புதன், 2 செப்டம்பர், 2020

18 வயதுக்கு குறைந்தவர்களை மீன்பிடிக்க பயன் படுத்தினால் தண்டிக்கப் படுவீர்கள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும் எச்சரிக்கை!

 ஐ பி சி : சர்வதேச சட்டம் மற்றும் இலங்கை செயல்பாட்டுச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  பணிபுரிய அனுமதி இல்லை. ஆகவே 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே  மீன்பிடிக்கு  பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கடுமையாக தெரிவித்தார்

 இதேவேளை அவர்களை முறையான கல்விக்கு வழிநடத்துவது கட்டாயமாகும் என்றார். நீங்கள் ஒரு மீனவராக இருந்தால், சிறுவர்களை உதவியாளராகவோ அல்லது வேலைவாய்ப்பாகவோ எடுத்துக் கொள்வதால், அவர்களின் கல்வி சீர்குலைவு மற்றும் அவர்கள் மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற பல சமூக பிரச்சினைகளை உண்டாக்கும்.   மேலும் நீங்களும் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றார். ஒவ்வொரு மீன்பிடி பயணத்திலும் உங்கள் உதவியாளரின் சேவைகளைப் பெறும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது மீன்வள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம். 

கூறப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாத நிலையில், மூன்று மாதங்களுக்குள் பெறப்பட்ட புகைப்படத்துடன் ஒரு கடிதத்தை தயாரிப்பது கட்டாயமாகும். அந்த நபரின் அடையாளத்தை அவரது வசிப்பிடத்தின் கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டும். என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். IBCTamil  

கருத்துகள் இல்லை: