மின்னம்பலம் :தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி நேற்று (பிப்ரவரி 5) ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதல் தோல்வி ஜான்சியின் தற்கொலைக்குக் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. சூர்யா என்பவரோடு ஆறு மாதங்களுக்கு மேலாக ஜான்சி பழகிவந்துள்ளார். அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது காதலர் சூர்யா தற்போது தலைமறைவாகியுள்ளார்.
ஆந்திராவின், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள வடலி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜான்சி சமீபத்தில் நிறைவுபெற்ற பவித்ரா பந்தம் என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக