சென்னையில் நடிகர் விஜய்க்கு
சொந்தமான நீலாங்கரை வீடு மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை மேற்கொண்டனர். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே உள்ள இயக்குநர் சிம்புதேவன் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த புலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பல கோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருப்பதாக சொல்லப்படும் மதுரை பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை கீழத்துரையில் உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் வீடு சாலிகிராமம் தேவராஜ நகரிலும், அவரது அலுவலகம் வளசரவாக்கத்திலும் உள்ளது. அந்த இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. புலி படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் சென்னை அலுவலத்திலும் சோதனை நடைபெற்றது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சொந்தமான நீலாங்கரை வீடு மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை மேற்கொண்டனர். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே உள்ள இயக்குநர் சிம்புதேவன் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த புலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பல கோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருப்பதாக சொல்லப்படும் மதுரை பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை கீழத்துரையில் உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் வீடு சாலிகிராமம் தேவராஜ நகரிலும், அவரது அலுவலகம் வளசரவாக்கத்திலும் உள்ளது. அந்த இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. புலி படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் சென்னை அலுவலத்திலும் சோதனை நடைபெற்றது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.











