செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

டெல்லி கலவரம் .. ஆர் எஸ் எஸ்இன் அடியாட்களாக செயல்படுவது அடித்தட்டு கூலி தொழிலாளர்களே?


Karuna Kumuthan : இதுவரை வெளிவந்த எல்லா வீடியோக்களையும் பார்த்தீர்களா?
வன்முறையில் ஈடுபடும் கும்லில் ஒருத்தன் தவறாமல் எல்லாரும் சூத்திரப்பசங்க தான். அதுவும் அடித்தட்டு ஏழை சூத்திரனுங்க தான்.
ஒரு மிஸ்ரா, திரிவேதி, சதுர்வேதி, முகர்ஜி, பேனர்ஜி என்றிருக்க வாய்ப்பே இல்லை.
குறிப்பா அந்த மினார் மீது சரசரவென எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி, விழுந்துவிடுவோம் என்ற பயமே இல்லாமல் ஒரு கையால் அதிலிருக்கும் ஸ்பீக்கரை அவிழ்த்து சுழற்றி வீசி எறிய சூத்திரப்பசங்களால் மட்டுமே முடியும்.
அந்த சூத்திரப்பய ஏதாவது கட்டிட வேலை செய்பவனாகவாே, கூலி வேலை செய்பவனாகவாே மட்டுமே இருக்க முடியும். நிச்சயமாக பெரும்பான்மை தமிழ்நாட்டு சூத்திரனைப் போல அவன் ஒரு பொறியாளனாகவாே, கணினி வேலைகள் செய்பவனாகவாே, டாக்டராகவாே, வக்கீலாகவாே இருக்க வாய்ப்புகளே இல்லை.
இருந்திருந்தால் அவனும் என்னை மாதிரி ஏணி மீது ஏறுவதற்கு கூட, ஏணியை பிடிப்பதற்கு ஒரு ஆள் துணையில்லாமல் முயற்சிக்காதவனாகவே இருந்திருப்பான்.

சூத்திரனுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது இப்போதாவது புரிகிறதா?
சூத்திரன் படித்தால் குடும்பம் வருமானம் காப்பந்து என்று சிந்திக்க தொடங்கிவிடுவான். அப்படி அவன் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று சிந்திக்க தொடங்கிவிட்டால் இந்த வன்முறைகளை யாரை வைத்துக்கொண்டு கட்டவிழ்ப்பது? வேத நாகரீக வழி வந்த இந்து மதத்தை எப்படி காப்பாற்றுவது?
ஆக...இனி தமிழ்நாடு வாழ் சூத்திரப்பசங்களும் கல்வி கற்பதை நிறுத்திவிட்டு இந்து மதத்தை காப்பாற்றும் புனித வேலையில் இறங்குவதற்கு தயாராவீர்!
Karuna Kumuthan

கருத்துகள் இல்லை: