செவ்வாய், 26 ஜனவரி, 2021

டிஆர்பி முறைகேட்டுக்காக ரூ. 40 லட்சம் அர்னாப் லஞ்சம் கொடுத்தார்....

Image may contain: 2 people
Chinniah Kasi : தீக்கதிர் : மும்பை: அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவி-க்கு, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும்- டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரிக்க, லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டு, கடந்த அக்டோபர் மாதம் கையும்களவுமாக சிக்கினார். ‘ரிபப்ளிக் டிவி’ சேனலை அதிகமானவர்கள் பார்க்கும் பட்சத்தில், விளம்பர வருவாய் அதிகரிக்கும் என்பதால், அர்னாப் கோஸ்வாமியே மும்பையிலுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை லஞ்சம் கொடுத்து தனது சேனல்களை மட்டுமேபார்க்க வைத்தது ஆதாரங்களுடன் அம்பலமானது.இந்நிலையில், டிஆர்பி முறைகேட்டு வழக்கில், 2-ஆவது குற்றப்பத்திரிகையை மும்பை போலீசார் தற்போது தாக்கல் செய்துள்ளனர். அதில், டிஆர்பி மதிப்பீட்டு அமைப்பான ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் கவுன்சிலின்’ (Broadcast Audience Research Council - BARC) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோதாஸ் குப்தா, கைப்பட எழுதிக் கொடுத்த வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.

புலிகளின் சித்திரவதையில் மரணித்த தோழர் முகுந்தனின் செய்தி வரலாற்று ஆவணம்

Image may contain: 2 people, closeup, text that says 'தோற்றம் 14.01.1959 தோழர் முகுந்தன் ஆறுமுகம் முருகநேசன் (சுழிபுரம்)'
Dhayalini R Kannan : · முகுந்தன் (முருகநேசன்) தோழர் பற்றிய நினைவுக் குறிப்பு sdpt-mugunthanஎமது விடுதலைப் போராட்டத்தில் விளைந்த உன்னதமான இலட்சிய புருஷர்கள் வரிசையில் வரலாற்றால் கண்டுகொள்ளப்படாது போய்விட்ட சிலரில் முகுந்தன் தோழர் என்று அழைக்கப்படும் முருகநேசன் அவர்களும் ஒருவர். இவ்வாறு அவரது சிறப்புக்கள் மறைக்கப்பட்டதன் காரணம், ஏனைய விடுதலை அமைப்புகளின் பங்களிப்பை நிராகரித்து, இப் போராட்டத்தைச் சுவீகரித்து, அதை அழிவுப் பாதையில் இட்டுச்சென்று பாழாக்கிய வரலாற்றை அவரது மகிமை கேள்விக்குட்படுத்திவிடும் என்பதுதான்.
அவர் எத்தகைய உன்னதமான மனிதர் என்பதை அறிந்தால், அவரை வதைசெய்து கொலைசெய்தமைதான் அவரது பெரும் பங்களிப்புக்காக எம் போராட்டம் அவருக்குச் செய்த கைமாறா என்ற கேள்வி, எம் சமூகத்தின் மனசாட்சியை நிட்சயம் உறுத்தும்.
அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளையும் வெளிக்காட்டுவது, அவரது சகதோழர்களின் மனசாட்சிக்கான கடமையாகும்.

சசிகலா நாளை விடுதலை - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு

சசிகலா நாளை விடுதலை ஆகிறார் - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு
maalaimalar : விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை (புதன்கிழமை) விடுதலையாக உள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
சசிகலா

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. 

Dravidian Languages Day ... tribute to 700+ Tamils Martyrs sacrificed their life in the 1965 Anti Hindi Agitation.

No photo description available.

We Dravidians 2.0

Today is the day in 1965, The General Dyers of Cong govt who allegedly killed 700 plus protestors during the language agitation in Tamilnadu.
Image may contain: text that says 'மொழிப்போரில் உயிர் ஈகை செய்த /கொல்லப்பட்ட 700க்கும் மேற்பட்ட தமிழர்களின் நினைவாக ദ്രാവിഡ ഭാഷാ ദിനം ద్రావిడ భాషా దినోత్సవం திராவிட மொழி கள நாள் ஜனவரி 25 ದ್ರಾವಿಡ ನುಡಿಗಳ ದಿನ Dravidian Languages Day We Are South Indians WE DRAVIDIANS'
In fact the 700+ Tamils sacrificed their life for India..
They restored India's integration
They have secured the state rights
They have secured English and secured the future of India.
They have secured the self respect of every Linguistic group of India.
We observe that day as Dravidians Language Day.
Vazhga Dravidam

Kathir RS : · This is an Initiative from Bengal!! আজ এক পবিত্র দিন। ৬৫ বছর আগে আজকের দিনে আমাদের 700 অধিক তামিল ভাইবোন প্রাণ দিয়েছিল হিন্দি সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে। তাদের আত্মবলিদান ভারতকে হিন্দি রাষ্ট্র হতে দেয়নি। হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হতে দেয়নি। অহিন্দি জাতির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হিন্দি সম্রাজ্যবাদকে ধ্বংস করাই হবে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ভয়ঙ্করতম প্রতিশোধ। 

Today is a holy day. 65 years ago today, more than 700 of our Tamil brothers and sisters gave their lives to destroy Hindi imperialism. Their sacrifice did not allow India to become a Hindi state. Hindi was not allowed to be the state language of India. Our worst revenge against the oppression is to destroy Hindi imperialism through the united movement of the non-Hindi nations.

திங்கள், 25 ஜனவரி, 2021

சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி? .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.
இன்றும் கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர் இன்றும் கூட வேறு வேறு
பெயர்களில் வேறு வேறு நாடுகளில் பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.
நேதாஜி அவர்கள் நாசிப்படையில் இணையவில்லை என்றாலும் அவர்களிடம் ராணுவ உதவி கேட்டமையானது சாதாரண குற்றம் அல்ல. ஹிட்லரின் மனித குலவிரோத நடவடிக்கைகள் எல்லாம் நேதாஜிக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவர் அதை பொருட்படுத்தவில்லை.
நல்ல காலம் ஹிட்லர் நேதாஜிக்கு கடைசியில் கைவிரித்து விட்டார். இந்தியர்களை இன்னும் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரே ஆளவேண்டும் என்ற கொள்கையை நேதாஜியிடம் கூறி அவரை பக்குவமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். ஹிட்லர் நினைத்தால் நேதாஜியை என்னவும் செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.

30 எம்எல்ஏக்கள் ? சசிகலா தயார்..? உடையும் அ.தி.மு.க! கவர்னர் ஆட்சி?

nakkeeran - தாமோதரன் பிரகாஷ் : விடுதலைநாள் முடிவான நிலையில், சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற ஃப்ளாஷ் நியூஸ், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களாகவே காய்ச்சல் இருந்த நிலையில், புதனன்று மூச்சுத்திணறலால் கடுமையாக அவதிப்பட்ட சசிகலாவை சிறை மருத்துவர்கள் பரிசோதித்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பரிந்துரைக்க.... ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். பாதுகாப்பு என்ற பெயரில் யாரையும் நெருங்கவிடாமல் 300க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். யாரோ வி.வி.ஐ.பி.யிடம் ஒன் டூ ஒன் பேசி, அரசியல்ரீதியான நகர்வுகளை முன்னெடுக்க சசிகலா முயற்சிக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே சசிகலா மிகுந்த டென்ஷனில் இருந்தார். டிடிவி தினகரன் டெல்லிக்கு சென்று, தமிழக விவகாரங்களை கவனிக்கும் பா.ஜ.க. தலைவரான பூபேந்திர யாதவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதனையடுத்து, சசிகலாவை 27-ஆம் தேதி விடுதலை செய்வதற்கு பதில் 23-ஆம் தேதி விடுதலை செய்ய கர்நாடக அரசு ஆயத்தமானது. கூடுதல் பரோல் காரணமாக இளவரசிக்கு பிப்ரவரி 5தான் விடுதலை என்பதால் ஜனவரி 27-ஆம் தேதியே சட்டப்படி விடுதலை யாகிறேன். யாருடைய சலுகையும் வேண்டாம் என சசிகலா கூறிவிட்டார்.

மகள்களை நரபலியிட்ட பெற்றோர் உடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்.. ...ஆந்திர மாநிலம் சித்தூர்

மூட நம்பிக்கையில் பயங்கரம்:பெற்ற மகள்களை உடற்பயிற்சி அடித்து கொலைசெய்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்
January 25
15:14 2021
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசுப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜா டுடோரியல் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்
Image may contain: text that says 'Dr. PURUSHOTHAM NAIDU M.Sc, M.Phil, Ph.D ASSOCIATE PROFESSOR OF CHEMISTRY GOVT. DEGREE COLLEGE MADANAPALLE Smt. V. PADMAJA M.Sc (MATHS) GOLD MEDALIST CORRESPONDENT MASTERMINDS IT TALENT SCHOOL'

 nakkeeran - கலைமோகன் ": கல்வியறிவு, தொழில்நுட்பம் எனப் பல்வேறு வழிகளில் மனித சமுதாயம் மூடநம்பிக்கைகளை கைவிட்டு சற்று விலகி நடந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே மூடத்தனமான நம்பிக்கையின் மூலம் சில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்வியாளர்களாக இருக்கக்கூடிய, படித்த பெற்றோர்களே செய்திருக்கும் இந்த மூடத்தனமான செயல், ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசுப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜா டுடோரியல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இருவரும் நன்கு படித்தவர்கள். கல்வித்துறையில் இருவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 27 வயதில் அலக்கியா என்ற மகளும், 22 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

BBC : பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி

முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் ": தமிழக சட்டமன்றத் தேர்தல், தனிச் சின்னத்தில் போட்டி, பா.ம.கவுடன் கூட்டணி சாத்தியமா என்பது குறித்து எல்லாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியின் இரண்டாவது பகுதி இது. பேட்டியிலிருந்து: 

கே. தி.மு.க. கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி வரக்கூடும் என்ற பேச்சுகள் தற்போது அடிபடுகின்றன. அப்படியான சூழலில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பாட்டாளி மக்கள் கட்சி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும். இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார்கள். நாங்களும் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்திருக்கிறோம். ஒரு முறை அண்ணா தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில், அந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

இந்தத் தருணங்களில் கொள்கை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான விஷயங்கள் குறித்து விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தது கிடையாது.

மிரட்டல்- கெஞ்சல்: காங்கிரசுக்கு ஸ்டாலின் போட்டிருக்கும் புதுக் கணக்கு! (காங்கிரசுக்கு 20 தொகுதி?)

minnambalam : இதுகுறித்து ஸ்டாலினின் நலம் விரும்பிகள் அவரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.     அந்த நலம் விரும்பிகளின் வட்டாரத்தில் நாம் பேசியபோது... "2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களை பெற்ற காங்கிரஸ் வெறும் 5 இடங்களில்தான் ஜெயித்தது.                  அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவியை சம்பந்தப்படுத்தி அதிலும் திமுக தலைவர் கலைஞரின் மனைவியான தயாளு அம்மாளை சிபிஐ விசாரணைக்கு அழைத்து...           அந்த விசாரணையை கலைஞர் டிவி அலுவலகத்தில் வைத்து நடத்தி அதே நேரத்தில் கீழ்த்தளமான அறிவாலயத்தில் காங்கிரசுக்கான தொகுதி பேரத்தை அதிகாரத் திமிரோடு நடத்தி 63 தொகுதிகளை வலுக்கட்டாயமாக பெற்றது காங்கிரஸ். மத்தியில் ஆட்சியில் இருந்த போது இப்படி என்றால்... 2016 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.

2011 தேர்தலில் பெற்ற பாடத்தையடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே காங்கிரசுக்கு அதிக பட்சம் 30 தொகுதிகள் தான் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார். அப்போதைய திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் கலைஞர்.

டெல்லியில் நாளை பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

tamil.news18.com : டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் நாளை குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். குடியரசுத்தின நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பேரணி நடத்த விவசாயிகள் ஒப்புக் கொண்டதையடுத்து, போலீசார் அனுமதியளித்துள்ளனர்.
இதையடுத்து, காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை .. மும்பை உயர் நீதிமன்றம்

Manikandaprabu S | Samayam Tamil : தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறையாக கருத்தில் கொள்ளப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹைலைட்ஸ்:
  • பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை
  • விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது
  • ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது          நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் பாமக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

மminnambalam :ொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. “திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு சோர்ஸுகள் மூலமும், பல்வேறு தரப்புகள் மூலமும் திமுக கூட்டணி பற்றியும், அதிமுக கூட்டணி பற்றியும் பல தகவல்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. அதிகாரிகள் தரப்பிலும் ஸ்டாலினோடு டச்சில் இருப்பவர்கள் உண்டு. அந்த வகையில் அதிமுக - பாமக கூட்டணியில் இருக்கும் சில பிரச்சினைகளும் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன.                இந்தச் சூழலில்தான் கடந்த 21ஆம் தேதி நடந்த மாசெக்கள் கூட்டத்தில், 'திமுகவில் சேர இன்னும் சில கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.           நான்தான் கிடப்பில் போட்டு வைத்திருக்க்கிறேன்’ என்று கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். வன்னியர்களுக்கென தனி உள் ஒதுக்கீடு வேண்டுமென்று டிசம்பர் மாதத்தில் இருந்து போராட்டங்களைத் தீவிரப்படுத்திய ராமதாஸ்... அதை அடிப்படையாக வைத்தே பாமகவின் அரசியல் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதற்காகவே 25ஆம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தையும் அறிவித்தார்.ஆனால் முதல்வர் சார்பில் ராமதாஸிடம் இதுகுறித்துப் பேசிய பிறகுதான் 25ஆம் தேதி கூட்டத்தை 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஜனவரி 21ஆம் தேதி தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணியோடு கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ‘வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால் கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார்’ என்று பேசியது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

கோவையில் மருத்துவர் உமாசங்கர் திட்டமிட்ட கொலை ? உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோவையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை விவகாரத்தில் கைதான மருத்துவர் உமாசங்கர் கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என்று உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Vishnupriya R - tamil.oneindia.com : கோவை: மருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கிய சென்னை மருத்துவமனை சேர்மன் டாக்டர் உமாசங்கர் இன்று காலை கண்ணப்ப நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது விபத்தா இல்லை திட்டமிட்ட கொலையா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ோவை காந்திபுரத்தில் இயங்கி வந்தது எல்லன் என்ற பிரபல மருத்துவமனை. பிரபல மருத்துவரான 72 வயதான ராமச்சந்திரன் இதன் உரிமையாளர் ஆவார். இவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் (54) என்ற மருத்துவர். சென்னை மருத்துவமனை என்ற பெயரில், தான் ஒரு மருத்துமனையை நடத்தி வருவதாக கூறியுள்ள உமாசங்கர், அதன் கிளையை கோவையிலும் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கெனவே வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையை நிர்வகிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ராமச்சந்திரன், எல்லன் மருத்துவமனை கட்டடத்தை வாடகைக்கு விட ஒப்புக் கொண்டுள்ளார்.

மருத்துவர் சாந்தா : ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது

Image may contain: 1 person, sitting
மருத்துவர் சாந்தா
Adv Suguna Devi : · " இந்த பாருங்க சிஸ்டர்ஸ்! ஒருவேளை நான் நாளை விடைபெறக் கூடும். உடனே அழுது புலம்பி ஒரு நாள் பணி இங்கே கெடக் கூடாது; நாளை எப்போதும் போலான பணி, இன்ஸ்டிடியூட்டில் நடைபெற வேண்டும். நிறைய பேர் மாலை போட வரிசையில் வரக் கூடாது. வேண்டுமானால், மாலைக்கான காசை வாங்கி நம் அறக்கட்டளையில் போடச்சொல்லி, அதனை இன்னொரு புற்றுநோயாளியின் மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தலாம்; அப்புறம் 'எனக்கு மணி மண்டபம் கட்டுறேன்; நினைவகம் செய்யுறேன்', என நம் இந்த இடத்தையோ, அதற்கு காசையோ வீணாக்க கூடாது. என் சாம்பலை இன்ஸ்டிடியூட்டின் எல்லாப் பக்கமும் தூவி விடுங்கள்; சரியா? நான் பார்க்கமாட்டேன்னு நினைக்காதீங்க.. சொன்னதெல்லாம் ஒழுங்கா நடக்குதா என மேல இருந்து பார்ப்பேன். ஓகேயா?" என சிரித்தபடி கூறிக்கொண்டே நடந்து சென்று, ஆஞ்சியோ சிகிச்சைக்குப் போன அந்த 93 வயது முதிய பேராளுமை மருத்துவர் சாந்தா நிரந்தரமாக விடைபெற்றார் அந்த பேராளுமையின் நிரந்தப் பிரிவு நாளன்று அடையாறு மருத்துவமனையின் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 1000 க்கணக்கான ஊழியர்களும், செவிலியர்களும் கனத்த மனத்தோடு மருத்துவர் சாந்தா வின் வழிகாட்டுதல்படி, மேலிருந்தும் அவர்கள் புன்னகைக்கும்படி அங்கே கண்ணீரோடு காத்திருந்த ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்கள்.

மகாபாரதம் என்ற நாவல் கிபி 400க்கு பின்புதான் புனையப்பட்டது .. ஆதாரத்தோடு நிறுவிய திரு. கிருஷ்ணவேல் டி எஸ்

கிருஷ்ணவேல் டி எஸ் : · மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி நாம் எல்லோரும் படித்திருப்போம், அவர் மூலம் தான் இன்று சங்கீகளுக்கு நாம் ஒரு பர்னிச்சரை உடைக்க போகிறோம் அவர் கிமு 356ல் பிறந்து 323ல் மறைந்தவர், பதிவு செய்யப்பட்ட உலக வரலாற்றில் மொத்த உலகத்தையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வரவிரும்பியவர் அதற்கான வேலையை ஓரளவு வெற்றிகரமாக செய்தும் காட்டியவர். இந்த அலெக்ஸ்சாண்டர், கிரேக்கம், எகிப்து, துருக்கி, அரேபிய, இந்தியா என்று பல்வேறு பகுதிகளின் மீது படை எடுத்து சென்று வென்று அங்கெல்லாம் தன் ஆட்சி அதிகாரத்தை நிறுவியவர் இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், தன் அதிகாரத்துக்குள் வந்த எல்லா புதிய பகுதிகளிலும், முதல் வேலையாக அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் ஒரு புதிய நகரத்தை அவர் உருவாக்கினார்
மேலே சொன்ன கிரேக்கம், எகிப்து, துருக்கி, அரேபிய, இந்தியா உட்பட எல்லா பகுதிகளிலும் சேர்த்து அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் அவர் உருவாக்கிய நகரங்களின் எண்ணிக்கை 23
அதிலும் குறிப்பாக அன்று இந்தியாவின் ஒரு பகுதியாக கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானில் மட்டும் அவர் அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் உருவாக்கிய நகரங்கள் 4, அவை
அலெக்ஸாண்ட்ரியா அரியானா, இப்போதைய ஹெராத்,
அலெக்ஸாண்ட்ரியா புரோப்தாசியா, இப்போதைய ஃபரா,
அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா, இப்போதைய காந்தஹார்,
அலெக்ஸாண்ட்ரியா காகசஸ், இப்போதைய பக்ராம்
இவற்றில் அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா என்ற நகரம் சந்திரகுப்த மவுரியன் காலத்தில், செலுக்கஸ் நிகேடார் என்ற அலெக்ஸ்சாண்டரின் கவர்னர் ஆட்சியில் தலைநகரமாக இருந்தது,
இந்த கவர்னருக்கு 500 யானைகள் பரிசாக கொடுத்து, பதிலுக்கு அந்த கிரேக்கரின் மகளை திருமணம் செய்து கொண்டு அமைதி ஒப்பந்தம் செய்து கொள்கிறார் சந்திரகுப்த மவுரியன்.

கேரளா கடத்தல் கஞ்சா இலங்கை எங்கும் அமோக விநியோகம்? கட்டுக்கடங்காமல் பெருகும் கஞ்சா பாவனை

teavadai.com :இலங்கையில் வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்பது என்ன….? யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கிற்கான பொருளாதார தடைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் இருந்தே பெருமளவான பொருட்கள் கடல் வழியாக இலங்கையில் கொண்டு வரப்பட்டன. மண்ணெண்ணெய், கோதுமை மா, பற்றரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடாகவே பரிமாற்றப்பட்டன. கடல் வழியாக பலர் இந்தியாவுக்கு சென்று வருவதும் இடம்பெயர்ந்து செல்வதும் சர்வ சாதாரணமாக இடம்பெற்றது. ஆனால் அந்த காலப்பகுதியில் கூட வடக்கிற்கு போதைப்பொருளான கஞ்சா கொண்டுவரப்படவில்லை. அதனைப் பயன்படுத்துபவர்களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை. இறுக்கமாகவும் கட்டுக் கோப்புடனும் இருந்த தமிழ் சமூகம் இன்று என்ன நிலையில் நிற்கின்றது என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மக்களின் கலாசார பூமியாக கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நாளாந்தம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்படுவது என்பது தினமும் பத்திரிகைச் செய்திகளாகிவிட்டன.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தளவனூர் தடுப்பணை உடைந்தது-பொன்முடி தலைமையில் திமுக அதிரடி போராட்டம்!

Mathivanan Maran - tamil.oneindia.com : விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவனூர் தடுப்பணை உடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் இன்று திடீரென அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தடுப்பணை உடைப்பு தொடர்பாக அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவனூரில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. எனதிரி மங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

கதவணையால் மண் வெளியேற்றம் !  இது தொடர்பாக விசாரணை நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டப்பட்ட தடுப்பணை உறுதியாகவே உள்ளது. கதவணை திறக்கப்பட்டதால் மண் அடித்துக் கொண்டு வெளியேறுகிறது. இது பைப்பிங் ஆக்‌ஷன் என்போம். இப்படி நிகழ்வது எதிர்பார்த்ததுதான். இதனால் தடுப்பணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.

டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி; போலீசார் அனுமதி

dailythanthi.com : டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். புதுடெல்லி, டெல்லி எல்லையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு 500,000 தடுப்பூசிகளை பரிசாக வழங்கும் இந்தியா..!

/zeenews.india.com  :  Covid-19 தடுப்பூசிகளின் 'பரிசு' ஒன்றை அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் (Gotabaya Rajapaksa) கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஜனவரி 27 ஆம் தேதி இலங்கைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசி (Covishield) டோஸ் கிடைக்கும். ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய மெகா நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் Covid-19 தடுப்பூசிகளைப் (Corona vaccines) பெற்ற எட்டாவது நாடாக இலங்கை திகழ்கிறது. புதன்கிழமை தொடங்கி, இந்தியா தனது அண்டை முதல் கொள்கையின் ஒரு பகுதியாக பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளுக்கு, பூட்டான் 150,000 டோஸ், மாலத்தீவுக்கு 100,000 டோஸ், நேபாளத்திற்கு 1 மில்லியன் டோஸ், பங்களாதேஷுக்கு 2 மில்லியன் டோஸ், மியான்மர் (Myanmar) 1.5 மில்லியன் டோஸ் ஆகியவற்றைப் பரிசாக வழங்கியுள்ளது. சீஷெல்ஸ் 50,000 டோஸ் மற்றும் மொரீஷியஸுக்கு 100,000 Covid-19 டோஸ் பரிசாக வழங்கப்பட்டது.

தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..

Oneindia Tamil வழக்கம்போல, இந்த முறையும் விசிகவுக்கு சின்னம் பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.. விசிகவுக்கு என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.. அந்த கட்சிக்கென்று அடிப்படை உள்ளது.. கொள்கை உள்ளது.. கால் நூற்றாண்டாக தமிழகத்தில் களம் கண்ட கட்சி..! அந்த வகையில், தனித்தன்மை என்ற ஒன்று விசிகவுக்கு தேவையானதாக இருக்கிறது.. அப்படி கேட்பதில் எந்தவித தவறும் கிடையாது.. அது அவர்களின் தார்மீக உரிமையும், விருப்பமும்..!
திருமா இதே காரணங்களுக்காகத்தான், தனிச்சின்னத்தில் போட்டியிட போவதாக, முதலில் வைகோ சொன்னார்.. பிறகு திருமாவும் அறிவித்தார்.. ஆனால், திமுக எதையுமே கண்டுகொள்ளவில்லை.. அதற்கு காரணம், திமுகவை பொறுத்தவரை , இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. கூட்டணிகளுக்கு தொகுதிகளை அள்ளி தந்துவிட்டு, பெரும்பான்மையை இழக்கவும் அக்கட்சி விரும்பவில்லை.

தனிச்சின்னம் கூட்டணி கட்சிகளின் மீது அதிருப்தி எதுவும் இல்லையென்றாலும்கூட, எந்தவித விஷப்பரிட்சையிலும் இறங்க திமுக தயாராக இல்லை. அதனால்தான், இரட்டை இலக்கம் கேட்டு வந்த கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும் சீட் தரப்படலாம் என்றார்கள்.. அப்படியே தரப்பட்டாலும் பாதி தனிச்சின்னம், பாதி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டி வரும் என்றும் சலசலக்கப்பட்டது.. இதனாலேயே திமுகவிலும் கூட்டணி முடிவுக்கு வராமல் இழுபறியில் இருந்தது. இதில் விசிக இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம் உதயசூரியன்தான் என்று உறுதியாகவும் அறிவிக்கவில்லை.

காங்கிரசின் தடுமாற்றமும் திமுகவின் திசைமாற்றமும்!

Image may contain: 2 people, closeup

சாவித்திரி கண்ணன் : காங்கிரசின் தடுமாற்றமும், திமுகவின் திசைமாற்றமும்!·சரியான தலைமையை  அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம், கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர் களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி! புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! நிர்வாகத் திறமையோ, நாணயமோ, பொது நலன் சார்ந்த அக்கரையோ இல்லாமல் மேலிடத்து லாபி மூலம் அதிரடியாக புதுச்சேரி அரசியலில் பிரவேசித்து, நமச்சிவாயத்திற்கு அல்லது வைத்தியலிங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய முதல்வர் பதவியை அடைந்தார்!

இதனால் சொந்தக் கட்சிக்குள் இன்று வரை நம்பிக்கையானவர்கள் அவருக்கு அமையவில்லை! சதா சர்வகாலமும் தன் தலைமை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஆட்சியில் அதிகாரப் பரவலையும் அவர் முறையாக செய்யவில்லை! இதனால் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளாமல் தவிர்த்தார்!

இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான்.

பாலகணேசன் அருணாசலம் : · கடவுள் வியாபாரிகள் எந்த ஒரு

கொறைச்சலும் இல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கானுக... நான் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிவன் கோவிலுக்கு தவறாமல் சென்றுவிடுவேன்...25 வருடத்துக்கு முன்பெல்லாம் எங்க ஊரு சிவன் கோவிலில் விஷேசம் நடப்பதெல்லாம் வருடத்துக்கு ஒருமுறைகூட இருக்காது. . அப்படியே இருந்தாலும் கூட்டம் அவ்வளவாக இருக்காது, மேலும் பிரதோஷத்துக்கு உற்சவர் பிரகாரத்தில் வலம் வர பல்லாக்கை தூக்குவதற்கு ஆள் கிடைக்காது... ரோட்டுல போகிறவர் வருபவரை கெஞ்சி அழைத்து தூக்கவைத்ததாக ஊர்ப் பெரியவர்கள் இப்பொழுது ஆன்மீகம் என்னும் பெயரில் கோவில்ளில் மக்கள் பொழுதுபோக்கு கூத்தடிப்பதைப் பார்த்து வேதனையுடன் சொல்லக் கேட்டிருக்கிறேன்
இதுபோல ஏகப்பட்டது .. இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான். ..முன்பு கோவிலுக்கு செல்லும் கூட்டம் குறைந்திருந்தது இப்போது அதிகரித்திருப்பதன் காரணம் கடவுளுக்கு வந்த திடீர் சக்தியினால் அல்ல... மக்கள் கையில் சில்லரை புரளுகிறது அதுதான் காரணம்...இதுமூடநம்பிக்கையா என்றால் கிடையாது
கையில் ஏத்தம் குறைந்தால் பொழப்பத் தேடித் தானாக போவான்....
நிற்க..

Tandav என்ற சீரியலை ஏன் அனைவரும் பார்க்க வேண்டும் என்றால்.....

 

சுமதி விஜயகுமார் : · நான் தீவிர ஷாருகான் ரசிகையாய் இருந்த சமயமே, ஷாருக்குடன் நடித்த ஒரு நடிகர் என்னை ஈர்தார் என்றால் அது Saif Ali Khan. Kal Ho Na Ho திரைப்படத்தில் shahrukh தியாகியாக ஸ்கோர் செய்ய முயற்சிக்கையில், saif ஒரு துருதுரு அப்பாவியாய் மனதை கவர்ந்திழுப்பார். அதன்பிறகு நான் பார்த்த படம் Hum Tum. ஒருவிதமான, எதார்த்தமான காதல் கதை. அவரின் படங்களை தேடி தேடி பார்த்ததில்லை என்ற பொழுதிலும், அவரை பிடிக்கும். இப்போது Tandav என்ற Amazon Prime ல் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 9 பாகங்களை கொண்ட முதல் சீசன் மட்டுமே வெளியாகி இருக்கிறது. முதல் 3 எப்டிசொட்களில் மிரள வைத்திருக்கிறார். சர்வாதிகாரியான வில்லன் கதாபாத்திரம். கனகட்சிதமாய், மிக பொருத்தமாய் பொருந்தி போயிருக்கிறார்.Image may contain: 5 people, text that says 'f Ûg NAN BACK W HEN BJP ASKS FOR Ban? WHAT SHOULD WE Do? me AMAZON ORIGINAL TANDAV atch it & SPREAD THE WORD'

ஆசீவகம் ! சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் வேதத்திற்கும் முன்பிருந்த சிந்தனை மரபு

ஆசீவகம்  வேதங்கள் தொகுக்கப்படுவதற்க்கு முன்பே உருவான மரபு ஆகும். இது பெளத்தம் சமணம் தமிழகத்தில் கால் பதிப்பதற்க்கு முன்பே தமிழகத்தில் தோன்றி வட இந்தியா முழுமைக்கும், இலங்கையிலும் பரவி இருந்த ஒரு சிந்தனை மரபு. இதற்கான சான்றுகள் தமிழகத்தில் அதிகம் கிடைகின்றன. இம்மரபுக்கு பின்னரே பெளத்தமும் சமணமும் தோன்றின. புத்தர் தனக்கு முன்பிருந்த ஒரு மதத்தினை சீர் செய்யவே விரும்பியதாக கூறியுள்ளார். புத்தருக்கு முன்பிருந்த மதங்கள் ஆசீவகமும், ஜைனமுமே. அன்று வேதமதம் வளர்ச்சியின் தொடக்கதில் இருந்தது. ஆசீவக மதத்தை பற்றி ஆய்வு செய்தோரெல்லாம் வட இந்தியாவை அடிப்படையாக கொண்டே ஆய்வு செய்தனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாசியம் ஒருவரே தமிழக இலக்கியங்களையும் சேர்த்து ஆய்வு செய்தார்.

ayyanar123 ஆசீவகம் ஒரு பார்வை ! முன்னுரை . ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அங்கு வாழ்ந்த மக்கள் அறிவு பூர்வ நாகரீக மக்களாக இருந்தனர். 

ஈரானியனிய மக்கள் தான் சிந்து சமவெளி மக்களுக்கு நாகரீகத்தையும் விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்ற கருத்து வட நாட்டவர்களாலும், வெளிநாட்டவர்களாலும், திட்டமிட்டு பரபப்பட்டு வருகின்றது. ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த போது அவர்களுக்கென தனி மதம் இல்லை. அவர்கள் காக்கேசிய நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்த நாடோடி சமூகத்தினர். அவர்களுக்கென தனிமதமும் இல்லை எழுத்து மொழியும் இல்லை. அவர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கினர். பின்னர்... இன்றைய இந்திய நிலத்திலிருந்த வழிபாடுகளை தாங்களும் பின்பற்ற தொடங்கினர். ஆரியர்களின் மதம் வேத மதம். இயற்கையின் முதல்வனான இந்திரனையே அவர்கள் முதல் தெய்வமாக வணங்கினர் சிவனை அல்ல. நான்கு வேதங்கள், மனு தர்மம் இவற்றைக்கொண்டு வேள்வியிடல், ஆடு, மாடுகளை உயிரினங்களைப் பலியிடல், சாதியத்தை பேணுதல் போன்ற செயல்கள் நடத்தப்பெற்றன. உபநிடதங்கள் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாய் கொண்டது.

வடுக வந்தேறி என்று கூறும் இனவாதிகள் பாரதி தாசனை துணைக்கு அழைப்பது கயமை

Image may contain: 3 people, people standing and people on stage
தமிழ் மறவன் : · தோழர்களே! இனவாதம் பேசுகிற இனவாதிகள் "வந்தேறி" வடுகர் எனும் சொல்லாடல்களை பயன்படுத்துவதோடல்லாமல் "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!" எனும் பாவேந்தரின் பாடல் வரிகளில் வரும் இந்த நான்கு வரிகளை மட்டுமே எடுத்தியம்புவர். இது பாவேந்தரையே இழிவுபடுத்துகிற, தங்களின் இனவாத இழிவான செயலுக்கு புரட்சிக்கவியை துணைக்கு அழைத்துக் கொள்கிற மோசமான செயலாகும். ஏனெனில் அதே பாடலில்..
"நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
நம்முளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும்
நாமெல்லாம் ஒரேவகுப்பார் என்ற எண்ணம்
நன்றாக நம்முணர்வில் ஏற வேண்டும்
தீமையுற நமைஎல்லாம் சமையம், சாதி
சிதறடிக்க இடங்கொடுத்தல் நமது குற்றம்.
ஆமைஉயிர் காக்குந்தன் முதுகின் ஓட்டை
அகற்றென்றால் அவ்வாமை கேட்க லாமா?" என இனவாதிகளை செருப்பாலடித்ததைப் போன்ற வரிகளை மிக வசதியாக மறைத்து விடுகின்றனர்.