வெள்ளி, 4 செப்டம்பர், 2020

திராவிடத் தலைவர்கள் இந்து கடவுள்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை...

 பாலகணேசன் அருணாசலம்
: · ஏன் அறிவுள்ள திராவிடத் தலைவர்கள் இந்து கடவுள்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை... ஆதிகாலத்தில் தமிழர் களுக்கு (2000 ஆண்டுகள் முன்பு) கடவுள் வழிபாடு கிடையாது...3500 வருடங்களுக்கு முன்பு தமிழர்களின் நாகரீக நகரமான மதுரை யில் (தற்போது கீழடியில் அகழ்வாராய் ச்சி கள் நடந்து வருகிறது) கடவுள்/ஆலய வழிபாட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.அதன் காரணமாகவே அங்கு நடந்துகொண்டிருக்கும் அகழ்வா ராய் ச்சிகளுக்கு மத்திய காவி மதவாத அரசு பல இடையூறுகளை செய்து கொண்டிருக்கின்றது நம் கிராமங்களில் கீற்றுக் கொட்டகை மற்றும் ஓடுகளால் வேயப்பட்ட கட்டிடங் களில் அங்காளம்மன் முனியப்பன் பெயர்களில் கோவில் இருப்பதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால் அந்த கோயில்களில் உள்ள கடவுள்கள் கடவுள்கள் கிடை யாது...அவர்கள் அந்த அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் நாட்டாமை போன்று மக்களால் தங்களு க்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல உருவாக்கப்பட்ட ஆளுமைகளா கும்..அப்படிப்பட்ட நல்லவர்களின் செயல் களை காலம் உள்ளவரை நிணைத்துக் கொண்டிருக்க வேண்டியதற்காக அவர்களுக்கு கோயில் கட்டப்பட்டது...

அவர்களுக்கு எந்த தேதியில் பிறந்த நாள் என்பது நமக்கு தெரியாது.ஏனெ ன்றால் அதை அடிப்படையாக வைத்து யாருக்கும் வியாபாரம் செய்யும் நோக்கம் இல்லை என்பதால்....காலமாற்றத்தில் பிகாரில் பிறந்த புத்தரின் அகிம்சை போதனைகளால் கவரப்பட்ட மக்கள் முனியப்பன் அங்காளம்மன் வழியில் சிலைகளை வைத்து வணங்க ஆரம்பித் தார்கள்...

இடையில் 2000 வருடம் முன்பு மத்திய ஆசியாவிலிருந்து கிருஸ்த்தவ கடவுள் ஏய்ப்புவியாபார தந்திரங்களை தெரிந்து கொண்டு இந்திய நிலப்பரப்புக்கு ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வெள்ளைத்தோல் ஆரியர்கள் இங்குள்ள மக்களிடம் ஆளுமையை செலுத்தி தாங் கள் உழைக்காமல் பிழைக்க தேர்ந்தெ டுத்த வழி கடவுள் வியாபாரமாகும்...

முன்பே இங்கு புத்தர் முனியப்பன் அங்காளம்மன் என்று நேர்மையான அறிவுக்குப் பொருத்தமான வழிபாடு முறைகள் இருந்ததால் அதை அவர்கள் தந்திரங்களால்(என்ன தந்திரம் என்றால் அதில் பல ஆபாசவிபச்சாரங்கள் சொல் லவேண்டி வரும்,அது நமக்கு வேண்டாம்) இங்குள்ள அரசர்களை வேதம் மந்திரம் கட்டுக்கதைகளைச் சொல்லி அவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு கோயில்க ளை கட்டினார்கள்...அதன் கட்டு மானத் துக்கு உழைத்தவர்களும் இங்குள்ள பூர்வகுடிகளே...ஆரிய கடவுள்களுக்கு பிறந்த நாள் திருமணநாள் போன்றவை கள் கடவுள் வியாபாரம் செய்யும் பாப்பா ன்களின் பொய்ப்புரட்டு என்பதை இதை விட தெளிவாக சொல்ல தேவையில்லை

ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் குடி யேறிய காலகட்டத்தில் அவர்களின் சூழ்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் சமணர்கள்...அந்த சமணர்களைத்தான் ஆரியர்கள் கழுவேற்றம் செய்து கொலை செய்திருக்கிறார்கள்.இப்போதும் காந்தி, கல்புர்கி கௌரிலங்கேஷ் ,டாக்டர் நரேந் திர தபோல்கர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவ ரான கோவிந்த் பன்சாரே போன்ற RSS ஆரிய சித்தாந்த அடிப்படைவாதிகளை எதிர்ப்பவர்கள் கொலைச்சம்பவம்(1992ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் அவர்கள் செய்த பணிக்காக 27 பத்திரிகை யாளர் கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரி வித்திருக்கிறது.)அதைத்தானே உறுதிபடுத் துகிறது...ஆகையால்தான் கலைஞர் போன்ற திராவிட தலைவர்கள் பொய்ப்புரட்டு மூடநம்பிக்கை பண்டி கைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று அறிக... மீள்

 

கருத்துகள் இல்லை: