திங்கள், 7 மே, 2018

வீடுதேடி வந்து கல்லூரியில் இடம் கொடுத்த கலைஞர் அரசு ... அந்த இட ஒதுக்கீட்டுக்கு NEET வேட்டு !

Srinivasan J : பிறந்து வளர்ந்தது குக்கோ குக்கிராமம். 10 ம் வகுப்பு வரை உள்ளூர்
பள்ளி. போஸ்ட் பாக்ஸ் டவுசரில் அங்கங்கே ஒட்டி மஞ்சப்பையுடன் முடித்தேன். 12 ம் வகுப்பு வெளியூர். பேண்ட் போட்டே ஆகவேண்டும் என்பதால் முதன் முறையாக ஒரே ஒரு பேண்ட் எடுத்து இரு வருடமும் அதே தான். முதன் முதலாக செருப்பும் அப்போதுதான்.. ரப்பர் செருப்பு. 1989 ம் வருடம்.. 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண். engineering medicine பற்றிய பெரிய அறிவு இல்லை. கலைஞர் மீண்டும் முதல்வராகிறார்.
20 சதவீதம் MBC இட ஒதுக்கீடு அளிக்கிறார். இட ஒதுக்கீடு என்றால் என்னெவென்றே தெரியாத வயது.. அதாவது ஊர். எல்லோரும் இன்ஜினியரிங், மெடிசின் அப்பளை பண்ணும்போது நானும் அப்பளை பண்ணேன். பின் மறந்தே போனேன். ஒரு நாள் நல்ல மழை.. கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. எங்கள் ஊரில் உள்ள போஸ்ட் மேன் வந்து ஒரு கவரை தருகிறார். பிரித்து பார்க்கிறேன். சேலம் பொறியிற் கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான கடிதம். பெரு மகிழ்ச்சி எல்லாம் அடையவில்லை. பெருமகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற அந்த அறிவு கூட இல்லை.

பாஜக எம் எல் ஏ கோபால் :பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமண நிச்சயத்தால் லவ் ஜிகாத்தை தடுக்கலாம்

சிறு வயது திருமணம்: பாஜக  எம்.எல்.ஏ யோசனை!மின்னம்பலம்: பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணத்தை நிச்சயித்தால் லவ் ஜிகாத்தைத் தவிர்க்கலாம் என்று மத்தியப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஆக்ரா மால்வா தொகுதி எம்.எல்.ஏ ஆக கோபால் பார்மர் உள்ளார். இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “திருமண வயது 18 என்ற நோய்வந்த பிறகுதான் பெண்கள் காதலித்து ஓடத் தொடங்கியுள்ளனர்” என்று சர்ச்சை கருத்தைக் கூறியுள்ளார்.
“லவ் ஜிகாத் என்ற வார்த்தை இந்துத்துவா அமைப்புகளால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய ஆண்கள் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றுகின்றனர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

சிறுமி ஆசிபா வழக்கு விசாரணையை பஞ்சாப் கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு


மாலைமலர் :ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், சண்டிகருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பிரபல தாதா ராக்கெட் ராஜா துப்பாக்கி முனையில் கைது: திடுக்கிடும் பின்னணி தகவல்

tamilthehindu :கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா படம்: சிறப்பு ஏற்பாடு திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தாதா ராக்கெட் ராஜா தேனாம்பேட்டை போலீஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடசத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை கைது செய்தனர். ராக்கெட் ராஜா கைது பின்னணி குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல தாதா ராக்கெட் ராஜாவை கர்நாடகா மற்றும் தமிழக போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர். ராக்கெட் ராஜாவிடமிருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

தமிழகத்தில் வடஇந்தியர்களின் குடியேற்றம்? நீட் அதற்கு வழிவகுக்கும்? டாக்டரின் பகீர் விடியோ

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்!

மின்னம்பலம்: திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால்
குற்றமாகக் கருத முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் துசாரா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். துசாராவுக்கு 18 வயது நிரம்பிய நிலையில் நந்தகுமாருக்குத் திருமண வயதான 21 வயது பூர்த்தியடையவில்லை.
‘இந்தத் திருமணத்தை ரத்து செய்து தனது மகளை தன்னிடம் அனுப்ப வேண்டும்’ என்று கேரள உயர் நீதிமன்றத்தில் துசாராவின் தந்தை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
எனினும் இருவரும் கணவன் மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதைத்தொடர்ந்து தனது மகளை நந்தக்குமாரிடமிருந்து பிரித்து அனுப்புமாறு உச்ச நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் (மே 5) நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக்பூஷண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீட்: மேலும் ஒருவர் மரணம்!. சிவகங்கை மாவட்டம் திரு.கண்ணன்.

நீட்: மேலும் ஒருவர் மரணம்!மின்னம்பலம் :நீட் தேர்வு எழுதிய மகளை மதுரையிலிருந்து ஊருக்கு அழைத்து வரும்போது மாணவியின் தந்தை கண்ணன் மாரடைப்பு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஐஸ்வர்யா, நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், மதுரை பசுமலையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை தேர்வுக்காக மகளை மதுரைக்கு அழைத்துச் சென்றார் கண்ணன். நீட் தேர்வு எழுதிவிட்டு ஊருக்குச் செல்லும்போது மகள் ஐஸ்வர்யாவிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கண்ணன் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மணல் மாபியா.. போலீஸ்காரர் அடித்து கொலை ,, நெல்லை மாவட்டத்தில் காவலர் ஜெகதீஷ் .

 Sand mafia: Police man beaten to death in Nellai district tamil.oneindia.com -Veera Kumar சென்னை: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெகதீஷ் என்பவர் இரும்பு கம்பியால் தலையில் அடித்தும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
பரப்பாடி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முற்பட்டபோது நேற்று இரவு ஜெகதீஷ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் காயத்தோடு அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ரோந்து செல்வதாக பைக்கில் கிளம்பியுள்ளார் ஜெகதீஷ். ஆனால், அவரை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 கோடியில் ஜெயா நினைவு மண்டபம் .. எடப்பாடி பன்னீர் ஜோடியாக மாலையுடன் யாகசாலையில் பூமி பூஜை

ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா யாகத்துடன் தொடங்கியதுதினத்தந்தி :முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு மொினாவில்
நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பு
யாகங்களுடன் இன்று தொடங்கியது. சென்னை, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம்  ஏற்கனவே அறிவித்தது. இந்த மண்டபம்  கட்டுவதற்காக சுமாா் ரூ.50.80கோடியில் அளவில்  டெண்டா் விடப்பட்டன. 
இதைத்தொடா்ந்து இன்று காலையில் மொினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில்  மண்டபத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள்   காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.

ஞாயிறு, 6 மே, 2018

பிரகாஷ் ராஜ்.:மோடிக்கு எதிராக பேசினால் என்னை பாகிஸ்தான் போக சொல்கிறார்கள்.

Shankar A : எழுத்தாளர் கவுரி லங்கேஷின் மரணம் என்னை மாற்றியதா
என்றால், ஆம் கவுரி மரணம் என்னை மாற்றியது. மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது. அவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார். அவரின் குரல் அடங்கிய போது, அது என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நாம் எல்லோரும் அவரை தனியாக போராட வைத்து விட்டோம்.
ஆனால் இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். ஆனால், என் குரலை இப்போது நிறுத்த பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு யாரும் இல்லை.பாஜக மட்டும்தான். மோடியிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று கேட்டால், உடனே அவர் நேருவை பற்றி பேசுகிறார்; திப்பு சுல்தான் பற்றி பேசுகிறார்; 100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பேசுகிறார் என குறிப்பிட்டார்.
இந்த 4 வருடம் என்ன நடந்தது என்று பேசுவது இல்லை. நான், ஏன் என் தாத்தா காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு ஓட்டு போட வேண்டும்? மோடி எவ்வளவு பேசினார், ஆனால் என்ன செய்தார்? நான் மோடிக்கு எதிராக பேசினால் உடனடியாக என்னை பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். அங்கு தீவிரவாதமும், வறுமையும் இருக்கிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன், அங்கே மதம்தான் அரசியலை தீர்மானிக்கிறது. ஒரு மதம் நாட்டை ஆண்டால், இப்படித்தான் பாகிஸ்தான்போல இந்தியாவும் ஆக வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்களா ?

நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்?

IMG_2860_13096 நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? IMG 2860 13096IMG_2846_13337 நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? IMG 2846 13337விகடன்: நீட்’ தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இந்நிலையில் இந்த வருடமும் ’நீட்’ தேர்வு பயத்தினால் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி சிவசங்கரி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. தகவலின் உண்மை நிலையை அறிய முடிவெடுத்தோம். அதில் குறிப்பிட்டுள்ள மாணவியின் வீடு ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் வருவதால் அதன் உதவி ஆய்வாளர் வீரபுத்திரனைத் தொடர்பு கொண்டு வழக்கின் விபரங்களைக் கேட்டோம். அதற்கு, “அப்படியெல்லாம் இல்லை சார். அந்தப் பொண்ணு செத்துப்போயி ஒரு வாரம் ஆகுது.

இந்த முகங்கள் நினைவிருக்கிறதா உங்களுக்கு ?.. NEETட்டாதே ...


Anitha N Jayaram:  இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்கள் குறித்து வாசித்தவர்களுக்கும் கூட மறந்திருக்கலாம். இந்த 16 வயதுப் பெண்ணும் அவர் தாயும் 2016ல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாலை முதல் திகைப்புடனும் பயத்துடனும் போவோர் வருவோரிடம் தகவல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
தன் மூன்றாவது சுற்று நடைபயிற்சியின் போது ஏதும் அறியாது தடுமாறி நின்று கொண்டிருந்தவர்களை அணுகி விசாரித்தார் சரவணன் என்ற கணினி நிறுவன ஊழியர். அப்போது தான் தெரிந்தது அக்ரி கவுன்சலிங்குக்காக கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைகழகத்தின் அண்ணா அரங்கத்திற்கு வரச்சொல்லி வந்த கடிதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மாறி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பது. 8.30 மணி கோயமுத்தூர் கவுன்சலிங்குக்கு 6.30 மணி வாக்கில் சென்னையில் இருக்கிறார்கள்.
1017 மதிப்பெண் எடுத்த அந்தப் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்க, நல்லுள்ளம் கொண்ட அவர் உடனடியாக அவர்கள் இருவரையும் விமானத்தில் கோவை செல்ல ஏற்பாடு செய்துவிட்டு கோவையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தொலைபேசியில் நிலையை விளக்கிச் சொல்லியதோடு நில்லாமல் சக நடைபயிற்சி செய்யும் நண்பர்கள் மூலம் உணவு வரவழைத்து அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினார்.
திருச்சி அருகே உள்ள கிராமத்திலிருந்து வந்த ஸ்வாதி என்ற அந்தப் பிள்ளைக்கு பி.டெக் பயோடெக்னாலஜி பிரிவில் அன்று இடம் கிடைத்தது..
நிற்க..

ஸ்டாலின் : தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தமிழகத்துக்கு தேவை இல்லை !

tamilethehindu :"ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்விலிருந்து நிரந்தர
விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல், மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டால், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது" என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "தமிழக கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்துடன் கொடூர ஆட்டம் ஆடி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். டாக்டர் சீட் பெறும் அளவுக்கு +2 தேர்வில் மதிப்பெண் பெற்றும், நீட் கொடுமையால் மருத்துவம் படிக்க முடியாமல் போன மாணவி அனிதாவின் உயிரை சென்ற ஆண்டு பறிகொடுத்தோம். நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் ஒதுக்கி, தமிழக மாணவர்களையும் அவர்களுக்குத் துணையாக சென்ற பெற்றோரையும் அலைக்கழிக்கச் செய்து, மன உளைச்சலுக்குள்ளான கொடூரத்தால் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியை இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம்.

கனிமொழி கடும் குற்றச்சாட்டு : தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காகத்தான் மத்தியரசு வெளிமாநிலங்களில் .

விகடன் விகடன் :கே.குணசீலன்- ம.அரவிந்த் : தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு வெளி மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியதாக தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூரில் திமுக சார்பில் தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் நடடைபெற்றது. தி.மு.க. மகளிரணி மாநிலச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் `நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்று தி.மு.க. போராடி வருகிறது. இந்த நேரத்தில் நீட் தேர்வு மையம் போதிய அளவில் தமிழகத்திற்கு ஒதுக்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததன் மூலம், அவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும். மேலும் ராஜஸ்தான் செல்லும் ரயில் தாமதமாக சென்றதால் அங்கு தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. முத்தலாக் தடைசட்டம், நீட் தேர்வு போன்றவற்றை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக முத்தலாக் தடைசட்டம் அமல்படுத்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 7 இந்திய பொறியியலாளர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்

tamilthehindu :ஆப்கானிஸ்தானில் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 7 இந்திய பொறியாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்க அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் இன்னமும் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ளது. தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடந்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் சமீபத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாயினர். 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை சீர்குலைக்கும் நோக்கத்த்துடன் இந்த தாக்குதல் நடந்தன. இதுபோலவே துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் துணையுடன் உள்ளூர் ராணுவமும் பதிலடி தாக்குதல் நடந்தி வருகிறது.

சீட் கிடைக்காமல் ரயிலில் நின்று கொண்டே பயணித்த கிருஷ்ணசாமி தேர்வு மையத்தை தேடியும் அலைந்தார்

Shyamsundar- Oneindia Tamil  சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவர் நேற்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்ததாக கூறப்படுகிறது.
 திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனுடன் கேரளாவின் எர்ணாகுளம் சென்றவர், மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இரவு முழுக்க பயணம் செய்து, மகனுடன் காலையில் தூங்காமல், தேர்வு அறையை கண்டுபிடித்த அலைச்சலில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு கடைசி நேரத்தில் வேறு மாநிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக அவசரம் அவசரமாக கேரளா செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் இவர்களுக்கு தட்கலில் கூட டிக்கெட் கிடைக்கவில்லை.

மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு! கிருஷ்ணசாமியின் இறப்புக்கு ,,,

மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு!மின்னம்பலம் : கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை மறைவு தெரியாமல் தேர்வெழுதிய மாணவன், தகவலறிந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலைக் கண்டு கதறி அழுதார். இதையடுத்து கிருஷ்ணசாமியின் உடல் இன்று இரவு திருத்துறைப்பூண்டி விளக்குடிக்கு எடுத்து வரப்படுகிறது.
கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் உள்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்விற்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்துச் சென்று, விடுதியில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திரு.கிருஷ்ணசாமி அவர்களின் மனைவி திருமதி. பாரதி மகாதேவி அவர்களை நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டேன்.

விளக்குடியில் வெடிக்கும் போராட்டம் ... இறந்த கிருஷ்ணசாமியின் (செஸ் மாஸ்டர் ரமேஷ்) சொந்த ஊர் ..

போராட்டக் குடியாகும் விளக்குடி!மின்னம்பலம்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது விளக்குடி. ‘அய்யோ நம்ம செஸ்மாஸ்டர் ரமேஷ் இறந்துட்டாரா?’ என்று விளக்குடியே இன்று விக்கித்து நிற்கிறது.
ஆம்... திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரத்தில் அவர் பெயர் ரமேஷ்தான். சான்றிதழில்தான் அவரது பெயர் கிருஷ்ணசாமி. இதனாலேயே பல பேருக்கு டிவி பார்த்ததும் கிருஷ்ணசாமியா யார் என்ற கேள்வி எழுந்தது. மெல்ல மெல்ல அவரைப் பற்றிய விவரங்கள் வெளியான பிறகுதான் ஐயோ நம்ம ரமேஷா என்று அதிர்ச்சி அடைந்து திருத்துதுறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் இருந்து விளக்குடியில் உள்ள அவரது வீட்டை நோக்கிச் சென்றிருக்கிறார்கள் பலரும்.
ரமேஷ் என்கிற கிருஷ்ணசாமியின் மனைவி பாரத மகாதேவி, தலைமை ஆசிரியையாக இருக்கிறார். இவர் மாற்றுத் திறனாளி. தொலைக்காட்சியில் தனது கணவர் சடலமாக இருப்பதையும் தன் மகன் அழுதுகொண்டிருப்பதையும் பார்த்து கதறிக் கொண்டிருக்கிறார்.

அப்பா எங்கே? தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு மையத்தில் இருந்து வெளியே ...

அப்பா எங்கே?
மின்னம்பலம் :தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதிய மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு முடிந்தபிறகு தகவல் தெரிந்து மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்த தந்தை கிருஷ்ணசாமியின் உடலைக் கண்டு கதறி அழுதார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் நாளந்தா பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் எர்ணாகுளம் சென்ற கிருஷ்ணசாமியும், கஸ்தூரி மகாலிங்கமும் அங்குள்ள ஏர்லைன்ஸ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
கஸ்தூரி மகாலிங்கம் இன்று காலை நீட் தேர்வு எழுதச் சென்ற நிலையில், விடுதி அறையில் கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாகிய நிலையில், தந்தை மரணமடைந்தது தெரியாமல் மாணவர் தேர்வெழுதியது அப்பகுதியில் இருந்த தமிழக பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
தேர்வு முடிந்த நிலையில் மையத்தில் வாயிலில் செய்தியாளர்கள் அதிகமாகக் கூடியிருந்ததால் மாணவர்கள் அனைவரும் அரை மணி நேரம் தாமதமாகவே வெளியே அனுப்பப்பட்டனர். மகாலிங்கத்தை கேரள காவல்துறையினர் தங்களது வாகனத்தில் ஏற்றி கிருஷ்ணசாமி உடல் வைக்கப்பட்டிருந்த சிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு


நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்புமாலைமலர் :கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுதும் மகனுக்கு துணையாக சென்று மாரடைப்பால் உயிரிழந்த திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவனந்தபுரம்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார்.
இன்று காலை மகன்  தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் கிருஷ்ணசாமியின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின.;
இந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார்.

இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா ...
Savukku : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானதாக அறியப்படும் அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி (ஓவர் இன்வாய்ஸ்) மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கின்  பூர்வாங்க விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தனது “அதிகார எல்லை வரம்புக்குள் வரவில்லை” என்ற சொதப்பலான ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்து மூடிவிட்டது. இதன் மூலம் இந்த விசாரணை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக  கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ ஒரு அறிக்கை  தாக்கல் செய்தது. அதில் இந்த விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் உள்ள ஒரு பரிமாற்ற நெட்வொரக் தொடர்பானது. ஆகையால் இது மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் ஒரு திட்டம் என்று அந்த அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

தமிழகம் : படிக்க வா , உணவு தருகிறேன் ... சீருடை தருகிறேன் .. பஸ்பாஸ் தருகிறேன் சைக்கிள் தருகிறேன் .. கம்பியுட்டர் தருகிறேன் ...

 பெரிய அளவுக்கு கிளிக்
Nambikai Raj :  ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க
சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'
"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு
'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"
'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'
"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"
'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"
'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'
"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"
'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'
"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"
'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'
"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"
'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'
"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம், சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"

பிரகாஷ் ராஜ் இன் இந்திப்பட வாய்ப்புக்களைக தடுத்த பாஜக தலைவர்கள் / குண்டர்கள் .


மின்னம்பலம்: மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவதால் பாலிவுட் வாய்ப்புகள் முழுவதும் தடைபட்டுள்ளதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியையும் மத்திய அரசின் கொள்கைகளையும் தொடர்ந்து விமர்சித்து வருபவர் பிரகாஷ்ராஜ். இவரது நீண்ட கால நண்பரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பின் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகிறார்.
பெங்களூரில் டைம்ஸ் நவ் கான்கிளேவ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ்ராஜ், “நான் கேள்விகள் கேட்கத்தொடங்கிய பின் பாலிவுட் பட வாய்ப்புகள் முழுவதுமாக நின்று போனது. ஆனால், தென்னிந்தியத் திரையுலகில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தமிழக வணிகர்களைக் குறிவைத்து இருமுனைத் தாக்குதல்" - மு.க.ஸ்டாலின்!

ஸ்டாலின்vikatan : ஜெ.அன்பரசன் ஶ்ரீனிவாசலுஇந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சென்னை வேலப்பன்சாவடியில் இன்று காலை வணிகர் சங்கப் பேரமைப்பின் 35-வது வணிகர்தின மாநில மாநாடு தொடங்கியது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வணிகர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியக் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

சாருஹாசன் அதிரடி : ரஜினியும் எம்ஜியாரும் ஒண்ணும் செய்யல ... பேட்டி youtube ..