புதன், 17 மார்ச், 2021

கள்ளகுறிச்சி 8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்

maalaimalar : உறவினர் வீட்டில் தங்கி இருந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள் திருநாவலூர்: கள்ளகுறிச்சி மாவட்டம் திருநாவலூர் அடுத்த ஒரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியின் பெற்றோர் சென்னையில் வசித்து வருகின்றனர். மாணவி அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தார். அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் இந்த மாணவியுடன் பேசி பழகி வந்தார். சம்பவத்தன்று அவரது உறவினர் வீட்டில் மாணவி தனியாக இருந்தார்.
இதை நோட்டமிட்ட 10-ம் வகுப்பு மாணவர் அந்த வீட்டுக்குச் சென்றார். வீட்டில் இருந்த மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்தார். இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என அந்த மாணவியை மிரட்டி சென்றார். மாணவியிடம் உல்லாசம் அனுபவித்ததை அந்த மாணவர் அவருடன் படிக்கும் நண்பர்கள் 2 பேரிடம் கூறினார்.



இதையடுத்து அவர்கள் 2 பேரும் அந்த மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க திட்டமிட்டனர். அவர்கள் அந்த மாணவியிடம் சென்று நீ அந்த மாணவனுடன் உல்லாசமாக இருந்த வீடியோ எங்களிடம் உள்ளது. எங்களை அனுசரித்து செல்லாவிட்டால் அந்த வீடியோவை உனது பெற்றோரின் செல்போனுக்கு அனுப்பி விடுவோம் என கூறி மிரட்டினர். இதைக் கேட்டு பயந்து போன மாணவி நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது இந்த மாணவர்கள் 2 பேரும் சென்று மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்தனர். மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது மாணவர்கள் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்று வருவதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். இதை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓவிட்டனர்.

உடனே அவர்கள் வீட்டிற்குள் சென்று மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த துயரத்தை கூறி கதறி அழுதார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் உறவினர் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த மற்றொரு மாணவர் அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 மாணவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

உறவினர் வீட்டில் தங்கி இருந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: