சனி, 9 நவம்பர், 2019

அயோத்தி தீர்ப்பு .. எந்த இஸ்லாமிய நாடும் கண்டிக்க வில்லையே ...?

தமிழ் மறவன் : இதோ, முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதே! எந்த இசுலாமிய நாடு கண்டித்தது?
எந்த இசுலாமிய நாடு குரல் கொடுத்தது?
குஜராத் முசுலீம்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடுதான் அரபுதேச மன்னர்கள் மகிழ்வோடு மோடியிடம் கை குலுக்கினார்கள்.
உலகெங்கும் அடிப்படைவாத சிந்தனையை வளர்க்கும் அரேபிய ஷேக்குகள், இசுலாமிய மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை.
அம்மக்களின் வாழ்வியலைப் பற்றி சிந்திப்பதில்லை.
தமிழக முஸ்லீம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தால்தான் கூலி கொடுப்பான் அரேபிய ஷேக்கு..!
ஏனெனில், அவர்களுக்கு மதம் என்பது ஓர் பொருட்டே அல்ல,
மதம் ஓர் வர்க்க அரசியலின் கூறுதான்...
இங்கே, பீடி சுற்றுகிற பாய் தன் மத நம்பிக்கையை ஷேக் உடையில் காட்டிக் கொண்டிருப்பதில் என்ன பயன்?
இம்மண்ணின் பண்பாட்டிலிருந்தும், பொது நீரோட்டத்திலிருந்தும் விலகி நிற்பதால் யாருக்கு இலாபம்?
இங்கே உங்களை வைத்து அரசியல் செய்யும் அடிப்படைவாத அமைப்புகளுக்கே இலாபம்.
அந்த அமைப்புகள் ஓர் கட்டத்தில் பார்ப்பனீயத்தோடு கூட மத நல்லினக்கம் என கூட்டு சேர்த்துக் கொள்ளும்.
ஆனால், திராவிடக் கோட்பாட்டையும், பெரியாரியலையும் ஒருக்காலும் ஏற்காது..,
அவர்கள் யாருக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்பதுதான் இங்கே நுணுக்கமான அரசியல்.

இசுலாமிய அரசியலமைப்புகளில் கூட பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உரிமைகளுக்காக குரலெழுப்புங்கள்.
ஆனால்..,
அடிப்படைவாதமோ,
தவ்ஹீதோ,
தப்லீக்கோ,
மார்க்க வழிமுறை என்றழைக்கிற மோசடியாளர்களை முற்றிலுமாய் புறந்தள்ளுங்கள்.
மதங்களை புறக்கணியுங்கள்.
ஆழமாக சிந்தியுங்கள்..
உண்மை தெளிவாக புரியும்.
ஓடோடி வருவார்கள்..,
அநீதியை பார்த்தீர்களா? என பொங்கியெழுவார்கள்.
இழைக்கப்பட்ட அநீதியைக் காட்டி, உங்கள் உள்ளக் கொதிப்பை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைபவர்களை புறக்கணியுங்கள்.
மதங்கள் ஒழிந்த கூட்டுச் சமூகமே நம் வலிமை!
எந்தக்கடவுளும் நமக்காக வராது!
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை: