வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு ;வீட்டிற்குள் முடங்கும் மக்கள்

தினத்தந்தி : மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி
மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு ;வீட்டிற்குள் முடங்கும் இந்தியர்கள்வருகிறது.இதனால் அங்குள்ள இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். பாக்தாத்< மத்திய கிழக்கு நாடுகளில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவியது. அங்கு ஜனவரி 29-ஆம் தேதி  நான்கு பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது. இவர்கள் நான்கு பேரும் சீனாவின் வுகான் நகரத்தில் இருந்து வந்தவர்கள். அதன்பின் சில நாட்களில் அங்கு புதிதாக 9 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு தொடங்கியது. அதேபோல் எகிப்தில் அதற்கு மறுநாளே ஒரு நபருக்கு இந்த வைரஸ் தாக்கியது. ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லெபனானில் இதேபோல் பிப்ரவரி 21 ஆம் தேதி இந்த வைரஸ் தாக்கியது. ஈரானில் இருந்து இந்த வைரஸ் அங்கு பரவியது. பின் பிப்ரவரி 24-ஆம் தேதி குவைத்தில் வைரஸ் பரவியது. அதே நாள் அடுத்தடுத்து பஹ்ரைன், ஈராக், ஓமான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது.

மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 9 நாடுகள் உள்ளது. இவை எல்லாம் எண்ணெய் வள நாடுகள். இந்த 9 நாடுகளில் மொத்தம் 7 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. முக்கியமாக லெபனான், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்தாரில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கத்தாரில் நிறைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கத்தார் கொஞ்சம், கொஞ்சமாக அண்டை நாடுகளுக்கு விமான போக்குவரத்தை நிறுத்தி வருகிறது. முக்கியமாக ஈரானுக்கு விமான போக்குவரத்தை 5 மத்திய கிழக்கு நாடுகள் இதுவரை நிறுத்தி உள்ளது.

அதேபோல் ஈராக் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்குமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. வெளியே மக்கள் கூடுவதற்கும் தடை விதித்துள்ளது. ஈரானில் உள்நாட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர் .மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

அதிலும் தமிழர்கள், கேரள மாநிலத்தை சேர்ந்த  பலர் இங்கு இருக்கிறார்கள்.இவர்கள் யாரும் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று செய்தி வெளியாகவில்லை. ஆனால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால், பல லட்சம் இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அங்கிருக்கும் தமிழர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: