திங்கள், 12 ஆகஸ்ட், 2019

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் 28-ந்தேதி லண்டன் செல்கிறார்

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் 28-ந்தேதி லண்டன் செல்கிறார்தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13 நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28-ந்தேதி லண்டன் செல்கிறார். சென்னை, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் வர உள்ளதாகவும், 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வெளிநாடுகளில் உள்ள வேளாண் தொழில்நுட்பங்களை பற்றி அறிந்துகொள்வதற்காகவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13 நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

லண்டன் பயணம்

அதன்படி வருகிற 28-ந்தேதி சென்னையில் இருந்து துபாய் மார்க்கமாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் செல்கிறார். 29-ந்தேதி லண்டனில் சுகாதார துறை சம்பந்தமான முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார். 30-ந்தேதி கிளாஸ்கோவில் எரிசக்தி துறை முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார். செப்டம்பர் 1-ந்தேதியன்று லண்டனில் இருந்து எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றடைகிறார்.

அங்கிருந்து அமெரிக்காவின் 2-வது பெரிய நகரமான பப்பலோ செல்கிறார். அங்கு கால்நடை தொழில் அபிவிருத்தி தொடர்பாக கருத்துகளை கேட்டறிகிறார். 3-ந்தேதி பப்பலோவில் இருந்து மீண்டும் நியூயார்க் சென்றடைகிறார். அங்கு அமெரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இரவு 7.30 மணிக்கு ‘யாதும் ஊரே’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்த தமிழக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

தமிழக தொழில்முனைவோர்கள்

நியூயார்க்கில் இருந்து 4-ந்தேதி புறப்பட்டு, சான்

கருத்துகள் இல்லை: