சனி, 28 நவம்பர், 2020

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல ! அது சாதாரணக் coding 'கோடு வேர்ட்'தான்..

செல்லபுரம் ள்ளியம்மா  : சமஸ்கிருதம் மொழியே அல்ல ! -

சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல!      அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று  .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!     ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்: 

 இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து.,  

‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள்,
ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் ,
ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! . பேசப்படவி.ல்லை.............யென்றால்...  “First, solve the problem. Then, write the code..
அது ‘குறியீடு' எனப்படும் . 
எந்த இயல்பான மொழியும்  பேச்சில் முதலில் தொடங்கி பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .
சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும் பேசப்பட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை .
 
இந்தியாவின் தற்போதைய பிராமணர் ஜனத்தொகை சுமார் 5%என்று சொல்லப்படுகிறது.
இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம் ..
இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால்,
அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கவேண்டும் .
அப்படியென்றால் ,  ஏன் தற்போது ஒரு 10 லட்சம் மக்கள் கூட சமஸ்கிருதம் பேசுவதில்லை?  .
ஒருக்கால்.. பேசிக்கொண்டிருந்த மொழி அழிந்து விட்டது என்று சொன்னால் ,
பேசிக் கொண்டிருக்கும் எந்த மொழியும் நேராக அழிவதில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொள்வோம் .
 
முதலில் அதைப் பேசும் மக்கள் அழிய வேண்டும் .
அப்போதுதான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும் .
எடுத்துக்காட்டாக  பிரேசிலில் ‘வாரிக்கென’ என்ற மொழி. இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள் .
 
இந்த 20 பேரின் காலத்திற்குப் பிறகு , அது அழிந்து போகும்.
 
சமஸ்கிருதம் இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை ,என்பதை இந்த விளிம்பு நிலை மொழிப் பட்டியல் உறுதி செய்கிறது .
 
ஏனென்றால். சமஸ்கிருதம் எப்போதுமே பேசப்பட்டதே. இல்லை.
 
சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி....என்று சொல்லப்படுவதால் ,
அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால் , அதைப் பேசியவர்கள் ஒரு போதும் அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .
 
வீட்டிலாவது.பேசிக்கொண்டிருப்பார்கள் .
எந்த மொழியும் , ஆண் ,பெண்  இருவரும் பேச உரிமை. உள்ளதாகத்தான் இருக்கும்
ஆனால் ,சமஸ்கிருதம் பேச பெண்களுக்க தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே .
ஆக , பெண்களிடம் பேச முடியாத , பெண்களே பேச முடியாத  ஒன்று பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து .
 
இவையெல்லாம் கணக்கில் கொண்டால் சமஸ்கிருதம்  என்பதே பேசப்படாத மொழி என்பது தெளிவாகிறது .
பேசப்படாதது எக்காலத்திலும் மொழி ஆகாது .
ஆனால் எழுதப்படாதது மொழி ஆகலாம் .
பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும் எழுத்துகள் இன்றி உள்ளன .
 
மூன்றாவதாக மொழி என்றால் அது ‘தாய் பேசும் மொழியாகக் கட்டாயம் இருக்கவேண்டும் .
அதனால்தான் ‘தாய் மொழி என அழைக்கப்படுகிறது .
இந்து மத விதிகளின் படி ‘பெண்கள்’, அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் சொல்ல அனுமதி இல்லை .
 
ஆக ,சமஸ்கிருதம் ‘தாய்  மொழி’யாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இவர்கள்.
 
ஆக சமஸ்கிருதம் என்பது ஒரு இயல்பு மொழி அல்ல .
 
அப்படியென்றால் அதுதான் என்ன ?
சமஸ்கிருதம் என்பது உண்மையில்  ஒரு இரகசியக் குறியீடு மொழி தான்!
குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசிய குறியீட்டு மொழி அது .
அடுத்தது பேசப்படாத மொழி ,
 
பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக முடியுமா? என்ற கேள்வி எழுகிறது .
பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை .
ஏனென்றால் பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான்  பேசப்படாத ஒரு மொழி சொற்களைப் பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி .?
 
முடியாது என்பது தெளிவு!
பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும் என்பது தெளிவ!
பேச்சு வழியாகத் தோன்றிய சொற்கள் தான்!
பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை!
சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் சமஸ்கிருத சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது!
சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் சமஸ்கிருதச் சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள்தான் உருவாக்கியிருக்க முடியும் என்பது தெளிவு!
 
ஆக  தமிழைத் தாய்மொழியாக பாவிக்கும் தமிழ் பிராமணர்களே.!
 
சமஸ்கிருத சொற்களைத் தமிழிலிருந்து உருவாக்கியிருக்கக் கூடும்!
மேற்கூறிய காரணங்களால்   சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாகச் சொல்லப்படுவது  உண்மையல்ல என்பது தெளிவாகிறத!
 
மொழியியலாளர்கள் இந்தக் கருத்துகளை ஹார்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்குச் சமர்ப்பிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது!
 
இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

கருத்துகள் இல்லை: