
ஆனால் திமுகவில் இருக்கும் சீனியர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இல்லாமல், வருகிற சட்ட மன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளதாக தகவல் வெளிவருகிறது.
அதோடு வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமை நினைத்து வருவதாக சொல்கின்றனர். இந்த முறை சட்டமன்ற தேர்தலின் போது குற்றப்பின்னணி இல்லாதவர்களுக்கு அதிகளவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமை நினைப்பதால் பிரசாந்த் கிஷோர் டீம் தொகுதி வாரியாக களத்தில் ஆய்வு நடத்தி வருவதாகவும் சொல்கின்றனர்.
இதுமட்டும்மில்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆரம்பித்து புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்ய வாய்ப்பு இருப்பதால் அதனை சமாளிக்க திமுக வலுவான கூட்டணியோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று திமுக சீனியர்களும் கூட்டணி கட்சிகளும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால் 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்ற பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை திமுக தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் சொல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக