வெள்ளி, 8 நவம்பர், 2019

மதுரை கண் தெரியாத பிச்சைக்காரர்கள்! .... நான் கடவுள் படத்தில் வரும் கொடூரம் தினந்தோறும் நடக்கிறது

Mahalaxmi : மதுரை காளவாசல் சிக்னலில்…
நான் கடவுள் படத்தில் வரும் கொடூரம் தினந்தோறும் நடக்கிறது .
காளவாசல் சிக்னலில் சமீபகாலமாக நான்கு சாலைகளிலும் கண் தெரியாதவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். கண் தெரியாதவருக்கு உதவியாக கூடவே இன்னொருவருடன் இருக்கிறார். தினந்தோறும் இவர்களில் கண்தெரியாத வரும் உதவியாளரும் வேறுவேறு சிக்னலுக்கு மாற்றப்படுகின்றனர்.
காலையில் ஜெயராம் பேக்கரி சிக்னலில் பிச்சை எடுக்கும் அந்த இருவர்கள் மாலையில் எதிர்ப்புற சிக்னலில் நின்று பிச்சை எடுக்கின்றனர்.
என்னுடைய கேள்வி….
1. கண்ணில்லாத இவர்களின் உரிமையாளன் எவன்?
2. இவர்களின் இவர்களை பிச்சை எடுக்க வைத்து சம்பாதித்து உடம்பை வளர்க்கும் கொடூர கும்பல் எங்கே உள்ளது?
3.கண்ணில்லாதவர்களை மட்டும் எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?
4.இவர்கள் மனித உரிமை எங்கே ?
5.வயிற்றுப் பிழைப்பிற்காக 10 மணிநேரம் நடுரோட்டில் வெயிலில் இவர்கள் காய்வது ஒரு பத்திரிக்கையாளர் , காவல் அதிகாரிகள், மனித நல அதிகாரிகள் கண்ணில் கூட படாதது எப்படி?

6. கண்ணில்லாத ஒருவரை பிச்சை எடுக்க வைக்க துணைக்கு அனைத்து புலன்களும் வேலை செய்யும் இன்னொருவர் கூடவே இருக்கிறார். அப்படி என்றால் இந்த உதவியாளரின் உதவியுடன் கண் இல்லாதவருக்கு கற்றுக்கொடுக்க வேறு தொழிலே இல்லையா?
மனித நல அமைப்பினரின் கவனத்திற்கு இத்தகவல் செல்லும் வரை அனைவருக்கும் அனுப்பிக் கொண்டே இருப்போம்..

Gopinath : இதேபோல் சமீபத்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சில சிறுவர்கள் பிச்சை எடுத்து கொண்டு இருந்தார்கள்... நானும் என்னால் முடிந்ததை அவர்களுக்கு கொடுத்தேன்... நான் திண்டுக்கல் செல்ல இருந்த பேருந்து புறப்பட பத்து நிமிடங்கள் ஆனது. . அவர்களை கவனித்து கொண்டே இருந்தேன்... பிறகு ஒருவன் பைக்கில் வந்தான் வந்தவன் அந்த சிறுவர்களிடம் இருந்த காசுகளை வாங்கி கொண்டு சென்று விட்டான்.. பிறகு தான் அருகில் இருந்த கடைக்காரரிடம் கேட்டேன்.. இதுதான் இவர்களின் தொழில் என்று சொன்னார்.. அதிர்ந்து போனேன்...

கருத்துகள் இல்லை: