வியாழன், 27 பிப்ரவரி, 2020

காட்டு விலங்குகளை உண்பதற்கும் விற்பனைக்கும் சீனாவில் முற்றாகத் தடை



வீரகேசரி :கொவிட் 19 வைஸ் சீனாவில் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் வனவிலங்குகளின் வர்த்தகம் மற்றும் நுகர்வை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்தது,
ஆரம்ப கொரோனா நோய்த்தொற்றுகள் ஹூபேயின் மாகாண தலைநகர் வுஹானில் உள்ள ஒரு வனவிலங்கு சந்தையில் இறைச்சிகளை கொள்வனவு செய்த நபர்களிடமிருந்து கண்டறியப்பட்டதையடுத்து குறித்த சந்தை முற்றாக மூடப்பட்டதுடன்,
வனவிலங்கு விற்பனையும் நாடளாவிய ரீதியில் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் “கொவிட்19 வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் கிட்டத்தட்ட 2,700 பேர் வரை உயிரிழந்துள்னர். உலகில் இதாலி, ஈரான், தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான முக்கியமான தருணத்தில், சீனா அரசு உள்ளதால், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசு வனவிலங்குகள் நுகர்வை முற்றாக தடை செய்ய தீர்மானித்துள்ளது.


இதன் படி, வனவிலங்குகளின் சட்டவிரோத நுகர்வு மற்றும் வர்த்தகம்,  நுகர்வு நோக்கத்திற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, வர்த்தகம் செய்வது அல்லது கொண்டு செல்வது உள்ளிட்ட செயற்பாடுகள் "கடுமையாக தண்டிக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விஞ்ஞான ஆராய்ச்சி, மருத்துவ பயன்பாடு மற்றும் காட்சிபடுத்தல் உள்ளிட்ட நுகர்வு அல்லாத நோக்கங்களுக்காக காட்டு விலங்குகளை பயன்படுத்தும் போது, அவ் விலங்குகள்  கடுமையான பரிசோதனை, மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வுக்குட்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: