வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மேட்ரிமோனியால் விளம்பரம் மூலம் சுமார் 50 தமிழ் பெண்கள்… நாசம் செய்த பெங்களூர் வாலிபர்..!

tamil.samayam.com : சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள கானத்தூர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தனது மகளுக்கு மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர்.
அப்போது சூர்யா (28) என்ற இளைஞர் இளம்பெண்ணின் விவரத்தை வைத்து செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பெண்ணின் தாயாரிடம் பேசிய சூர்யா, உங்களது மகளின் போட்டோவை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நான் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறேன். எனது பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பிசினஸ் செய்து வருகின்றனர் என கட்டுக்கதைகளை கட்டியுள்ளார்.
வாலிபரின் பேச்சை நம்பிய இப்பெண்ணின் தாய், மகளுக்கு புளியங்கொம்பாய் வரன் வந்துவிட்டதாக நினைத்துள்ளார்.
மேலும், பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதால் நான் மட்டும் முதலில் பெண் பார்க்க வீட்டிற்கு வருகிறேன் என கூறியுள்ளார் சூர்யா.

அதன்படி கடந்த ஜூன் 28ம் பெண் பார்க்க வீட்டிற்கு சென்ற சூர்யாவை அனைவருக்கும் பிடித்து போகவே, அடுத்து திருமணத்தை நடத்திவிடலாம் என்ற ஆசையில் இருந்துள்ளனர்.

இதற்கிடையில் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட சூர்யா வாழைப்பழ வார்த்தைகளை பேசி பெண்ணிடம் ஆசையை வளர்த்துள்ளார்.

இந்நிலையில், வருங்கால கணவன் என்ற கனவில் சூர்யாவின் காதல் வலையில் இளம்பெண் சிக்கவே, கதையை முடிவுக்கு கொன்டு வர நினைத்த சூர்யா அந்த பெண்ணை டேட்டிங்கு அழைத்துள்ளார்.

பின்னர் விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில் அந்த பெண்ணுடன் சூர்யா உல்லாசமாக இருந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையில் நிலம் வாங்குவதாக கூறி பெண் வீட்டாரிடம் ரூ.7 லட்சத்தை சூர்யா அபகரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், டேட்டிங் நடந்த நாளிலிருந்து சூர்யாவின் செல்போன் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தால் ஏமார்ந்துவிட்டோம் என்று அதிர்ச்சியடைந்த இளம்பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சூர்யாவின் செல்போன் மூலம் அவரை கோவையில் உள்ள விடுதியில் வேறொரு பெண்ணுடன் தங்கியிருந்த போது கைது செய்தனர்.

பின்னர் அவரை கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, புகார் கொடுத்த பெண் மட்டுமில்லாமல் சுமார் 50 பெண்களை இதுவரை சூர்யா மேட்ரிமோனியல் மூலம் பழகி ஏமாற்றியது தெரிய வந்தது.

மேலும், ஒவ்வொரு பெண்ணுடனும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்துக்கொண்டு தன்னை பற்றி புகார் கொடுத்தால் வீடியோக்களை லீக் செய்து விடுவேன் என்றும் இவர் மிரட்டியுள்ளார்.

வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் பெங்களூருவில் உள்ள சூர்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், சூர்யாவால் ஏமாற்றப்பட்ட 50 பெண்களும் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதுவரை இவர் மீது 7 காவல் நிலையங்களில் புகார் உள்ள நிலையில், மற்றவர்கள் மானம் போய்விடுமோ என்று பயந்து புகார் தெரிவிக்காமல் உள்ளனர்

கருத்துகள் இல்லை: