவர்த்தனே 3 பவுண்டரிகளுடன் 54 ரன் எடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 226 ரன் எடுத்தது. இதையடுத்து 16 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அணி கேப்டன் அப்ரிடி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இவர் 76 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சருடன் 109 ரன் எடுத்தார்.

கருத்துகள் இல்லை: