செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நகைக்கடன் தள்ளுபடி! ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி!

 Mariathangaraj Jeyapal | Samayam Tamil :  அதிமுக கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதி நிலைமையை காரணம் காட்டி திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போய்விடுமோ என எதிர்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினே இதற்கு பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3ஆவது நாள் அமர்வு நேற்று காலை தொடங்கியது. 2021 - 2022ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவற்றின் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர், ஆர்.பி. உதயகுமார் விவாதத்தைத் தொடங்கினார்.


 “நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைப் பார்த்தோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்யும் போது, குட்டி பூனையைத் தாய்ப் பூனையைக் கவ்வுவது போல் இருக்கவேண்டும். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை பூனை எலியைக் கவ்வுவது போல் இருக்கிறது.

கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: ஆகஸ்ட் 25 வரை இதுதான் நிலைமை!

எனக்குப் பொருளாதாரம் தெரியாது. ஆனால் மக்களின் பசியும் ஏழ்மையும் பற்றி தெரியும். அதிமுக ஆட்சியில் 715 திட்டங்களில் 537 திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி நிலையைக் காரணம் காட்டி வாக்குறுதிகளைக் கைவிட்டு விட வேண்டாம். இனியாவது வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுமா” என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது!

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் வாக்குறுதியிலிருந்து நாங்கள் பின் வாங்கியதாகப் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.100 நாட்கள் நிகழ்வுகளை எல்லாம் நாங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம்.



“நீங்கள் கேட்கலாம், விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்வோம்; நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே! அதற்கெல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லியிருக்கின்றீர்களே! என்ற அந்த அடிப்படையிலே உறுப்பினர் திரு. உதயகுமார் அவர்கள் இங்கே பேசியிருக்கலாம்.

உறுதியாகச் சொல்கிறேன். வெள்ளை அறிக்கையிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையிலேகூட, மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அந்த நகைக்கடன் வழங்க வேண்டுமென்று நாங்கள் கருதினாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன.

விவசாயிகளுடைய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அதிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அதையெல்லாம் முறையாக சரிசெய்து, அதற்குப் பிறகு நிச்சயமாக அது வழங்கப்படும் என்ற உறுதிமொழியைச் சொல்லியிருக்கிறோம்” என்று கூறினார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்: இனி நிவாரண நிதி கிடையாது!

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக போராட்டம் நடத்தியதோடு சமூக வலைதளங்கள் முதல் சட்ட சபை வரை அதை பேசிவருவதால் ஸ்டாலின் அந்த கட்சி பக்கம் திரும்பினார்.

“உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை. நாட்டு மக்களும் மறக்கவில்லை. அவற்றில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள். பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள்; தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய் என்று சொன்னீர்கள்; கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்று சொன்னீர்களே? யாருக்காவது கொடுத்திருக்கிறீர்களா? குறைந்த விலையிலே, அவசியமான மளிகைப் பொருட்கள் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அது கொடுக்கப்பட்டதா?

அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்று உறுதி கொடுத்தீர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அதைக் கொடுத்தீர்களா? பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என்றீர்கள், அதை அமைத்திருக்கிறீர்களா? அனைத்துப் பழங்களுக்குமான சிறப்பு அங்காடிகளை உருவாக்குவோம், கட்டித் தருவோம் என்று சொன்னீர்கள். எங்கேயாவது கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா?

அனைத்துப் பொது இடங்களிலும் wi-fi வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னீர்கள், அப்படி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிற இடத்தை எங்கேயாவது காட்டுங்கள். டாக்டர் அம்பேத்கர் பவுன்டேஷன் அமைக்கப்படும் என்று சொன்னீர்கள்.
அதை அமைத்தீர்களா? பட்டு-ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அதை எங்கேயாவது உருவாக்கியிருக்கிறீர்களா? சென்னையிலே மோனோ-இரயில் விடப்படும் என்று சொன்னீர்கள். அதற்குப்பிறகு தலைவர் கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ இரயில் திட்டத்தைத்தான் நிறைவேற்றினீர்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கின்றது.


விவசாயிகளுடைய பயிர்க் கடனைப் பொறுத்தவரையில், அதேபோன்று நகைக்கடனைப் பொறுத்தவரையில், எங்கெங்கு முறைகேடு நடந்திருக்கிறது, எங்கெங்கு தவறுகள் நடந்திருக்கின்றன என்பது குறித்து மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள், தன்னுடைய துறை மானியக் கோரிக்கை விவாத்திற்குப் பதிலளித்துப் பேசுகிறபோது, நிச்சயமாக அவை குறித்து ஆதாரப்பூர்வமாக உங்களிடத்திலே எடுத்துச் சொல்வார் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் காரசாரமாக பேசினார்.

கருத்துகள் இல்லை: