வெள்ளி, 8 நவம்பர், 2019

பணமதிப்பு இழப்பு "இன்றோடு" 1095வது நாள்...... மோடி : 50 நாட்களுக்குள் நான் தவறென்றால் என்னை கொழுத்துங்கள்

பணமதிப்பு இழப்பை வரவேற்ற ரஜினி 
பணமதிப்பு இழப்பை வரவேற்றவர்கள்
Natarajan Kandasamy :  · மறக்க முடியவில்லை இந்த கருப்பு நாளை?? நூற்றுக்கணக்கான மக்கள் ATM வாசலிலும் மருத்துவமனையிலும் பணம் இல்லாமல் மரணம் அடைய காரணமான நாள் மறக்க முடியுமா இந்த நாளை ??? ஒவ்வொரு நாளும் வேலை வெட்டிக்கு செல்லாமல் பேங் வாசலில் கால்கடுக்க நின்ற நாட்களை
இம்மூன்று வருடங்களில் எந்த வெற்றியும் இல்லாமல், ஆனால் எல்லா
தோல்விகளையும், பொருளாதார வீழ்ச்சியையும், சமூக சீரழிவையும்,
சாமான்யர்களின் சரிவையும் உண்டாக்கியதை தவிர செல்லாக்காசு திட்டம் சாதித்து என்ன? ஒரு தோல்வியை மறைக்க ஓராயிரம் பொய்களையும், போலி புள்ளிவிவரங்களையும், ஊடக அடிமைகளையும் உருவாக்கியது தான் பிரதமர் மோடியின் சாதனை. குடிமக்களை கொன்று விட்டு, சுடுகாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தியாகம் செய்யுங்கள் என்று சொன்ன அபத்த
திருநாள்!
இன்று சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட போதும், பிஎஸ்என்எல் நட்டம் ஆன போதும் எல்லாத்தையும் மடைமாற்றம் செய்து வள்ளுவர், பஞ்சமி என இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லிக் கொண்டு இருப்பது பெரிய சாதனை அல்லவா?
நேத்திக்கி ஒரே நாளில் cognizant 12000 பேரை தூக்கிடுச்சி .. 60 லட்சம் பேருக்கு வேலை போச்சி 3 வருஷசத்திலே ..  இதே 3 வருஷசத்திலே கள்ளநோட்டு 2000 ரூ மட்டும் இல்ல , 500 நோட்லையும் கீதுபா.. ஆனா 11000 மடங்கு அமித்ஷா மகன் வருமானம் 3 வருஷத்திலே உயர்ந்து போச்சிபா.. பட் பாருப்பா .. 2019 தீபாவளி சேல்ஸ் எல்லாம் கூட படுத்து போச்சாம் .. வியாபாரிகள் எல்லாம் புலம்புறாங்கோ .. 3 வருஷம் போச்சே .. புதுசா பொறந்த இந்தியா தயவு செய்ஞ்சு கண்ணில காட்டுப்பா .. பொருளாதார சீர்குலைவுநாள்
PS: பகிராதீர்கள். காப்பி + பேஸ்ட் இந்த ஹாஷ்டேக்குகளோடு போடுங்கள்.
By Narain Rajagopalan

கருத்துகள் இல்லை: