புதன், 30 செப்டம்பர், 2015

விஜய், நயன்தாரா, சமந்தா.. 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னையில் நடிகர் விஜய்க்கு
சொந்தமான நீலாங்கரை வீடு மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை மேற்கொண்டனர். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே உள்ள இயக்குநர் சிம்புதேவன் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த புலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பல கோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருப்பதாக சொல்லப்படும் மதுரை பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை கீழத்துரையில் உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் வீடு சாலிகிராமம் தேவராஜ நகரிலும், அவரது அலுவலகம் வளசரவாக்கத்திலும் உள்ளது. அந்த இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. புலி படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் சென்னை அலுவலத்திலும் சோதனை நடைபெற்றது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்

சென்னை:'தேர்தல் அறிக்கையில் கூறியதை, நிறைவேற்றவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டியது.இதுதொடர்பாக, சட்டசபை யில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - சக்கரபாணி: காவிரியில் தண்ணீர் விட, கர்நாடகா அரசு மறுப்பதை கண்டித்து, டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகா முதல்வர், அனைத்துக் கட்சியினரையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, வறட்சி நிவாரணம் கோரியுள்ளார். தமிழக முதல்வரும், அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பன்னீர்செல்வம்:
காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சக்கரபாணி: எங்கள் கட்சியை சேர்ந்த, ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரின் தொகுதிகளில், மூன்று ஆண்டுகளாக, தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் நடக்கவில்லை.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்


thayagam.com மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படும் தற்போதைய தொழில் நுட்பம் இந்த நனோ தொழில் நுட்பம். ஆனால், இதில் பல ஆபத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நனோ துணிக்கைகள் புற்றுநோய், உடல் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தல், சுற்றாடலை மாசு படுத்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
அதுசரி, நனோ தொழில்நுட்பம் என்பது தான் என்ன? டைட்டேனியம், நாகம், வெள்ளி போன்ற உலோகங்களை எரித்தோ, அரைத்தோ மிகவும் மெல்லிதான பவுடர் தயாரிக்கப்படுகிறது. மெல்லிதான என்றால் அதன் அளவு ஒரு மீட்டரை நூறு கோடியால் பிரித்து வரும் அளவு. ஒரு மயிரின் தடிப்பை பத்தாயிரம் தடவை பிரிக்கும் அளவு. இது ஒரு மூலக்கூறு அளவு வரைக்கும் செல்லும். இந்த பவுடரை வேறு பொருட்களுடன் கலந்து பூச்சாகப் பூசப்பட்டே இந்த நனோ துணிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. நனோ அளவில் இருக்கும் இந்தத் துணி;க்கைகள் புதிய இயல்புகளைப் பெறுகின்றன. மின்னைக் கடத்துதல், றப்பர் போல இழுபடுதல், ஒளியை ஒட்புக விடுதல், நிறம் மாறுதல் போன்ற இயல்களை இந்த துணிக்கைகள் கொண்டிருக்கின்றன. நனோ அளவில் அரைக்கப்படும் தங்கம் அதன் அளவைப் பொறுத்து சிவப்பாகவோ, நீலமாகவோ இருக்கும்.

ஜெர்மனியில் மகளை கொலை செய்த பாகிஸ்தானியர்....மகளின் இஸ்லாமிய விரோத போக்காம் ...காதல்...


A Muslim man has confessed to strangling his 19-year-old daughter to death with his bare hands after learning from police she had been caught shoplifting condoms to have sex with her forbidden boyfriend. Asadullah Khan and his wife Shazia then dressed dead daughter Lareeb, a dental technician, in her clothes. They then wheeled her in a wheelchair from their high-rise apartment to the family car, drove to a secluded embankment in their home city of Darmstadt in Germany, and tipped the corpse down it. Read more: http://www.dailymail.co.uk/news/article-3251787/Muslim-father-strangled-daughter-19-death-honour-killing-caught-stealing-condoms-sex-forbidden-boyfriend-Germany.html#ixzz3n8UXfZ59 Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
The court heard Nida is now in therapy and has nothing more to do with her parents. Shazia said that on the night of the murder Lareeb had quarelled again with her father and hit him. He later crept into her room as she slept, knelt astride her and strangled her. 'I couldn't stop him,' the mother said in a statement read by her lawyer. 'I have rheumatism and didn't have the strength to fight him off. I wanted to scream, but I couldn't. 'Lareeb stayed away from the home for several nights in a row and stopped wearing the headscarf. One day we received a letter from the police saying she had been caught trying to steal condoms. 'At this point it became clear that there was sexual contact. When I showed the letter to my husband he snapped.' ஜெர்மனியில், ஆணுறைகளைத் திருடி தன் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு பெண்ணை பெற்றோர்களே கௌரவக் கொலை செய்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அஷத்துல்லா கான், இவரது மனைவி ஷாசியா. இவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் வசிக்கிறார். லரீப் ( வயது 19 ) மற்றும் நாடியா இருவரும் பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். இதில், கானின் மகள் லரீப் ஒரு முஸ்லீம் இளைஞருடன் பழகி வந்தார். அது அவரின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் சொத்துக்களை முடக்க திட்டம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கடத்தல், கொலை, வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக யுவராஜ் தலைமறைவாக உள்ளார்.  இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஓமலூரில் உள்ள அவரது பெற்றோர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சமணர் படுக்கைகள் கண்டுபிடிப்பு! ஆரணி அடுத்த நாசாமலையில்....பாதுகாக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நாசாமலையில் சமணர் படுக்கைகள் இருப்பதை ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.யூ.வனம் அருகே உள்ள நாசா மலையைச் சுற்றிப்பார்க்க சேவூர் கிராமத்தில் வசிக்கும் ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது குகைக்குள் இரண்டு சமணர் படுக்கைகள் மற்றும் துறவிகள் மருத்துவம் பார்த்ததற்கு அடையாளமான குழிகள் இருப் பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் அப்பாசாமி தலைமையில் கிராம மக்கள் சிலர் நேரில் சென்று பார்த்து புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.
இது குறித்து அப்பாசாமி கூறும் போது, “நாசா மலையில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் குகை உள்ளது. அந்த குகைக்குள் 2 சமணர் படுக்கைகள் உள்ளன. மூலிகைத் தழைகளை உரலில் இடித்து மருந்து தயாரித்து வைத்தியம் பார்த்ததற்கான சான்றாக குழி உள்ளது.

மோடியை அமெரிக்காவில் காய்ச்சி எடுத்த ...ModiFail campaign...வெளிவராத செய்திகள்

Modi fail (1)

சிலிக்கான் வேலியில் மோடி கிளப்பும் விளம்பரப் புழுதி, நாளிதழ்களை கறையாக்கி வருகிறது. கறையும், புழுதியும் நல்லதல்ல என்றாலும் மோடி ஆண்டையின் காலில் விழுந்து கிடக்கும் ஊடகங்கள் சலிக்காமல் பஜனையை கிளப்பி வருகிறார்கள்.
Modi fail (6)Modi fail (3)மோடியை புகைப்படம் பிடிப்பதிலிருந்து, ஆட்களை அழைத்து வருவது, உள்ளூர் சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரமுகர்களை காட்டுவது, வசனங்களை தயாரிப்பது, ஊடகங்களில் மானே தேனே போட்டு எழுதிக் கொடுப்பவது வரை பெரும்படையே அங்கும் இங்கும் வேலை செய்கிறது. ஆனாலும் ஒரு குற்றவாளியை இப்படி வாஷிங்டன் சென்ட் போட்டு மறைக்க முடியுமா?
ஆர்.எஸ்.எஸ், மோடி, பா.ஜ.க வகையறாக்களை ஆதரிக்கும் என்.ஆர்.ஐக்களைப் போலவே எதிர்க்கும் மக்களும் அங்கிருக்கிறார்கள்.

20 ஆயிரம் பெண்களுக்கு Free அம்மா கைபேசி! மகளிர் சுயஉதவி குழு .....

தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மகளிர் சுயஉதவி குழுக்கள் மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும், அதன்மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுயஉதவி குழுக்களை எனது தலைமையிலான அரசு 1991–ம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005–ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தையும் தொடங்கிவைத்தது. அதன் பயனாக, மகளிர் சுயஉதவி குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

மிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரி மனு: விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு

மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வி.ராதாகிருஷ்ணன் என்பவர் மதரீதியான பண்டிகைகளில் மிருகங்களை பலியிடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று வரையறுக்கும் மிருகவதை தடை சட்டத்தின் பிரிவு 28-ஐ நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மிருகவதை தடை சட்டத்திலேயே மதரீதியான காரணங்களுக்காக மிருகங்கள் பலியிடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமான விஷயங்களுக்கு எதிராக கோர்ட்டு செயல்பட முடியாது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் இடையில் சமன்பாடு இருக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். maalaimalar.com

வடிவேலு : அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை

எலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், ‘’ நடிகர் வடிவேலு, ஜனவரி 6ல், என்னை சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது நான், எலி படத்தில் நடிக்கிறேன். அதன் தயாரிப்பாளர் ராம்குமாரிடம் செலவு செய்ய பணம் இல்லை. இந்த படம் ரிலீசாகவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 'அதனால், ராம்குமார் இதுவரை செலவு செய்த, 90 லட்சம் ரூபாயில், 15 லட்சம் ரூபாயை நீங்கள் கொடுத்து விடுங்கள். மீதி தொகையான, 75 லட்சம் ரூபாயை நான் தந்து விடுகிறேன். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விடுவார். பின் நீங்களே இந்த படத்திற்கு தயாரிப்பாளராகி விடுங்கள்' என, கெஞ்சினார்.

எனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் காதலில்லை : மாளவியா மறுப்பு.


போலீஸ் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசாரே, விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கு உயரதிகாரிகள் கொடுத்து வந்த நெருக்குதல் காரணமல்ல, அவரது தற்கொலையில் காதலும் உள்ளது என்ற கோணத்தில் கொண்டு செல்கின்றனர்.முதலில் பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவருடன் விஷ்ணுபிரியா அதிக நேரம் செல்போனில் பேசியுள்ளார் என்ற விவரத்தை கசியவிட்ட போலீசார், இப்போது, மதுரை உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞரின் உதவி வழக்குரைஞரான எம்.மாளவியா என்பவருடன் விஷ்ணுபிரியா பல மணி நேரம் செல்போனில் பேசியுள்ளார்.  இவருக்குமிடையில் காதல் இருந்துள்ளது. இந்த காதல் கை கூடாமல் போனதால் தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்ற கோணத்தில் கொண்டுபோவது தெரிகிறது.

திங்கள், 28 செப்டம்பர், 2015

தமிழிசைத் தளபதி ஆர்.கே.சண்முகம்! கோயம்புத்தூரில் 17.10.1892 ஆம் நாள்...

rkshanmugamதொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே, தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என முத்தமிழாகத் தழைத்துச் செழித்து விளங்கியது. ஆனால், “தமிழ் மொழி இசைக்கு உரியதில்லை, தெலுங்கிலும், வடமொழியிலும் உள்ள இசைநயம் தமிழுக்கு இல்லை; சங்கீதம் நாதவித்தை; அங்கே மொழிப் பிரச்சனையைப் புகுத்தக் கூடாது; தமிழில் பாடினால் இசை நயம் குன்றிப் போகும்; கர்நாடக சங்கீதத்தின் புனிதம் கெட்டுவிடும்; தமிழில் உயர்ந்த பாடல்களும் இல்லை” என்றெல்லாம் ஒரு கூட்டம் கூச்சலிட்டது. தமிழ் நாட்டில் பிறந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள்தான் இத்தகைய கூச்சலை கூச்சமின்றி கூறித் திரிந்தனர். இச்சூழலில் தமிழுணர்வு கொண்ட தமிழர்கள் குமுறி எழுந்தனர்.
“சங்க காலத்திலும், சமய இலக்கியத்திலும் வளமும் நலமும் ஊட்டிய தமிழிசைக்கு எதிர்ப்பா? வேற்றுமொழிப் பாடல்களைத் தமிழ் மக்களிடையே, தமிழ் நாட்டிலேயே, பாடுகிற அவலம் பரவி வருவதை வேருடன் நீக்கியாக வேண்டும்” எனத் தமிழ்ச் சான்றோர், ‘தமிழிசைச் சங்க’த்தை 1940 ஆம் ஆண்டு தோற்றுவித்தனர். தமிழிசைச் சங்கத்தின் இரு கண்களாக செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரும், டாக்டர் ஆர்.கே.சண்முகமும் விளங்கினர்.

சென்னையில் வைகோ உட்பட 1,000 பேர் கைது!

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் வைகோ. செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் வைகோ. இலங்கை தமிழர் விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையே போதும் என கூறும் அமெரிக்காவைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

மழைநீரை அப்படியே உறிஞ்சும் பிளாஸ்டிக் சாலை. நெதர்லாந்தில்...

ஆம்ஸ்டர்டாம்: மழை நீரை முழுவதும் உறிஞ்சி நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலான புதிய பிளாஸ்டிக் கலந்த கான்கிரீட் சாலைகளை அமைத்துள்ளது நெதர்லாந்து நிறுவனம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் தான் இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதன் மூலம், நிலத்தடி நீரை உயர்த்தும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை ரோட்டர்டம் பெற்றுள்ளது. இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகளில் எண்ணிலடங்கா நுண்ணிய துளைகள் அமைந்துள்ளன. இதன் மூலம் சாலையில் நீர் தேங்காமல், அனைத்தும் விரைவாக பூமிக்கடியில் சென்று விடும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்? தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம்! நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம்! என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .  ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை....
கூட்டத்தில் தெறித்த பொறிகள்!
  • சென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து திருச்சியில் புதிய போராட்டக்குழு உதயம்! 

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா! ஏன் அத்தனை விசில் பறக்கிறது. எதற்காகக் கைதட்டுகிறார்கள்?வெளியில் வரட்டும்..

nisaptham.com  உள்ளுக்குள் இருக்கும் கச்சடாக்களை பரிமாறிக் கொள்ள மனம் எத்தனித்துக் கொண்டேயிருக்கிறது. பதாகைகளிலும் விளம்பரத் தட்டிகளிலும் காத்ரீனா கைப்புகளும், பிரியங்கா சோப்ராக்களும் தூண்டிவிடும் பாலியல் உணர்வுகளை எல்லாம் யாரிடமாவது காட்டிவிட முடியாதா என்கிற ஏக்கம் சகல இடங்களிலும் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய எத்தனிப்புகள் அத்தனையும் வெற்றியில் முடிவதில்லை. பாலியல் எத்தனிப்புகளில் கிடைக்கும் தோல்வி உண்டாக்கக் கூடிய விளைவுதான் பாலியல் வறட்சி என்பது. அத்தகைய பாலியல் வறட்சியின் நீட்சியாகத்தான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களைப் பார்க்க வேண்டும். 
:த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்த்துவிட்டேன். சமூக சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் இன்னபிற போராளிகளும் கழுவி ஊற்றி கொழுவில் ஏற்றும் ஒரு படத்தை பார்த்துவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது இயற்கைதானே? அமெரிக்காவுக்கு கிளம்பும் போதே இரண்டு இணையதளங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். einthusan மற்றும் tamilgun. முதல் தளத்தை மேலாளர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதே வேறு மேலாளராக இருந்தால் ஸ்டேட்டஸ் அனுப்பச் சொல்லி சாகடித்திருப்பார்கள். நல்ல மனுஷன் அவர். இரண்டாவது தளத்தை செந்தில் அறிமுகப்படுத்தினார். இவர் கரூர்காரர். டென்வரில்தான் கடந்த ஐந்தாறு வருடங்களாக இருக்கிறார்.

keralagov.in இணையத்தளம் பாகிஸ்தானிய ஹக்கர்களால் முடக்கப்பட்டது

பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசு இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர். நேற்று இரவு பாக்கிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் 'www.keralagov.in' என்ற கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் முக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. வருங்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பாடு வருகிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.மாலைமலர்.com

விஷ்ணுப்பிரியா யுவராஜ் ஆடியோ! உங்களால நான் கஷ்டப்படுறேன்.. விஷ்ணுப்பிரியா.

நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவிற்கும், தனக்குமான தொலைபேசி உரையாடல் ஆடியோவை வெளியிட்டுள்ளார் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 அந்த ஆடியோவில் தனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் இடையே நடந்த உரையாடலையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் யுவராஜ். அதில், மிகவும் கேஷூவலாக
, ‘ஹலோ குட்மார்னிங் நல்லாயிருக்கீங்களா?' என தன் பேச்சை ஆரம்பிக்கிறார் யுவராஜ்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கூகுளுடன் இணைந்து 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் மோடி தகவல்

சிலிக்கான்வேலி: அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவன சி.இ.ஓக்கள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். மோடி பேசியதாவது: பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைதான் இப்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றிவிட்டன. இந்தியாவின் குக்கிராமங்களிலுள்ள பெண்கள் சிறந்த மருத்துவ சேவையையும், விவசாயிகள் நல்ல மார்க்கெட் ரேட்டையும் இணையம் மூலம் அறிந்துகொள்கிறார்கள்.  பெண் குழந்தைகளை காப்பாற்ற அரியானாவில் தந்தை-மகள் இணைந்து ஸ்மார்ட்போனில் எடுத்த செல்ஃபி உலக இயக்கமாக மாறியது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் (ஐடி நிறுவன ஜாம்பவான்கள்) செய்யும் பணி.

ஐந்து லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்பேண்ட் வசதி: மைக்ரோசாப்ட் புதிய திட்டம்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்குள்ள சான் ஜோஸ் நகரில் தகவல் தொழில்நுட்பத்துறை பிரபலங்கள் இன்று விருந்து அளித்து கவுரவித்தனர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் முன்முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள 5 லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்பேண்ட் வசதியை செய்துதர மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியாவில் உள்ள அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்க முடியும். தங்களது தாயாரிப்புகளையும், விளைப்பொருட்களையும் விரைவாகவும், லாபகரமாகவும் சந்தைப்படுத்த முடியும். மேலும், பல சேவைகளை அவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறே பெற முடியும் எனவும் சத்யா நாதெள்ளா நம்பிக்கை தெரிவித்தார் மாலைமலர்.com

சென்னை: மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி

பெரம்பூரில் பெற்றோருடன் சென்ற சிறுவன் அஜய் (வயது 5) மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்தான். பெரம்பூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சுற்றி அறுத்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாஞ்சா நூல் தயாரிப்போர் மீதும், அதனை விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு இதனை செவிக்கொடுத்து கேட்காததால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

இந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழகம் இரண்டாவது இடம். விஜயகாந்த்!

மதுவிலக்கு குறித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பேச்சை கண்டித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் மதுக்கடைகளையும், அதன் வேலை நேரத்தையும் படிப்படியாக குறைத்திடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் 25.09.2015 அன்று மதுவிலக்கு துறையின் மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக அரசு வெளியிடுமென தமிழகமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எல்லாவற்றிலும் ஏமாற்றுவதைப் போலவே, இதிலும் அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது. மதுவிலக்கிற்காக உயிரை இழந்த சசிபெருமாளின் குடும்பத்திற்கு கூட எவ்வித நிவாரணமும் வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆஸ்கர் தெரிவுக்கு காக்கா முட்டையை அனுப்பாதது ஏன்? அவன் அப்படித்தாய்ன் ...ஹிந்திக்காரந்தாய்ன்.

ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட், காக்கா முட்டை இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று ஒன்றரை நாள் விவாதித்தோம் என தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. மத்திய அரசின் விருதுகள்  எல்லாமே  வெறும் கேலி கூத்தாகும்,  வெறும் ஹிந்தி  மொழி பிரசார வசனங்களை சேர்த்ததால் மிகவும்  குஷியாகிப்போன  ஹிந்தி  வெறியர்கள்  சம்சாரம்  ஒரு மின்சாரத்திற்கு  கொடுத்தார்கள்.

தி.மு.க வுடன் கூட்டணி சேர ராகுல் தடை!


சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தடை விதித்து விட்டதால், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், அவரது கோஷ்டியினரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், இளங்கோவன் மீதான கோபம் காரணமாக, தமிழக மாவட்ட காங்கிரசாரை சந்தித்து, கூட்டணி குறித்து கருத்து கேட்கும் பணியை, மேலிட பிரதிநிதி சென்னா ரெட்டியிடம், ராகுல் ஒப்படைத்து விட்டார்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதற்கு, இளங்கோவன் பாலமாக இருந்தார். அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு எதிராக, கவர்னரிடம் புகார்; மது ஒழிப்பு போராட்டம் என, தி.மு.க.,வை திருப்திபடுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக, 'கருணாநிதி வழிகாட்டுதல் படி செயல்படும் கட்சியாக, காங்கிரசை மாற்றி விட்டார்' என, ராகுலிடம், எதிர் கோஷ்டிகள் புகார் செய்தன.சமீபத்தில், சென்னையில் நடந்த மோடி - ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக, இளங்கோவன் செய்த விமர்சனம், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த ராகுல்தம்பி காங்கிரசை ஒரு வழிப்பண்ணாம ஓயா மாட்டாரு. போயும் போயும் இத்த நம்பி ஒரு கட்சி......

மலையகத்தில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலி! இலங்கையின் ரம்பொடவில் தமிழ்.....


இலங்கையின் மலையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண் சரிவில்
சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ரம்போட மண் சரிவில் 5000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. நுவரெலியா மாவட்டம் ரம்பொட பகுதியில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களும் அடங்குவர். மண்சரிவு காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தற்போது அந்த பகுதியிலுள்ள அரசாங்க பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் சில குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளன.