சனி, 19 ஜூன், 2021

ஆகமம் சாஸ்திரம் வேதம் எல்லாம் எங்கே போயின? திருட்டு சாமியார்களுக்கு பூஜை புனஸ்காரம் ...

May be an image of 1 person and standing

Swaminathan V Vaithilingam  :   எதற்கெடுத்தாலும் எல்லாம் ஆகம விதிகள் படிதான்  நடக்கனும், தர்ம சாஸ்திரத்தை மீறக் கூடாது என்றெல்லாம் புலம்பும் வைதீக பெருமக்கள்,  எந்த சாஸ்த்திரம் படி மனிதனுக்கு ஆராதனை செய்கிறார்கள்.
எந்த மனிதனும்  தெய்வமாக முடியாது.
தெய்வமும் மனித பிறவி எடுக்க முடியாது என்பதே உண்மை.
எவராவது தன்னை தெய்வப் பிறவி என்று சொல்லிக் கொண்டால் அவரது நோக்கம் மக்களை ஏமாற்றுவது தான் என்பதை உணர்ந்து ஆரம்பத்திலேயே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் போன்ற ஏமாற்றுக் காரர்களை வளர விட்டு பல காலம் கழித்து நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை.
பிரேமானந்தா, நித்தியானந்தா, கல்கி சாமியார் போன்றவர்கள் ஏமாற்றி சொத்து குவித்தார்கள் என்று தெரிந்த பிறகும் மக்கள் இவர்களை நம்பி மோசம் போவது வேதனையான செய்தி.
இது போன்ற கயவர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து மக்களை மாயையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும்

1 கருத்து:

Unknown சொன்னது…

People also follows without judging