
தினமலர்:ஜெய்ப்பூர்
: ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி
குஜ்ஜார் இன மக்கள் ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தும், ரயில்களை மறித்தும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு ரயில் சேவை கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு
கோரி குஜ்ஜார் இன மக்கள் இன்றும் (பிப்.,09) தங்களின் போராட்டத்தை
தொடர்ந்து வருகின்றனர். தண்டவாளங்களில் அமர்ந்து நகர மறுத்ததால் டில்லி,
மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகின. ஒரு ரயில்
ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில்
திருப்பி விடப்பட்டன. சில ரயில்களின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.

குஜ்ஜார்
இனத் தலைவர் கிரோரி சிங் பைன்சலா தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தின்
காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அமைதி காக்க
வேண்டும் என்று கோரியுள்ள குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் , மாநில அரசு
பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசத் தயார் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் கூறுகையில், எங்களுக்கு நல்ல முதல்வர், நல்ல பிரதமர்
கிடைத்துள்ளனர். குஜ்ஜார் இன மக்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்று
தான் நாங்கள் விரும்புகிறோம். இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை தவிர
பெரிதாக நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக