சனி, 29 பிப்ரவரி, 2020

ஈரானில் கொரோனா வைரஸ் 210 பேர் உயிரிழப்பு? மேலும் அதிகரிக்க கூடும்


மாலைமலர் :தெஹ்ரான்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூவயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 26 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 210  ஆக உயர்ந்திருந்தது. மேலும், அந்நாட்டு துணை சுகாதார மந்திரி இராஜு, துணை அதிபர் மசூமே எப்டகர் ஆகியோருக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுதால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: