திங்கள், 31 ஆகஸ்ட், 2026

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய பணி

May be an image of dais, temple and text
May be an image of text that says "இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு"

 ராதா மனோகர் : வெட்கம் இல்லை வெட்கம் இல்லை இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய  பணி சிறப்பானது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அவரின் அரசியல் வாழ்வில் உருப்படியான ஒரே ஒரு விடயமும் அதுதான்.
அந்த ஒப்பந்தம் உருவாவில் அவர் ஆற்றிய பணியையும் அதில் உள்ள சாதகமான விடயங்களை பற்றியும் விரிவாக ஒரு நூலை திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார் 
புலிகள் அந்த ஒப்பந்தத்தை மூர்க்கமாக எதிர்த்து அதில் பங்காற்றியவர்களை எல்லாம் தேடி தேடி கொன்றொழித்தார்கள் 
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அந்த நூலை தேடி தேடி தீயிட்டு கொளுத்தினார்கள் 
எந்த தமிழக இலங்கை பத்திரிகையிலும் அமிர்தலிங்கம் அவர்கள் இது பற்றி எழுதியது எதுவும் பிரசுரமாகவில்லை.
இந்த சூழ்நிலையில் அந்த ஒப்பந்தம் பற்றியும் அது உருவான புறசூழல் அகச்சூழல் பற்றி அறிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

சிறுமியரை வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை தந்த தொழிலதிபர் வீரமணி :

 dinamalar.com  : சென்னை: வீட்டு வேலைக்கு என, சிறுமியரை சென்னைக்கு அழைத்து வந்து, தொழில் வர்த்தகர் வீரமணி, 85, பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கிரானைட் தொழில் வர்த்தகர் வீரமணி. இவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 
அவரது வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: