சனி, 17 ஆகஸ்ட், 2019

செஞ்சிகொட்டை .. இருளர் குடும்பங்கள் .எந்த அடையாளங்களும் அற்று ... ஆதார் , ஜாதி சான்றிதழ் ,வோட்டர் ஐ டி ..ஒன்றுமே இல்லை ...

Yuvan Swang : செஞ்சிக்கோட்டையை ஒட்டியவாறு பன்னிரெண்டு இருளர்
குடும்பங்கள்.. அவர்கள் இந்த உலகில் பிறந்து வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
ரேஷன் கார்ட் இல்லை, வோட்டர் ஐடி இல்லை,சாதிச்சான்றிதழ் இல்லை,ஆதார் அட்டை இல்லை, வீட்டுமனைப்பட்டா இல்லை,வீடு இல்லை.
பக்கத்தில் இருக்கும் வயலுக்கு சொந்தக்காரரின் கொட்டகையில் மழைக்காலத்தில் ஒதுங்கி வாழ்கிறார்கள்.
இங்கிருந்து ஒரு பிள்ளை கூட பள்ளிக்கூடம் செல்லவில்லை.
செஞ்சி நகரத்தின் எல்லையில் வசிக்கிறார்கள்,பக்கத்திலேயே பல பெரிய குடியிருப்புகள்.ஒருவருக்கும் இவர்கள் மீது அக்கறை எழவில்லையா என்பதை நினைக்கும் போது ஏமாற்றமாக இருந்தது...
நிலவுக்கு ராக்கெட் விட்ட தேசத்தில் இன்னமும் இப்படிப்பட்ட அவலநிலையில் வாழும் மனிதர்களா....நான் பார்த்த பழங்குடி இருளர் குடியிருப்புகளில் மிகவும் மோசமான ஒன்று இது.
இந்த இடத்தின் பெயர் என்ன என்று கேட்டேன்...பெயர் சொல்ல தெரியவில்லை...முகவரி இல்லா மனிதர்களுக்கு கடிதமா வரப் போகிறது முகவரி இருக்க....

அங்கிருந்து கனத்த மனதுடன் வீட்டிற்கு பயணித்து வருகையில் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன்...இவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்...இம்மக்களுக்காக களத்தில் நிற்பவர்கள் உதவியுடன் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று உறுதி ஏற்றிருக்கிறேன்...

கருத்துகள் இல்லை: