வியாழன், 7 பிப்ரவரி, 2019

ராமலிங்கம் கொலை ... தொழில் போட்டி ... இஸ்லாமியர் மீது பழி போட திட்டமிட்டு .. சங்கிகள்?. திருபுவனத்தில் கடையடைப்பு


பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருபுவனத்தில் கடையடைப்பு
திருபுவனம்: திருபுவனத்தில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கத்தை கொன்றவரை கண்டுபிடிக்கக்கோரி மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராமலிங்கம் கொலை செய்யப்பட்டத்தை கண்டித்து திருபுவனத்தில் கடை அடைப்பு நடந்து வருகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமலிங்கத்தின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திருபுவனத்தில் பதற்றம் நிலவுவதால் ராமலிங்கம் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Divan Ismail  : எங்கு இந்து துவ தீவிரவாதிகளும், RSS பயங்கர வாதிகளும் கொல்லப்பட்டாலும் அதற்கு முஸ்லீம்கள் காரணமல்ல என்று இஸ்லாமிய இயங்கங்கள் பொறுப்பல்ல என்று நிரூபிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

இந்து முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்
லிம்கள் காரணமா அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?
கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?

1) நாகப்பட்டிணம் புகழேந்தி கொலை - 05.07.2012
கொலையாளி: முனீஸ்வரன்
காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து

2) பரமக்குடி முருகன் கொலை - 19.03.2013
கொலையாளிகள்: ராஜபாண்டி & மனோகரன்
காரணம்: நில தகராறு

3) சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் கொலை - 05.07.2014
கொலையாளி: அவரின் முதல் மனைவி அய்யம்மாள்
காரணம்: இரட்டை திருமணம்

4) கோயம்பேடு விட்டல் கொலை 27.4.2012
கொலையாளிகள்: சுந்தரபாண்டியன், முருகன், கங்காதரன்
காரணம்: கந்து வட்டி கேட்டு தொல்லை, அபாச பேச்சு.

5) ராமேஸ்வரம் குட்டநம்பு கொலை 07.07.2013
கொலையாளிகள்: ராமச்சந்திரன் உட்பட ஆறு பேர்
காரணம்: குடிபோதையில் தகராறு செய்ததால் மக்களிடம் கல்லால் அடிபட்டு மரணம்.

6) தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு 24.01.2007
குண்டு வைத்தவர்: ஆர் எஸ் எஸ் ரவிபாண்டியன்
காரணம்: தன் அண்ணன் குமார் பாண்டியன் மரணத்தால் எந்த கலவரமும் ஏற்படவில்லை எனும் அதிருப்தியில். ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுத்த.

7) வேலூர் பாஜக மருத்துவரணி செயளாலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை - 23.10.2012
கொளையாளிகள் (உதயா, சந்திரன், ராஜா, தரணி)
காரண்ம்: கள்ளத் தொடர்பு

8) ஆடிட்டர் ரமேஷ் கொலை - 19.07.2013
கொளையாளி: இன்னும் பிடிபடவில்லை
காரணம்: கள்ளத் தொடர்பு
பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொல்லப் பட்டார்,
முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார்
(கட்டிய மனைவி நன்றாக திடமாக இருக்கும்பொழுது,
இரு பெண்களும் ரமேஷ் மீது உள்ள மரியாதையால்தான் தற்கொலை/இறந்தார்கள் என்று நம்புவோமாக).

9, சசிகுமார் கொலை 22;8;2016 இந்து முன்னணியின் கோவை மாவட்ட நிர்வாகி
கொலையாளி ; இந்து முன்னனி நிர்வாகி ஆனந்த் படுகொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் காரணம்; கள்ளக்காதலால் கொல்லப்பட்டார்

7 & 8 கொலையாளிகள் யார் என்று தெரிந்திருந்தும் இந்துத்வவாதிகளை திருப்தி படுத்துவதற்காக சில முஸ்லிம்களையும் கைது செய்து இன்று வரை போதிய ஆதாரமின்றி விசாரணைக் கைதிகளாகவே தொடர்கின்றனர்.

அது ஏன் எல்லா டிரௌசரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு படுகொலை செய்யப் படுகின்றனர்?
எல்லோருமே அப்படியா?

கருத்துகள் இல்லை: