![]() |
செவ்வாய், 26 ஜனவரி, 2021
டிஆர்பி முறைகேட்டுக்காக ரூ. 40 லட்சம் அர்னாப் லஞ்சம் கொடுத்தார்....
புலிகளின் சித்திரவதையில் மரணித்த தோழர் முகுந்தனின் செய்தி வரலாற்று ஆவணம்
![]() |
சசிகலா நாளை விடுதலை - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு
![]() |
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
Dravidian Languages Day ... tribute to 700+ Tamils Martyrs sacrificed their life in the 1965 Anti Hindi Agitation.
![]() |
We Dravidians 2.0
![]() |
Kathir RS : · This is an Initiative from Bengal!! আজ এক পবিত্র দিন। ৬৫ বছর আগে আজকের দিনে আমাদের 700 অধিক তামিল ভাইবোন প্রাণ দিয়েছিল হিন্দি সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে। তাদের আত্মবলিদান ভারতকে হিন্দি রাষ্ট্র হতে দেয়নি। হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হতে দেয়নি। অহিন্দি জাতির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হিন্দি সম্রাজ্যবাদকে ধ্বংস করাই হবে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ভয়ঙ্করতম প্রতিশোধ।
Today is a holy day. 65 years ago today, more than 700 of our Tamil brothers and sisters gave their lives to destroy Hindi imperialism. Their sacrifice did not allow India to become a Hindi state. Hindi was not allowed to be the state language of India. Our worst revenge against the oppression is to destroy Hindi imperialism through the united movement of the non-Hindi nations.
திங்கள், 25 ஜனவரி, 2021
சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி? .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....

நேதாஜி
சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.அந்த விபத்து சம்பவம்
நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான்
நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது
நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.
இன்றும்
கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க்
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர்
இன்றும் கூட வேறு வேறு பெயர்களில் வேறு வேறு நாடுகளில் பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.
நேதாஜி
அவர்கள் நாசிப்படையில் இணையவில்லை என்றாலும் அவர்களிடம் ராணுவ உதவி
கேட்டமையானது சாதாரண குற்றம் அல்ல. ஹிட்லரின் மனித குலவிரோத நடவடிக்கைகள்
எல்லாம் நேதாஜிக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவர் அதை
பொருட்படுத்தவில்லை.
நல்ல
காலம் ஹிட்லர் நேதாஜிக்கு கடைசியில் கைவிரித்து விட்டார். இந்தியர்களை
இன்னும் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரே ஆளவேண்டும் என்ற கொள்கையை நேதாஜியிடம்
கூறி அவரை பக்குவமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நீர்மூழ்கி கப்பல்
மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். ஹிட்லர் நினைத்தால் நேதாஜியை என்னவும்
செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.
30 எம்எல்ஏக்கள் ? சசிகலா தயார்..? உடையும் அ.தி.மு.க! கவர்னர் ஆட்சி?
மகள்களை நரபலியிட்ட பெற்றோர் உடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்.. ...ஆந்திர மாநிலம் சித்தூர்

![]() |
nakkeeran - கலைமோகன் ": கல்வியறிவு, தொழில்நுட்பம் எனப் பல்வேறு வழிகளில் மனித சமுதாயம் மூடநம்பிக்கைகளை கைவிட்டு சற்று விலகி நடந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே மூடத்தனமான நம்பிக்கையின் மூலம் சில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்வியாளர்களாக இருக்கக்கூடிய, படித்த பெற்றோர்களே செய்திருக்கும் இந்த மூடத்தனமான செயல், ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசுப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜா டுடோரியல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இருவரும் நன்கு படித்தவர்கள். கல்வித்துறையில் இருவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 27 வயதில் அலக்கியா என்ற மகளும், 22 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
BBC : பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி
முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் ": தமிழக சட்டமன்றத் தேர்தல், தனிச் சின்னத்தில் போட்டி, பா.ம.கவுடன் கூட்டணி சாத்தியமா என்பது குறித்து எல்லாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியின் இரண்டாவது பகுதி இது. பேட்டியிலிருந்து:
கே. தி.மு.க. கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி வரக்கூடும் என்ற பேச்சுகள் தற்போது அடிபடுகின்றன. அப்படியான சூழலில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பாட்டாளி மக்கள் கட்சி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும். இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார்கள். நாங்களும் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்திருக்கிறோம். ஒரு முறை அண்ணா தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில், அந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
இந்தத் தருணங்களில் கொள்கை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான விஷயங்கள் குறித்து விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தது கிடையாது.
மிரட்டல்- கெஞ்சல்: காங்கிரசுக்கு ஸ்டாலின் போட்டிருக்கும் புதுக் கணக்கு! (காங்கிரசுக்கு 20 தொகுதி?)
2011 தேர்தலில் பெற்ற பாடத்தையடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே காங்கிரசுக்கு அதிக பட்சம் 30 தொகுதிகள் தான் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார். அப்போதைய திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் கலைஞர்.
டெல்லியில் நாளை பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்
இதையடுத்து, காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை .. மும்பை உயர் நீதிமன்றம்
- பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை
- விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது
- ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் பாமக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!
இந்த நிலையில்தான் ஜனவரி 21ஆம் தேதி தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணியோடு கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ‘வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால் கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார்’ என்று பேசியது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் மருத்துவர் உமாசங்கர் திட்டமிட்ட கொலை ? உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை விவகாரத்தில் கைதான மருத்துவர் உமாசங்கர் கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என்று உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மருத்துவர் சாந்தா : ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது
![]() |
| மருத்துவர் சாந்தா |
மகாபாரதம் என்ற நாவல் கிபி 400க்கு பின்புதான் புனையப்பட்டது .. ஆதாரத்தோடு நிறுவிய திரு. கிருஷ்ணவேல் டி எஸ்
கேரளா கடத்தல் கஞ்சா இலங்கை எங்கும் அமோக விநியோகம்? கட்டுக்கடங்காமல் பெருகும் கஞ்சா பாவனை
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
தளவனூர் தடுப்பணை உடைந்தது-பொன்முடி தலைமையில் திமுக அதிரடி போராட்டம்!
கதவணையால் மண் வெளியேற்றம் ! இது தொடர்பாக விசாரணை நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டப்பட்ட தடுப்பணை உறுதியாகவே உள்ளது. கதவணை திறக்கப்பட்டதால் மண் அடித்துக் கொண்டு வெளியேறுகிறது. இது பைப்பிங் ஆக்ஷன் என்போம். இப்படி நிகழ்வது எதிர்பார்த்ததுதான். இதனால் தடுப்பணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.
டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி; போலீசார் அனுமதி
இலங்கைக்கு 500,000 தடுப்பூசிகளை பரிசாக வழங்கும் இந்தியா..!
/zeenews.india.com : Covid-19 தடுப்பூசிகளின் 'பரிசு' ஒன்றை அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் (Gotabaya Rajapaksa) கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஜனவரி 27 ஆம் தேதி இலங்கைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசி (Covishield) டோஸ் கிடைக்கும். ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய மெகா நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் Covid-19 தடுப்பூசிகளைப் (Corona vaccines) பெற்ற எட்டாவது நாடாக இலங்கை திகழ்கிறது. புதன்கிழமை தொடங்கி, இந்தியா தனது அண்டை முதல் கொள்கையின் ஒரு பகுதியாக பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளுக்கு, பூட்டான் 150,000 டோஸ், மாலத்தீவுக்கு 100,000 டோஸ், நேபாளத்திற்கு 1 மில்லியன் டோஸ், பங்களாதேஷுக்கு 2 மில்லியன் டோஸ், மியான்மர் (Myanmar) 1.5 மில்லியன் டோஸ் ஆகியவற்றைப் பரிசாக வழங்கியுள்ளது. சீஷெல்ஸ் 50,000 டோஸ் மற்றும் மொரீஷியஸுக்கு 100,000 Covid-19 டோஸ் பரிசாக வழங்கப்பட்டது.
தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..
காங்கிரசின் தடுமாற்றமும் திமுகவின் திசைமாற்றமும்!
![]() |
சாவித்திரி கண்ணன் : காங்கிரசின் தடுமாற்றமும், திமுகவின் திசைமாற்றமும்!·சரியான தலைமையை அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம், கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர் களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி! புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! நிர்வாகத் திறமையோ, நாணயமோ, பொது நலன் சார்ந்த அக்கரையோ இல்லாமல் மேலிடத்து லாபி மூலம் அதிரடியாக புதுச்சேரி அரசியலில் பிரவேசித்து, நமச்சிவாயத்திற்கு அல்லது வைத்தியலிங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய முதல்வர் பதவியை அடைந்தார்!
இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான்.
கொறைச்சலும் இல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கானுக... நான் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிவன் கோவிலுக்கு தவறாமல் சென்றுவிடுவேன்...25 வருடத்துக்கு முன்பெல்லாம் எங்க ஊரு சிவன் கோவிலில் விஷேசம் நடப்பதெல்லாம் வருடத்துக்கு ஒருமுறைகூட இருக்காது. . அப்படியே இருந்தாலும் கூட்டம் அவ்வளவாக இருக்காது, மேலும் பிரதோஷத்துக்கு உற்சவர் பிரகாரத்தில் வலம் வர பல்லாக்கை தூக்குவதற்கு ஆள் கிடைக்காது... ரோட்டுல போகிறவர் வருபவரை கெஞ்சி அழைத்து தூக்கவைத்ததாக ஊர்ப் பெரியவர்கள் இப்பொழுது ஆன்மீகம் என்னும் பெயரில் கோவில்ளில் மக்கள் பொழுதுபோக்கு கூத்தடிப்பதைப் பார்த்து வேதனையுடன் சொல்லக் கேட்டிருக்கிறேன்
Tandav என்ற சீரியலை ஏன் அனைவரும் பார்க்க வேண்டும் என்றால்.....
சுமதி விஜயகுமார் : ·
நான் தீவிர ஷாருகான் ரசிகையாய் இருந்த சமயமே, ஷாருக்குடன் நடித்த ஒரு நடிகர் என்னை ஈர்தார் என்றால் அது Saif Ali Khan. Kal Ho Na Ho திரைப்படத்தில் shahrukh தியாகியாக ஸ்கோர் செய்ய முயற்சிக்கையில், saif ஒரு துருதுரு அப்பாவியாய் மனதை கவர்ந்திழுப்பார். அதன்பிறகு நான் பார்த்த படம் Hum Tum. ஒருவிதமான, எதார்த்தமான காதல் கதை. அவரின் படங்களை தேடி தேடி பார்த்ததில்லை என்ற பொழுதிலும், அவரை பிடிக்கும். இப்போது Tandav என்ற Amazon Prime ல் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 9 பாகங்களை கொண்ட முதல் சீசன் மட்டுமே வெளியாகி இருக்கிறது. முதல் 3 எப்டிசொட்களில் மிரள வைத்திருக்கிறார். சர்வாதிகாரியான வில்லன் கதாபாத்திரம். கனகட்சிதமாய், மிக பொருத்தமாய் பொருந்தி போயிருக்கிறார்.
ஆசீவகம் ! சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் வேதத்திற்கும் முன்பிருந்த சிந்தனை மரபு
ayyanar123 ஆசீவகம் ஒரு பார்வை ! முன்னுரை . ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அங்கு வாழ்ந்த மக்கள் அறிவு பூர்வ நாகரீக மக்களாக இருந்தனர்.
ஈரானியனிய மக்கள் தான் சிந்து சமவெளி மக்களுக்கு நாகரீகத்தையும் விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்ற கருத்து வட நாட்டவர்களாலும், வெளிநாட்டவர்களாலும், திட்டமிட்டு பரபப்பட்டு வருகின்றது. ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த போது அவர்களுக்கென தனி மதம் இல்லை. அவர்கள் காக்கேசிய நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்த நாடோடி சமூகத்தினர். அவர்களுக்கென தனிமதமும் இல்லை எழுத்து மொழியும் இல்லை. அவர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கினர். பின்னர்... இன்றைய இந்திய நிலத்திலிருந்த வழிபாடுகளை தாங்களும் பின்பற்ற தொடங்கினர். ஆரியர்களின் மதம் வேத மதம். இயற்கையின் முதல்வனான இந்திரனையே அவர்கள் முதல் தெய்வமாக வணங்கினர் சிவனை அல்ல. நான்கு வேதங்கள், மனு தர்மம் இவற்றைக்கொண்டு வேள்வியிடல், ஆடு, மாடுகளை உயிரினங்களைப் பலியிடல், சாதியத்தை பேணுதல் போன்ற செயல்கள் நடத்தப்பெற்றன. உபநிடதங்கள் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாய் கொண்டது.
வடுக வந்தேறி என்று கூறும் இனவாதிகள் பாரதி தாசனை துணைக்கு அழைப்பது கயமை
![]() |










